Skip to main content

“பிச்சை எடுத்தாவது பணம் தருகிறேன்..” - மக்களின் அடிப்படை வசதிக்காக பேசிய கவுன்சிலர்

Published on 30/07/2022 | Edited on 30/07/2022

 

Seerkazhi Counselor spoke for public goes viral

 

"நகராட்சியில் அடிப்படை பணிகள் ஏதுவுமே நடக்கவில்லை. தான் பிச்சை எடுத்தாவது பணம் தருகிறேன்; அந்த பணத்திலாவது அடிப்படைவசதிகளை செய்து கொடுங்க” என சீர்காழி நகர்மன்ற கூட்டத்தில் வார்டு கவுன்சிலர் ஒருவர் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி நகராட்சிக் கூட்டம் நகர்மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது. நகர்மன்றத் தலைவர் துர்கா பரமேஸ்வரி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சீர்காழி நகராட்சி வார்டு கவுன்சிலர்கள் ஆணையர் ராஜகோபால், அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர். அப்போது சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பிரச்சனைகளை அந்தந்த வார்டு கவுன்சிலர்கள் முன்வைத்து அதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.

 

Seerkazhi Counselor spoke for public goes viral

 

சில வார்டு கவுன்சிலர்கள் நகராட்சி சார்பில் செய்யப்பட வேண்டிய எந்த ஒரு அடிப்படை வசதிகளும் சீர்காழி நகராட்சி சார்பில் செய்யப்படுவதில்லை என்று குற்றச்சாட்டை தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து கூட்டத்தில் பேசிய தே.மு.தி.கவைச் சேர்ந்த வார்டு கவுன்சிலர் ராஜசேகர், "நகராட்சியில் மண்வெட்டி வாங்குவதற்காக 10 லட்சம் ரூபாய் டெண்டர் விடப்பட்டது. ஆனால் மண்வெட்டி கம்பு கூட, வாங்கவில்லை, அதேபோன்று டெங்கு பரவலை கட்டுப்படுத்த கொசு மருந்து அடிப்பதற்கும் பல லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் இதுநாள் வரை ஒரு வாரத்திற்கு கூட கொசு மருந்து அடிக்கும் பணி நடைபெறவில்லை. 


குடிநீர் வழங்கும் நீர்நிலை தொட்டிகள் சுத்தம் செய்வதில்லை, கடைசியாக எப்போது சுத்தம் செய்தீர்கள் என அதிகாரிகளிடம் கேட்டால் அவர்களிடம் பதில் கிடையாது. தூய்மை பணியாளர்களுக்கு மண்வெட்டி, அருவாள், கையுறை உள்ளிட்ட அடிப்படை பொருட்கள் வாங்கி தர வேண்டும். நகராட்சியில் பணம் இல்லை என்றால் தே.மு.தி.க சார்பில் நான் பிச்சை எடுத்து பணம் தருகிறேன். ஆக்கப்பூர்வமான அடிப்படை பிரச்சனைகளில் கவனம் செலுத்தாமல் மழை பெய்யும் சூழலில் குளங்களை தோண்டுவது சரியான செயல் அல்ல” என்றார்.

 
நகராட்சி நிர்வாக சீர்கேடுகள் குறித்தும், அதிகாரிகள் குறித்தும் பல்வேறு கேள்விகளை தொடர்ந்து எழுப்பிய நிலையில், செய்தியாளர்கள் செய்தி எடுக்க அனுமதி இல்லை என கூறி செய்தியாளர்களை அதிகாரிகள் அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆதினத்துக்கு மிரட்டல்; பள்ளி தாளாளரின் ஜாமீன் மனுவில் நீதிமன்றம் அதிரடி!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
The court takes action in the bail application of the school principal on Intimidation to Adinam

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தருமபுரத்தில் ஆதீன சைவ மடம் ஒன்று அமைந்துள்ளது. இந்த ஆதீனத்தின் 27ஆவது தலைமை மடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் பட்டம் வகித்து வருகிறார். இந்தச் சூழலில் தருமபுரம் ஆதீன மடாதிபதியின் சகோதரர் விருத்தகிரி மயிலாடுதுறை காவல்துறை கண்காணிப்பாளரிடம் கடந்த பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி (21.02.2024) புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்தப் புகாரில், ‘தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறையைச் சார்ந்த வினோத் என்பவரும், மடாதிபதியின் உதவியாளர் செந்தில் என்பவரும் தன்னை நேரில் சந்தித்து ஆதீன மடாதிபதியின் ஆபாச வீடியோ தங்களிடம் இருப்பதாக மிரட்டினர். மேலும், அவர்கள் அந்த வீடியோவை சமூக வலைத்தளங்கள் மற்றும் தொலைக்காட்சியில் வெளியிடாமல் இருக்க வேண்டுமென்றால், பணம் தர வேண்டும் என்று கூறி என்னைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்ய முயற்சி செய்தனர்.

