Skip to main content

வெறுப்பும், நெருப்பும்! மு.தமிமுன் அன்சாரி MLA  கவிதை

Published on 12/04/2020 | Edited on 12/04/2020

 

mjk


 

இறைவா...
பூவுலகின் தலைவா...

விண்ணுக்கும், மண்ணுக்கும்
இடையில்,
கண்ணுக்கு தெரியாத
ஒரு கிரிமியோடு,
நாங்கள் 
மூன்றாவது உலகப் போரை
நடத்திக் கொண்டிருக்கிறோம் !


*
இது விசிறிக்கும்
வியர்க்கின்ற கோடை காலம்!
கூடவே
'கொரணா' காலம் !

*
அரசர்களுக்கும், அதிபர்களுக்கும்,
பிரதமர்களுக்கும் கலக்கம் !

வல்லரசுகளுக்கு நடுக்கம் !

சாதனைகள் எல்லாம்
சோதனைகளாக்கப்பட்டுள்ளன.

ஆட்டம் போட்டவர்கள்
எல்லாம் அடங்கி கிடக்கிறார்கள்

*
ஆனாலும்
என் தேசம் எனும் 
பூங்காவனத்தில்
அமைதி புறாக்கள்
சிறகொடிந்து கிடக்கின்றன.
 

கொத்துக் கொத்தாய்
மனித உயிர்கள்
மாண்டுப் போகும் நிலையிலும்
 

மதங்கொண்ட
யானைகள் மட்டும்
மோதிக் கொண்டிருக்கின்றன.
 

பிணம் திண்ணும்
கழுகுகள்
சுற்றிக் கொண்டிருக்கின்றன.


*
சிலர்
வெறுப்பை விழுங்கி
நெருப்பை கக்குகிறார்கள்.
 

இதயங்களை
கிழிக்கிறார்கள்.
 

உறவுகளை பிரிக்கிறார்கள்.
 

*
சங்கரின் அடையாளம்
சகிப்புத் தன்மை!

சலீமின் அடையாளம்
சமாதானம்!

சைமனின் அடையாளம்
மன்னிப்பு!


இப்போது 
சங்கரும், சலீமும், 
சைமனும் 
கைக்கோர்த்த வீதிகளில்
கருநாகங்கள்
படை எடுப்பது
பதை பதைக்கிறது!
 

*

இறைவா...
சமயங்களில்
நெறிகளை படைத்தாயே...
சில சமயங்களில்
இவர்கள்
வெறியோடு அலைவதை
தடுப்பாயா?
 

'கொரணா' காலத்திலும்
'கொரில்லா'க்களைப் போல
தாக்கிக் கொள்கிறார்களே..
இது நியாயம்தானா?
 

*
அவர்களை இவர்களும்
இவர்களை அவர்களும்
சுட்டிக்காட்டி
சண்டைகளை போடுகிறார்கள்

 

mjk

சமரசம் செய்பவர்களை
விரட்டுகிறார்கள்.
 

சமூகத்தின் 'கணையங்களாக'
இருக்க வேண்டிய
இணைய தளங்களில்
சமாதிகளை கட்டுகிறார்கள்.

பதிலுக்கு பதில்
பழி தீர்க்கிறார்கள்.

அமைதிக்கு வேட்டு!
நட்புக்கு பூட்டு?


இறைவா...

மனிதர்களுக்கு
பேசும் கிளிகளும்
கூவும் குயில்களும்
ஆடும் மயில்களும்
வாழும் 
நந்தவனங்களை 
காட்டு...
 


அன்பையும், 
சகிப்புத்தன்மையையும்
சிந்திக்கும்
சகோதரர்களை தா...
 

கண்ணீரை துடைத்து
கட்டியணைக்கும்
நண்பர்களை தா...

 

அமைதிப் பூக்களை
ஏந்தி வரும்
உறவுகளை தா...

மாசற்றுப் பழகும்
நியாயவான்களை தா...

*
இறைவா....


நல்லிணக்க நதியில்
நீந்த விரும்பும் என்னை
சுழற்சியின் சுழியில் சிக்கி
மூழ்கடித்து விடாதே...


*

மனப் புழுக்கத்தில்
உருளும் எனக்கு
ஆறுதலை தா...

*

 

இறைவா...
உன்னிடம் மன்றாடி
கேட்கிறேன்...
 

என் கனவுகளை
விழிகளிலேயே
சிறை வைத்து விடாதே...
 

இது என் நலத்துக்கான
பிரார்த்தனை அல்ல...
நான் வாழும் நிலத்துக்கான
பிரார்த்தனை!

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வருவது அவசியம்' - தமிமுன் அன்சாரி பேட்டி

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
'It is necessary for the India coalition to come to power' - Tamimun Ansari interview

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் தமிமுன் அன்சாரி திமுக கூட்டணிக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். முன்னதாக அவர் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில், இன்று அண்ணா அறிவாலயத்திற்கு வந்து முதல்வரை சந்தித்து விட்டு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தமிமுன் அன்சாரி பேசுகையில், ''இந்த தேர்தலை பொறுத்தவரை மனிதனை ஜனநாயக கட்சி வெறும் அரசியல் காளமாக இதனைப் பார்க்கவில்லை.

மாறாக ஜனநாயகத்திற்கும் பாசிசத்திற்கும் இடையேயுமான சித்தாந்த போராட்டமாக பார்க்கிறது. அந்த அடிப்படையில் இந்த முடிவை மனிதநேய ஜனநாயக கட்சி எடுத்திருக்கிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து எங்களுடைய ஆதரவை வழங்கி இருக்கிறோம். இந்தியாவுடைய ஜனநாயகம், பன்முக கலாச்சாரம், அரசியல் சாசன சட்டத்துடைய மாண்புகள், சமூக நல்லிணக்கம் ஆகியவை காப்பாற்றப்பட வேண்டும் என்றால் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வருவது அவசியமாகிறது' என்றார்.

Next Story

ம.ஜ.க.வின் தலைவராக தமிமுன் அன்சாரி பொறுப்பேற்பு

Published on 05/01/2024 | Edited on 05/01/2024
Tamimun Ansari took charge as the president of MJK

2015ம் ஆண்டு மனிதநேய ஜனநாயக கட்சி துவங்கப்பட்டு, அதன் பொதுச் செயலாளராக தமிமுன் அன்சாரி செயல்பட்டுவந்தார். கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது ம.ஜ.க. இதில், நாகப்பட்டினம் தொகுதியில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 

இந்நிலையில், நேற்று தஞ்சாவூரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சிறப்பு நிர்வாகக்குழுவின் கூட்டத்திற்கு பின்பு மாலையில், தலைமை நிர்வாகக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில், கட்சியின் பொதுச் செயலாளராக இருந்துவரும், தமிமுன் அன்சாரி, கட்சி தலைவராக பொறுப்பேற்றார். மேலும், அவர் வகித்துவந்த பொதுச் செயலாளர் பதவிக்கு மௌலா. நாசர் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், பொருளாளராக ரிஃபாயீ, துணைத்தலைவராக மன்னை. செல்லச்சாமி, இணைப் பொதுச்செயலாளராக செய்யது அகமது ஃபாரூக் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், அவைத்தலைவர், தலைமை ஒருங்கிணைப்பாளர் போன்ற பதவிகள் இனி கட்சியின் நிர்வாகப் பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்படுகிறது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.