Skip to main content

சுபஸ்ரீ வீட்டில் தங்கிய சீடர்கள்! ஜக்கி நடத்திய பஞ்சாயத்து? ஈஷா பெண் கொலை மர்மம்!

Published on 06/01/2023 | Edited on 06/01/2023

 

Isha yoga woman Subasri passes away case

 

கடந்த டிசம்பர் 24-27, 2022 நக்கீரன் இதழில், "ஈஷாவிலிருந்து மாயமான இளம்பெண்? - தவிக்கும் கணவர்' என்ற தலைப்பில் வெளியான கட்டுரையில், சுபஸ்ரீ என்ற இளம்பெண் ஜக்கி ஆசிரமத்தில் நடைபெற்ற பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு வெளியேறியபோது காணாமல் போனது குறித்து எழுதியிருந்தோம். இந்நிலையில் அந்தப் பெண், கிணறு ஒன்றில் சடலமாக எடுக்கப்பட்டது ஈஷா மீதான சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது. 18-12-2022 அன்று ஈஷாவை விட்டுத் தலைதெறிக்க ஓடிய இளம்பெண் சுபஸ்ரீ சரியாக இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையன்று அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

 

11-12-2022 அன்று ஈஷாவில் துவங்கிய ஒரு வார சைலன்ஸ் வகுப்பில் கலந்துகொண்ட சுபஸ்ரீ ஒரு வார காலத்திற்குப் பின் மதிய உணவிற்குப் பின்னரே தன்னுடைய உடைமையை எடுத்துக் கொண்டு வெளிவர வேண்டும். ஆனால் காலில் செருப்பில்லாமல் தியான உடையிலேயே ஈஷாவிலிருந்து வெளியேறி திரும்பிப் பார்த்துக் கொண்டே தலைதெறிக்க ஓடி செம்மேடு பகுதியில் மாயமானார். இதுகுறித்து காவல்துறையில் புகார் செய்தாலும் ஈஷாவை மீறி எதுவும் செய்யவியலாத நிலையில், எங்களுடன் சேர்ந்து சுபஸ்ரீயை தேடிக்கொண்டிருப்பதாகக் கூறினார்கள். நாட்கள்தான் ஓடியது. பலனில்லை! 

 

Isha yoga woman Subasri passes away case

 

இவர்களை நம்பிப் பலனில்லை என நாங்கள் எங்களுடைய நட்பு வட்டங்களைக் கொண்டு தேடியபோது, செம்மேடு பகுதியிலிருந்த பேக்கரியின் சி.சி.டி.வி. கேமராவில் சிக்கினாரே தவிர அதற்கு அடுத்ததாக உள்ள சர்ச் கேமராவில் சிக்கவில்லை. ஆகையால் அங்குள்ள எஸ் வளைவைத் தாண்டி சுபஸ்ரீ வெளியேறவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. இதுகுறித்து போலீஸிடம் கூறினோம். காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை. அதுபோல் அந்த ஏரியாவில் அந்த நேரத்தில் கடந்த வாகனங்களைக் கணக்கெடுத்துக் கூறினோம். அதில் ஆறு வாகனங்கள் வெளி மாநில வாகனங்கள். இதனையும் கண்டுகொள்ளவில்லை. ஈஷாவில் பதிவு செய்யப்படும் வாகனங்கள் ரெஜிஸ்டரிலும் அந்த வாகனங்கள் பதிவு செய்யப்படவில்லை. இந்த வேளையில்தான் 01-01-2023 ஞாயிற்றுக்கிழமையன்று சுபஸ்ரீ பிணமாக கிணற்றில் கிடப்பதாகத் தகவல் வந்தது'' என்கிறார் சுபஸ்ரீயின் உறவினர் ஒருவர்.

 

சி.சி.டி.வி. பதிவுகளின்படி சுபஸ்ரீ இறுதியாக மாயமான செம்மேடு பகுதியின் இறுதியில் உள்ள, காந்தி காலனியில் மூன்று நபர்களுக்குச் சொந்தமான தென்னந்தோப்பிலுள்ள கிணற்றில் குப்புறக் கவிழ்ந்த நிலையில் சடலம் ஒன்று இருப்பதைப் பார்த்த ஒருவர் காவல்துறைக்குத் தகவல் கொடுக்க, தீயணைப்புத் துறையின் உதவியுடன் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அந்த சடலம் யோகா உடையிலும் கையில் ஈஷாவின் ரிஸ்ட் பேண்ட்டும், விரலில் ஈஷா முத்திரை மோதிரமும் இருந்த நிலையில் மாயமான சுபஸ்ரீயே என அடையாளம் காட்டினார் கணவரான பழனிக்குமார். சடலத்தை மீட்ட காவல்துறை, கோவை அரசு மருத்துவமனைக்கு அவசரம் அவசரமாகப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியது.

