Skip to main content

பரவும் கரோனா! தாறுமாறாக விலையேறும் தடுப்பூசி! நெருக்கமான தொழிலதிபர்களின் முதலீடுகள்...

Published on 26/04/2021 | Edited on 26/04/2021
ddd

 

இரு நாட்களுக்கு முன்பு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, ‘’""இரண்டு உள் நாட்டு தடுப்பூசி மருந்து நிறுவனங்களுடன் உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை இந்தியா துவக்கியுள்ளது. உலகிலேயே தடுப்பூசியின் விலை இந்தியாவில்தான் மிகக் குறைவு. மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்''‘என்றார்.

 

பிரதமர் மோடி இப்படி அறிவித்த 24 மணி நேரத்திற்குள், தனது தடுப்பூசி மருந்தான கோவிஷீல்டின் ஒரு டோஸ் விலையை இரு மடங்காக உயர்த்தி அதிர்ச்சியைத் தந்திருக்கிறது சீரம் நிறுவனம்.

 

திடீர் விலை உயர்வு குறித்து மருந்துகள் தயாரிப்பு வியாபார உலகில் நாம் விசாரித்தபோது, ’’""இந்தியாவில் கோவிஷீல்ட் தடுப்பூசி மருத்தை சீரம் நிறுவனமும், கோவேக்சின் தடுப்பு மருந்தை பாரத் பயோடெக் நிறுவனமும் தயாரிக்கின்றன. இவற்றுக்கு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது மத்திய மோடி அரசு. தடுப்பூசி திட்டத்திற்காக மட்டுமே கிட்டத்தட்ட 35,000 கோடியை ஒதுக்கியிருக்கிறார்கள். மத்திய அரசு மூலமே கொள்முதல் என்ற நிலையை மாற்றி, இனி மாநில அரசுகளே நேரடியாக மருத்து நிறுவனங்களிடம் கொள்முதல் செய்துகொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்த நிலையில்தான் இந்த விலையேற்றம்.

ddd

கோவிஷீல்ட் தடுப்பூசியைத் தயாரிக்கும் சீரம் நிறுவனம், மத்திய-மாநில அரசுகளுக்கு இதுவரை ஒரு டோஸ் மருந்தின் விலையை 150 ரூபாய்க்கும், தனியார் மருத்துவமனைகளுக்கு 250 ரூபாய்க்கும் விற்பனை செய்துவந்தது. இனி மாநில அரசுகளுக்கு 400 ரூபாய்க்கும், தனியார் மருத்துவமனைகளுக்கு 600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும் என்றும், மத்திய அரசுக்கு 150 ரூபாய் விலையே தொடரும் என்றும் அறிவித்துவிட்டது சீரம் நிறுவனம். இதனைப் பின்பற்றி தங்கள் தயாரிப்பான கோவேக்சின் தடுப்பூசியின் விலையை உயர்த்த பாரத் பயோடெக் நிறுவனம் ஆலோசித்து வருகிறது.

 

ஒரு டோஸ் தடுப்பூசி மருந்தைத் தயாரிக்க அடக்க விலை மற்றும் செலவினங்களை கணக்கிட்டால் 62 ரூபாய் போதும். பொதுச் சந்தையில் 50 சதவீத லாபம் வைத்து விற்றால்கூட 91 ரூபாய்க்கு கொடுக்கமுடியும். ஆனால், இதனை அரசுகளுக்கு 150 ரூபாய்க்கும், தனியார் மருத்துவமனைகளுக்கு 250 ரூபாய்க்கும் விற்பனை செய்துவந்தனர். இதுவே ஏக லாபம்தான். அப்படியிருந்தும் கார்ப்பரேட் நிறுவனங்களின் பாணியில் மருந்துகளை சந்தை பண்ணுவதன் மூலம் பல ஆயிரம் கோடிகளை அள்ள மருந்து நிறுவனங்களுக்கு உதவியுள்ளது மோடி அரசு''‘என்கிறார்கள்.

ddd

தடுப்பூசியின் கிடுகிடு விலை உயர்வு, தமிழக அரசையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை தரப்பில் விசாரித்தபோது, ""மத்திய அரசிட மிருந்து இதுவரை ஒரு டோஸ் தடுப்பூசியை 150 ரூபாய்க்கு வாங்கி, அரசு மருத்துவமனைகள் மூலம் மக்களுக்கு இலவசமாக போட்டுவருகிறோம். தனியார் மருத்துவமனைகள் 250 ரூபாய்க்கு தடுப்பூசியைப் போடுகின்றன. கடந்த வாரத்தின் கணக்கின்படி இதுவரை 54 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் தமிழகத்திற்கு கிடைத்திருக்கிறது. இதில் 60 சதவீதம் அரசு மருத்துவமனை களுக்கும், 40 சதவீதம் தனியார் மருத்துவமனைகளுக்கும் பகிர்ந்தளித்திருக்கிறது தமிழக அரசு. அரசு மருத்துவமனைகளில் இலவசமாக தடுப்பூசி போடப் படுவதால் அதற்கான தொகையை மத்திய அரசுக்கு தமிழக அரசு கொடுத்துவிடுகிறது. ஏற்கனவே நிதி நெருக்கடியில் இருக்கும் தமிழக அரசுக்கு இது கூடுதல் சுமைதான்.