இந்தச் சம்பவத்தில் செம்பனார்கோவிலைச் சேர்ந்த பிரபல கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு, பா.ஜ.க. கட்சியின் மயிலாடுதுறை மாவட்டத் தலைவர் அகோரம், வழக்கறிஞர் செய்யூர் ஜெயச்சந்திரன் ஆகியோர் தூண்டுதலாக இருந்துள்ளனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் புகாரின் பேரில் மயிலாடுதுறை பா.ஜ.க. மாவட்டத் தலைவர் அகோரம், மடாதிபதியின் உதவியாளர் செந்தில், வினோத் உள்ளிட்ட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இது தொடர்பாக 4 பேரை போலீசார் கடந்த பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி கைது செய்திருந்தனர். இதனைத் தொடர்ந்து பா.ஜ.க. பிரமுகர் அகோரம் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்பு கடந்த மார்ச் 6 ஆம் தேதி (06.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “கட்சி அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியும், வழக்கு விசாரணை நிலுவையில் இருப்பதையும் கருத்தில் கொண்டு அகோரத்தின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிடுகிறேன்” எனத் தெரிவித்திருந்தார். இதனையடுத்து மும்பையில் தலைமறைவாக இருந்து வந்த அகோரத்தை கடந்த மார்ச் மாதம் 15 ஆம் தேதி (15.03.2024) தமிழக தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்திருந்தனர்.

இதனையடுத்து கைதான பாஜக மாவட்ட தலைவர் அகோரம் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு கடந்த 8 ஆம் தேதி (08.04.2024) நீதிபதி தமிழ்ச்செல்வி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் வாதிடுகையில் ‘அகோரம் மீது 47 வழக்குகள் நிலுவையில் இருப்பதால் ஜாமீன் வழங்கக் கூடாது’ என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவுசெய்து கொண்ட நீதிபதி இந்த வாதத்தை பதில் மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டார். மேலும் வழக்கு விசாரணையைக் கடந்த 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்திருந்தார். 

The court takes action in the bail application of the school principal on Intimidation to Adinam

இந்த நிலையில், கைது செய்யப்பட்டிருந்த பிரபல கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ‘தனக்கு சர்க்கரை நோய், இருதய பாதிப்பு இருப்பதால், தொடர்ந்து சிறையில் இருந்தால் உடல்நிலை பாதிக்கப்படும். எனவே, நிபந்தனை ஜாமீன் பேரில் என்னை விடுவிக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார். இந்த மனு மீதான விசாரணை, நீதிபதி தமிழ்ச்செல்வி முன்பு இன்று (24-04-24) வந்தது. அப்போது காவல்துறை தரப்பில், ‘இந்த வழக்கு தொடர்பான புலன் விசாரணை நடைபெற்று வருகிறது. எனவே, பள்ளி தாளாளர் குடியரசுவை ஜாமீனில் விடுவிக்க கூடாது’ எனக் கூறி கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி தமிழ்ச்செல்வி, குடியரசுவின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். 

Next Story

திடீர் திடீரென கரையொதுங்கும் மர்மப் பொருட்கள்; அதிர்ச்சியில் மீனவ கிராமம்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Mysterious objects that suddenly wash ashore; A fishing village in shock

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கடற்கரையில் மர்ம பொருள் ஒன்று ஒதுங்கியது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ளது கீழமூவர்க்கரை மீனவ கிராமம். இந்தக் கிராமத்தின் கடற்கரையை ஓட்டி சிவப்பு நிறத்தில் சுமார் 15 அடி உயரம் கொண்ட மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கியது. இதனைக் கண்ட அந்தப் பகுதி மக்கள் இது என்னவாக இருக்கும் என்ற அச்சத்தில் பூம்புகார் கடலோர காவல் குழும போலீசாருக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர். இதனையடுத்து உடனடியாக அங்கு வந்த போலீசார் அப்பொருளை ஜேசிபி மூலம் கரைக்கு கொண்டு வந்தனர். அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அந்தப் பொருள் கடலில் 'தடை செய்யப்பட்ட பகுதி' என்பதை உணர்த்துவதற்காக மிதக்க விடும் 'போயம்' என்ற கருவி என்பது தெரியவந்தது.

இதேபோல சில மாதங்களுக்கு முன்பு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழிக்கு அருகே உள்ள நாயக்கர்குப்பம் மீனவ கிராமத்தில் 'அபாயம் தொட வேண்டாம்' என ஆங்கில எழுத்துக்களில் வாசகங்கள் இடம் பெற்ற உருளை ஒன்று ஒதுங்கியது. அதுவும் அந்த நேரத்தில் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அது ஆபத்து நேரங்களில் நீர்மூழ்கி கப்பல்களில் இருந்து வண்ணப் புகையை உமிழ்ந்து சமிக்கைகளை செய்வதற்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர் என்பது தெரிய வந்தது குறிப்பிடத்தகுந்தது.