 

"இந்த சாலையைக் கடப்பவர்களுக்கு இது மாதிரி கிணறு இருப்பதே தெரியாது. யாராவது நம்மைப் பார்க்கிறார்களா எனத் திரும்பிப் பார்த்துக்கொண்ட சுபஸ்ரீக்கு இந்தக் கிணறு எப்படித் தெரியும்..? ஏறக்குறைய முப்பது அடி விட்டம் கொண்ட கிணற்றில் 50 அடிக்கும் குறைவாகத் தண்ணீர் இருக்கின்றது. அங்கு நெருக்கமாக இருக்கும் புதர்களைத் தாண்டி கிணற்றை நெருங்குவது மிகக் கடினம். பெண்ணால் இது சாத்தியமில்லை. அப்படியே குதித்தாலும் உடலெங்கும் காயம் ஏற்பட்டிருக்கும். ஆகையால் யாராவது அந்தப் பெண்ணை கிணற்றில் தூக்கி வீசியிருக்கலாம்'' எனத் துவக்கத்தில் தன்னுடைய மேலதிகாரிகளுக்கு நிலைமையை எடுத்துக் கூறியது மாவட்ட உளவுத்துறை.

 

பிற்பகலில் பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட சடலத்தை, நாங்கள் வாங்க மாட்டோம் என சுபஸ்ரீயின் உறவினர்கள் மறுத்தனர். சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் விபத்துச் சாவுகள் உள்ளிட்டவை ஏதேனும் இருந்தால் திங்கட்கிழமை பிரேதப் பரிசோதனை செய்வோம் என்கின்ற மருத்துவர்கள் யாருக்காக உடனே பிரேதப் பரிசோதனை செய்கிறார்கள் என மாதர் சங்கமும் குரலெழுப்ப... தன்னால் இயன்ற சமாதான வார்த்தைகளைப் பிரயோகித்து, பிரேதப் பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைத்தது காவல்துறை. உடலில் காயங்கள் இல்லை எனக் காவல்துறையில் கூறியதாலும், அதுபோக அழுகிய நிலையில் இருப்பதாலும், சடலத்தை நஞ்சுன்டாபுரம் மின் மயானத்தில் தகனம் செய்தனர் உறவினர்கள்.

 

Isha yoga woman Subasri passes away case
சக்திவேல்

 

இறந்த சுபஸ்ரீயின் மாமனாரான சக்திவேலோ, "எனக்கு ஆரம்பத்திலிருந்து ஈஷா ஜக்கி மீது தான் சந்தேகம். பணம் கட்டி பயிற்சி வகுப்பிற்கு அனுப்பியுள்ளோம். பயிற்சி முடிந்து திரும்பும் வரை ஈஷா ஜக்கிதானே பொறுப்பு. ஏன் அவரைக் குற்றவாளியாகச் சேர்க்கவில்லை? மகள் மாயமான மறுநாள் இரவு எங்களது வீட்டிற்கு வந்த ஜக்கியின் சீடர்கள், நாங்கள் என்னென்ன செய்துகொண்டிருக்கிறோம் என நோட்டம்விட்டனர். 