 

இந்த நிலையில், மத்திய சுகாதார அமைச்சக அதிகாரிகளுக்கும், மருந்து நிறுவன அதிகாரிகளுக்குமிடையே ஏப்ரல் முதல் வாரத்தில் ஓர் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடந்தது. அதில், தடுப்பூசிகள் தயாரிப்பதில் தங்க ளுக்கு லாபம் இல்லை என்றும், அதனால் விலையை உயர்த்த அனுமதிக்க வேண்டும் என்றும், தடுப்பூசிகள் அதிகம் விற்கப்படுவதற்கு 18 வயதுக்கு மேற்பட்டவர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள அரசு வலியுறுத்த வேண்டும் என்றும் நிறுவனம் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது. அதன்படியே, மே 1 முதல் 18 வயதுக்கும் மேற்பட்டவர்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ள மத்திய அரசு அறிவித்ததையடுத்து தடுப்பூசியின் விலையும் உயர்ந்துவிட்டது. இதன்மூலம் தமிழக அரசின் நிதிச்சுமையும் அதிகரித்துள்ளது.

 

இந்தியா முழுவதும் இதுவரைப் போடப் பட்டுள்ள தடுப்பூசிகளின் எண்ணிக்கையை கணக்கிட்டால் சுமார் 10,000 கோடி ரூபாய் வர்த்தகம் நடந்து முடிந் திருக்கிறது. தற்போது விலை உயர்வு இரட்டிப்பாகி யிருப்பதாலும், இனி தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக் கும் என்பதாலும் அதில் நடக்கும் வியாபாரமும் பல மடங்கு அதிகரிக்கும். மே 1 முதல் மாநில அரசே நேரடியாக கொள்முதல் செய்துகொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்து விட்டது. அதனால், மாநில அரசிடம் தேவையான நிதி இருந்தால் மட்டுமே தடுப்பூசிகளை கொள்முதல் செய்யமுடியும். நிதி நெருக் கடியில் தத்தளிக்கும் தமிழக அரசு, இதனை எப்படி சமாளிக்கப்போகிறது என தெரியவில்லை''‘என்கிறார்கள் சுகாதாரத் துறையினர்.

 

இதற்கிடையே, "மத்தியில் ஆள்பவர்களுக்கு நெருக்கமான தொழிலதிபர்களின் முதலீடுகளும் தடுப்பூசி தயாரிப்பில் இருப்பதால்தான், விலை உயர்வுக்கு அனுமதியளித்தது மோடி அரசு' என்றும் மருந்துகள் தயாரிப்பு உலகில் சொல்லப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சற்றே குறைந்த கொரோனா பரவல்; மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

Published on 02/01/2024 | Edited on 02/01/2024
Slightly less corona spread; Information from Union Ministry of Health

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக புதிய வகை கொரோனாவான ஜேஎன் 1 கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அதில் இந்தியாவில் மட்டும் கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், கடந்த மாதத்தின் (டிசம்பர்) முதல் 8 நாட்களில் மட்டும் 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கேரளா மட்டுமல்லாது மற்ற மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 23 ஆம் தேதி 752ஆக அதிகரித்திருந்தது. அதன்படி, இந்தியாவில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,997இல் இருந்து 3,240ஆக அதிகரித்தது. இதில் கேரளாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 565 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும், இந்தியாவில் மட்டும் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது.

இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி, இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதே சமயம், ஒரே நாளில் கேரளாவில் 2 பேர், மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது. அதேபோல், கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வரையிலான 24 மணி நேரத்தில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. மேலும், ஒரே நாளில் கொரோனா பாதிப்பு காரணமாக கேரளா, கர்நாடகா, பீகார் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தது.

இந்த நிலையில், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் நேற்று முன்தினம் (31-12-23) 841 ஆக இருந்த கொரோனா தொற்று நேற்று (01-01-24) 636 ஆக குறைந்திருக்கிறது என்று தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.5 கோடியை தாண்டியுள்ளதாகவும், நாடு முழுவதும் இதுவரை 5.33 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு; உயரும் பலி எண்ணிக்கை!

Published on 01/01/2024 | Edited on 01/01/2024
Increasing Corona Virus; Rising toll

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு தற்போது கட்டுக்குள் வந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக புதிய வகையான கொரோனாவான ஜேஎன் 1 வகை கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அதில் இந்தியாவில் மட்டும் கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், இந்த மாதத்தின் (டிசம்பர்) முதல் 8 நாட்களில் மட்டும் 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கேரளா மட்டுமல்லாது மற்ற மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 23 ஆம் தேதி 752ஆக அதிகரித்திருந்தது. அதன்படி, இந்தியாவில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,997இல் இருந்து 3,240ஆக அதிகரித்தது. இதில் கேரளாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 565 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும், இந்தியாவில் மட்டும் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது.

இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி, இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதே சமயம், ஒரே நாளில் கேரளாவில் 2 பேர், மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது. 

இந்த நிலையில், நேற்று (31-12-23) வரையிலான 24 மணி நேரத்தில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கேரளா, கர்நாடகா, பீகார் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.