Skip to main content

நிறைய தொல்லை கொடுப்பார்! தேர்தல் முடியும்வரை சசிகலா வெளியே வரக் கூடாது!!! -மோடியிடம் இபிஎஸ் வைத்த புதிய கோரிக்கை!!!

Published on 16/10/2020 | Edited on 16/10/2020
admk

 

தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் அடுத்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடக்க உள்ளது. அதற்கான தேர்தல் அட்டவணை பிப்ரவரி மாதத்தில் வெளியாகிறது. தேர்தலுக் கான ஏற்பாடுகளை தலைமைத் தேர்தல் ஆணையம் செய்யத் தொடங்கிவிட்டது. இந்த சூழ்நிலையில் ஜனவரி மாதம் சசிகலா வெளியே வந்தால் எங்களுக்கு நிறைய தொல்லை கொடுப்பார். அதனால் இந்த தேர்தல் முடியும் வரை சசிகலா வெளியே வரக் கூடாது. அதற்காக அவர் மேல் புதிய வழக்குகள் போட்டு, தேர்தல் முடியும் வரை சிறைக்கம்பிக்குள்ளே வைத்திருக்க வேண்டும்'' என புதிய கோரிக்கையை எடப்பாடி மத்திய பா.ஜ.க. அரசுக்கு தெரிவித்துள்ளார்.

 

எடப்பாடி முதலமைச்சர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டவுடன் சசிகலா பினாமியாக இருந்த ரூபாய் 2000 கோடி சொத்துக்கள் முடக்கப் பட்டன. அதற்கான நோட்டீஸ்களை வருமான வரித்துறை அனுப்பியது. அதில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோ ரது பெயர்களுடன் தீபா, தீபக் ஆகியோரது பெயர்களும் இடம் பெற்றது பலரையும் ஆச்சரியப்படுத்தியது.

 

சிறுதாவூர் பங்களாவில் அந்த நோட்டீஸின் ஒரு காப்பி ஒட்டப்பட்டது. அதில், தீபா மற்றும் தீபக் பெயர் இடம்பெற்றது ஏன் என வழக்கறிஞர்கள் கேள்வி எழுப்பினார்கள். இந்த சொத்துக்கள் எல்லாவற்றிலும் ஜெயலலிதா பங்குதாரராக இருக்கிறார். அதனால் அவரது வாரிசுகளான தீபாவுக்கும், தீபக்குக்கும் நோட்டீஸ் அனுப்பினோம் என விளக்கம் அளித்தது வருமான வரித்துறை.

 

சிறுதாவூர் பங்களா, 1991ஆம் ஆண்டு பரணி பீச் ரிசார்ட் பிரைவேட் லிமிடெட் என்கிற பெயரில் சசிகலா மற்றும் அவர் களது உறவினர்களால் வாங்கப்பட்டது. 115 ஏக்கர் பரப்புள்ள அந்த பங்க ளாவில் ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் தங்குவார்கள். அதேபோல் 906 ஏக்கர் பரப்பளவு உள்ள கொடநாடு எஸ்டேட்டை 1994ஆம் ஆண்டு பீட்டர் ஜோன்ஸ் என்கிற இங்கிலாந்து நாட் டைச் சேர்ந்தவ ரிடம் இருந்து சசிகலா மற்றும் ஜெயலலிதா வாங்கினர். 1991ல் இருந்து 1996 வரை எந்த தொழிலும் வருமானமும் இல்லாத சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பல்வேறு சொத்துக்களை வாங்கினார்கள். இவையெல்லாம் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்து ஊழல் செய்து சம்பாதித்து கொடுத்தப் பணம் என ஜான்மைக்கேல் டிகுன்கா வருமானத்துக்கு அதிக மாக சொத்து சேர்ப்பு வழக்கில் தீர்ப்பளித்தார்.

 

அவரது தீர்ப்பை உச்சநீதிமன்றம் அப்படியே ஏற்றுக்கொண்டது. ஜான்மைக்கேல் டிகுன்கா போயஸ் கார்டன், சிறுதாவூர், கொடநாடு உள்பட ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் வாங்கிய சொத்துக்களை அரசு பறிமுதல் செய்ய வேண்டும் என தீர்ப்பளித்தார். அதையும் சுப்ரீம் கோர்ட் ஏற்றுக்கொண்டது. இந்த சொத்துக்களை கையகப்படுத்தி அரசு சொத்தாக மாற்ற வேண்டிய வேலை தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை செய்ய வேண்டியது.

 

ஜான்மைக்கேல் டிகுன்காவின் கோர்ட்டில் மனு செய்து இந்த சொத்துக்களை ஒரே நாளில் அரசு சொத்துக்களாக மாற்றிவிட முடியும். அத்துடன் பெங்களூரு கோர்ட்டில் இருக்கும் ஜெயலலிதாவின் நகைகளை அரசு உடைமையாக கொண்டு வந்துவிட முடியும். இந்த வேலைகளை எடப்பாடி தலைமையிலான அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை செய்யவில்லை. ஆனால் மத்திய michaeldeஅரசின் வருமான வரித்துறை பினாமி ஒழிப்பு சட்டத்தின் 24/3 பிரிவின்படி ஏற்கனவே அரசுடைமையான சொத்துக்களை பறிமுதல் செய்கிறது.