 

முதல்நாள் அமைதியாக இருந்த நாங்கள் மறுநாள் அதிகாலையிலேயே சத்தம் போட்டு அனுப்பி வைத்தோம். அப்பொழுது மீண்டும் ஜக்கி மீது சந்தேகம் வந்தது. தொடர்ந்து எங்களுடைய தேடலில் அவர்கள் இணைந்து கொண்டு தேடுவதாக நடித்து நோட்டம்விட்டனர். சுபஸ்ரீ தேடுதலில் சுணக்கம் காட்டாததால் சில நாட்கள் கழித்து 24-12-2022 அன்று மாலை தரிசன வேளையில் எனது மகன் பழனிக்குமாரையும், எனது பேத்தியையும் சந்தித்து சமாதானம் செய்திருக்கின்றார். அப்பொழுது அம்மா கிடைப்பார்களா.? என கேள்வியெழுப்பிய எனது பேத்திக்கு, பதில் கூறாத ஜக்கி, பழனிக்குமாருக்கு ருத்ராட்ச மாலையைப் போட்டு அனுப்பி இருக்கின்றார். அதன் பின்பே இந்த சடலம்! என்னுடைய சந்தேகம், ஓடி வந்த சுபஸ்ரீயை மீட்டு மீண்டும் தங்களுடைய பாதுகாப்பில் வைத்திருந்த பின்னரே இது நடந்திருக்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை இது கொலைதான்'' என்கிறார் அவர்.

 

Isha yoga woman Subasri passes away case
காமராஜ்

 

"தன்னுடைய யோகா மையத்தில் சம்பளம் இல்லாத வேலை ஆட்கள் ஜக்கிக்கு தேவைப்படுகின்றது. சைலன்ஸ் ஹவர் நிகழ்ச்சியில் அதுதான் போதிக்கப்படுகின்றது. அப்படி மீறுபவர்களுக்கு மரண தண்டனைதான். மன அழுத்தத்தைப் போக்க இது மாதிரி நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களில் சுபஸ்ரீ மட்டுமல்ல, இதுவரை 18க்கும் அதிகமானோர் மாயமாகியிருக்கின்றனர். பின்னாளில் பலர் தற்கொலை செய்துள்ளதாகக் கணக்கு காண்பிக்கப்படுகின்றது. சத்தியமங்கலத்தில் நிர்வாண சடலமாக மீட்கப்பட்ட இரு பெண்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களே. ஈஷா வாசலில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டவர், விபத்து ஏற்படுத்தி கொலை செய்யப்பட்ட ஆடிட்டர், ஜக்கியின் மனைவி உட்பட ஏராளமான மர்ம மரணங்களுக்கு இன்றுவரை விடையில்லை. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு இருந்தும் இதுவரை அங்கு சிக்கியுள்ள எனது மகள்களை இதுவரை பார்க்க அனுமதிக்கவில்லை ஜக்கி. அரசு அதிரடியாக சில நடவடிக்கைகளை எடுத்தால் அங்கு புதைந்துள்ள சடலங்களையும், புதையவுள்ள சடலங்களையும் மீட்க முடியும்'' என்கிறார் ஜக்கியால் பாதிக்கப்பட்ட பேராசிரியர் காமராஜ்.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தாய் கண்முன்னே மகனுக்கு நேர்ந்த துயரம்; நொடிப் பொழுதில் நடந்த சம்பவம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Son passed away in front of mother eyes

கோவை மாவட்டம், சாய்பாபா காலனி அருகே அமைந்துள்ளது கருப்புசாமி வீதி. இப்பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீஷ். இவரது மகன் ஆனந்த். இளைஞரான இவர் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். அதனால், மிகுந்த கவனமுடன் குடும்பத்தினர் ஆனந்தை அரவணைப்புடன் வளர்த்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், ஆனந்திற்கு உயர் ரத்த அழுத்த பிரச்சனை  ஏற்பட்டுள்ளது. அவரது குடும்பத்தினர் அவருக்கு மருத்துவ மனையில் சிகிச்சை பெற முடிவு செய்துள்ளனர். இதையடுத்து, கடந்த 21ஆம் தேதி இரவு ஆனந்தின் தாய் லட்சுமி மற்றும் பாட்டி சியாமளா இணைந்து ஆனந்தை கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். முன்னதாக பேருந்துக்காக கோவை மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபா காலனி கங்கா மருத்துவமனை பேருந்து நிறுத்தத்திற்கு அருகே சாலையின் ஓரத்தில் நடந்துச் சென்றுள்ளனர். அப்போது, ஆனந்த் தாய் மற்றும் பாட்டியின் கையை விட்டு நடந்து சென்றுள்ளார். குடும்பத்தினரும் ஆனந்த் சரியாக நடந்துச் செல்வார் என்ற நம்பிக்கையுடன் கூடவே நடந்துச் சென்ற நிலையில், திடீரென ஆனந்த் அவ்வழியே வந்த துடியலூரில் இருந்து போத்தனூர் நோக்கி சென்ற பேருந்தின் முன்பாக பாய்ந்துள்ளார்.

