Skip to main content

என்றைக்கு சதம் அடிக்கப்போகிறதோ!!! அது நடக்காமல் இருக்கவேண்டும் என்பதே அனைவரும் விரும்புவது...

Published on 09/03/2019 | Edited on 09/03/2019
chennai airport


 

சென்னை பன்னாட்டு விமானநிலையம் உலகத்தரம் வாய்ந்த விமானநிலையமாகும். மேலும் அது கண்ணாடி மாளிகை போன்ற தோற்றத்தை உடையது. பல்வேறு பொருள்களில் (விஷயங்கள்) சென்னை விமான நிலையம் முதலிடத்தை பெற்றுள்ளது. ISO-9001-2000 சான்றிதழை பெற்ற முதல் பன்னாட்டு முனையகம், சுற்றுச்சூழலை கருத்தில்கொண்டு பேப்பர் கப்பை அறிமுகப்படுத்திய முதல் வானூர்தி நிலையம். சிறந்த வானூர்தி நிலையம் என்ற குடியரசு தலைவர் விருது,  உள்நாட்டு முனையத்தில் ஏரோப்ரிட்ஜ் (aerobridges) எனப்படும் வானூர்தியுடன் இணைக்கும் பாலத்தை பெற்ற முதல் நிலையம், பன்னாட்டு முனையம், உள்நாட்டு முனையம் ஆகிய இரு முனையங்களிலும் சுகாதாரமான இலவச குடிநீர் வழங்கிய முதல் நிலையம் இவ்வளவு பெருமைகளை பெற்றிருந்தாலும் ஒரே ஒரு பொருள் மட்டும் அதற்கு எதிர்ப்பாக இருந்துகொண்டே இருக்கிறது. அதுதான் கண்ணாடி விழுவது.

என்னை அறிந்தால் படத்தில் விவேக் விமான நிலையத்திற்குள் ஹெல்மெட் அணிந்து வருவார். அதை பார்த்த அஜித் ஏன் ஏர்போர்ட்க்குள்ள ஹெல்மெட் போட்ருக்கிங்க. என கேட்க, விவேக் இப்போலாம் ஃப்ளைட்-ல நடக்குற ஆக்ஸிடெண்ட்-அ விட ஏர்போர்ட்க்குள்ளதான் அதிகமா ஆக்ஸிடெண்ட் ஆகுது. எப்போ எந்த கண்ணாடி உடையும்னே தெரியல எனக் கூறுவார். கிட்ட மே 12, 2013லிருந்து மார்ச் 13,2016 வரை அப்படித்தான் இருந்தது. எப்போது எந்த கண்ணாடி விழும் என்றே தெரியாது. சிலநேரங்களில் தினமும் அல்லது ஒருநாள் இடைவெளியில் தலைப்பு செய்திகளாக வந்த தருணமெல்லாம் உண்டு. அதிலும் அந்த ஓர் இடத்திலிருந்த கண்ணாடி மட்டும் அடிக்கடி விழுந்தது அனைவருக்கும் குழப்பத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. 
 

கடந்த டிசம்பர் 7ம் தேதி 83வது முறையாக கண்ணாடி விழுந்தது. அது விழுந்து ஒரு வாரம் கூட ஆகவில்லை. அதன்பின் டிசம்பர் 14ம் தேதி 84வது முறையாக மீண்டும் ஒரு கண்ணாடி விழுந்தது. இது 7 அடி உயரம், 4 அடி அகலம் கொண்டது. அந்தப் பக்கம் சென்ற ஒரு பேட்டரி கார் இடித்ததில்தான் இந்த கண்ணாடி விழுந்துள்ளது என சொல்லப்பட்டது. நல்லவேளையாக அந்த வழியாக யாரும் செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அதன்பின் ஜனவரி 20ம் தேதி 85வது முறையாக விழுந்தது, குடியரசு தினவிழா நெருங்கவிருந்த நிலையில் கண்ணாடி விழுந்தது, பரபரப்பை கிளப்பியது. தற்போது மீண்டும் 86வது முறையாக கண்ணாடி விழுந்துள்ளது. 

 

கண்ணாடிகள் விழுவதை தவிர்க்க நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். இதுதான் அனைவருக்கும் நன்மை.

 

 

Next Story

தேர்தல் பணிமனையில் மோதல்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case against BJP for Election Workshop 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்காக தொடங்கப்பட்ட வாட்ஸ்அப் குரூப்பில் மத்திய சென்னை மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் மூர்த்திக்கும், அண்ணா நகர் வடக்கு மண்டல பாஜக தலைவர் ராஜ்குமாருக்கும் இடையே தேர்தல் பணியில் சுணக்கமாக செயல்பட்டது தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மத்திய சென்னை தொகுதி பாஜக தேர்தல் பணிமனையில் நேற்று முன்தினம் (26.04.2024) மூர்த்தியும், ராஜ்குமாரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்தபோது தாக்கிக்கொண்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இருவரும் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில் அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கு விசாரணைக்காக இருவரும் நாளை (29.04.2024) நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய சென்னை தொகுதியில் உள்ள பாஜக தேர்தல் பணிமனையில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பிரதமரின் வெறுப்பு பிரச்சாரத்திற்கு எதிராக எஸ்.டி.பி.ஐ போராட்டம்! (படங்கள்)

Published on 27/04/2024 | Edited on 27/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், மோடியின் மதவெறுப்பு பிரச்சாரத்தை கண்டித்து, எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள இந்தியன் வங்கி அருகே பேரணியாக நடந்து சென்று  தேர்தல் ஆணையம் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினர். அப்போது எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட  போராட்டக்காரர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர்.