 

இது வேடிக்கையிலும் விநோதமான வேடிக்கை என்கிறார்கள் சட்டத்துறை வல்லுநர்கள். ஜெயலலிதாவுடன் சேர்ந்து இந்த சொத்துக்களை வருமானத்துக்கு அதிகமாக சேர்த்தார் என தண்டனை பெற்று சிறையில் இருக்கும் சசிகலாவின் சொத்துக்களை மறுபடியும் பினாமி சட்டத்தில் வருமான வரித்துறை இணைப்பது ஏற்கனவே செத்துப்போன ஒருத்தனுக்கு மறுபடியும் தூக்குத்தண்டனை விதிப்பதாகும் என்கிறார்கள் சட்டவல்லுநர்கள்.

 

இதுபற்றி நம்மிடம் பேசும் சசிகலாவின் வழக்கறிஞர்கள், ""சட்டப்படி இப்படி செய்யவே முடியாது. எடப்பாடி முதல்வர் வேட்பாளர் என அறிவிக்கப்படும்போது, அந்த கட்சியின் பெரிய தலைவராக இருந்த ஜெயலலிதாவுக்கு சொந்தமான சொத்துக்களை அவரது வாரிசுகள் எனப்படும் தீபாவுக்கும், தீபக்குக்கும் நோட்டீஸ் அனுப்பி மத்திய அரசின் வருமான வரித்துறை பினாமி ஒழிப்பு சட்டத்தின் கீழ் கைப்பற்றியிருப்பது சட்டப்படி செல்லாது'' என்கிறார்கள்.

 

இதுபற்றி நம்மிடம் பேசும் சசிகலாவின் உறவினர்கள், ""இது எடப்பாடி திட்டமிட்டு செய்த சதிச்செயல். எடப்பாடிக்கு நெருக்கமான வருமான வரித்துறை அதிகாரிகளைவிட்டு அவர் முதல்வர் வேட்பாளர் என அறிவிக்கப்படும் தினத்தன்று சசிகலா மேல் மத்திய ஆளும் பாஜக அரசு கோபத்துடன் இருப்பதாக கட்சிக்காரர்களுக்கு காட்டுவதற்காக இந்த நாடகத்தை எடப்பாடி நடத்தியிருக்கிறார். சசிகலா உறவினர்கள்மீது கடந்த ஆண்டு வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது. அதில் சசிகலாவின் உறவினர்களான திவாகரன், தினகரன், விவேக், கிருஷ்ணப்பிரியா, புலவர் கலியபெருமாள், ராவணன் என 33 பேர் வீடுகளில் ரெய்டு நடத்தப் பட்டது. அந்த 33 பேர் மீதும் இதுவரை வருமான வரித்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்ப்பு வழக்கில் ஏற்கனவே நீதிமன்றத்தால் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் வருமான வரித்துறை நடவடிக்கை எடுக்கிறது. எடப்பாடி முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படும் 7ஆம் தேதியை இந்த நடவடிக்கை வரும் தேதியாக திட்டமிட்டு நாடகம் நடத்தியிருக்கிறார் எடப்பாடி.

இதற்கும் பாஜக அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இவையெல்லாம் எடப்பாடிக்கு நெருக்கமான எட்டு வருமான வரித்துறை அதிகாரிகள் செய்த வேலை. இந்த அறிவிப்பால் டென்ஷன் ஆன சசிகலா, ""அந்த 8 வருமான வரித்துறை அதிகாரிகள் சட்டவிரோத மாக ஏற்கனவே கோர்ட்டால் ஜெ. பெயரில் இருக்கிறது என கைப்பற்றப் பட்ட சொத்துக்களை எனது பினாமி சொத்துக்கள் என நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். ஜெ.வின் உடன் பிறவா சகோதரி சசிகலா, ஜெ.வுடன் சேர்ந்து சொத்து சேர்த்தார் என உலகத்திற்கே தெரியும். அதற்காக நான் கடந்த நான்கு ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகிறேன். எனவே எடப்பாடியின் பேச்சைக் கேட்டு தவறான நடவடிக்கையில் ஈடுபட்ட வருமான வரித்துறை அதிகாரிகளை தண்டிக்க வேண்டும்'' என சசிகலா பா.ஜ.க.வுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

அதேநேரம், மத்திய பா.ஜ.க. துணையில்லாமல் எடப்பாடி விருப்பப்படி எப்படி வருமான வரித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என்கிற அ.தி.மு.கவினரோ, சசிகலாவை தேர்தல் முடியும் வரை வெளியே விடக்கூடாது என மோடியிடம் எடப்பாடி கோரிக்கை வைத்துள்ளார் என்கிறார்கள்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.