நொடிப் பொழிதில், ஆனந்த் பேருந்து முன் பாய தாய் மற்றும் பாட்டியின் கண் முன்னே  தனியார் பேருந்தின் முன் பகுதியில் சிக்கியுள்ளார். இதில், பேருந்தின் முன் சக்கரம் தலையில் ஏறியதில் ஆனந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மகன் தடுமாறி விழுந்து கண்முன்னே உயிரிழந்ததைப் பார்த்த தாய்  லட்சுமி நடுரோட்டில் கதறி அழுதது காண்போரை கண் கலங்க செய்தது.

இதையடுத்து, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.  தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கோவை மேற்கு சரக போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விபத்தில் உயிரழந்தவரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் கோவை மேற்கு சரக போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் நடந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, விபத்து நடந்த அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதில், உடல் நிலை சரியில்லாத ஆனந்தை அவரது தாய் மற்றும் பாட்டி சாலையின் ஓரத்தில் நடந்து கூட்டிச் செல்கின்றனர். அப்போது, திடீரென் அவ்வழியாக தனியார் பேருந்து வந்துள்ளது. அதில், திடீரென ஆனந்த் பாய்கிறது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. ஆனால், தனியார் பேருந்து ஓட்டுநர் சுதாரித்துக் கொண்டு வண்டியை திருப்பி பிரேக் அடித்துள்ளார். ஆனாலும், யாரும் எதிர்பாராத வகையில் தனியார் பேருந்தின் முன் சக்கரம் ஏறியுள்ளது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வீடியோவிற்கு சமூக வலைதளங்களில் கமெண்ட்ஸ் செய்யும் நெட்டிசன்கள் மகனை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

கோவை மாவட்டத்தில் உடல் நிலை சரியில்லாத இளைஞர் ஒருவர் தனியார் பேருந்து முன்பு பாய்ந்து விபத்தில் சிக்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது தாயின் கண்முன்னே விபத்தில் சிக்கி மகன் உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Next Story

வரதராஜ பெருமாள் கோவிலில் நகை திருடிய அர்ச்சகர்; காப்பு போட்ட காவல்துறை

Published on 26/04/2024 | Edited on 27/04/2024
Archakar arrested for stealing jewels from Varadaraja Perumal Temple in Coimbatore

கோவை மருதமலை சுப்பிரமணிய சாமி கோவிலில் ஆண்டுதோறும் நகைகள் சரிபார்க்கும் பணி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் கோவை இந்து சமய அறநிலை துறை நகை சரிபார்ப்பு துணை ஆணையர் விஜயலட்சுமி தலைமையில் நகை சரிபார்ப்பு பணி நடைபெற்றது. இதில் மருதமலை கோவிலின் அறங்காவலர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டு திருக்கோவிலிலுள்ள அனைத்து நகைகளையும் சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.

மருதமலை கோவிலின் உபகோவிலான கரி வரதராஜ பெருமாள் கோவில் ஒன்று உள்ளது. இந்த நிலையில் நகையை சரிபார்க்கும் பணியின் போது கரி வரதராஜ பெருமாள் கோவிலின் தினக்கூலி அர்ச்சகர் ஸ்ரீ வாத்சாங்கன் என்பவர் அம்மனுக்கு அணிவிக்கப்படும் 14 கிராம் எடை உள்ள 7  பொன்தாலி 14 பொன்குண்டு ஊசிகள் மற்றும் 150 கிராம் எடையுள்ள வெள்ளி பூணூல் ஆகியவற்றை சரிபார்ப்பு பணிக்காக கொண்டு வந்து கொடுத்துள்ளார்.

அவற்றை அதிகாரிகள் சரிபார்த்த போது அந்த நகைகள் அனைத்தும் போலியானது என கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரிடம் அறங்காவலர் மற்றும் கோவில் அதிகாரிகள் விசாரணை செய்ததில் திருடியதை கோவில் அர்ச்சகர் ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அறங்காவலர்கள் குழு கொடுத்த புகாரின்படி கோவில் அர்ச்சகர் ஸ்ரீ வாத்சாங்கன் கைது செய்யப்பட்டுள்ளார்.