Skip to main content

“அண்ணாமலையின் முதலாளிகளுக்கு மு.க. ஸ்டாலின் யார் என்று தெரியும்” - அமுதரசன் 

Published on 23/06/2023 | Edited on 23/06/2023

 

“The bosses of Annamalai know who M.K.Stalin is” - Amudharasan

 

பீகார் தலைநகர் பாட்னாவில் நடக்கும் எதிர்க்கட்சிக் கூட்டம் தொடர்பாக திமுக மாணவர் அணி செயலாளர் வழக்கறிஞர் அமுதரசன் நமக்கு அளித்த பேட்டி:

 

பாட்னாவில் நடக்கும் எதிர்க்கட்சிக் கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொள்கிறார். ஆனால், அதனை மத்தியில் யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை என அண்ணாமலை கூறுகிறாரே?

 

தமிழ்நாட்டில் அண்ணாமலையை வைத்துக் கொண்டு பாஜகவினர் அரசியல் நடத்தி கொண்டிருக்கிறார்கள். அண்ணாமலை பேசுவதில் 1 சதவீதம் கூட உண்மை இருக்காது. கும்மிடிப்பூண்டியை தாண்டினால் தமிழக முதல்வரை யாருக்கும் தெரியாது என்று கூறிய அதே அண்ணாமலை, மு.க. ஸ்டாலினை பார்த்து இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகள் பயப்படுகிறார்கள் என்று கூறுகிறார்.  இதுவே பெரிய முரணாக இருக்கிறது. 

 

இன்றைக்கு இந்தியாவில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஓர் அணியில் சேர்க்கக் கூடிய வல்லமை படைத்தவர் நம் முதல்வர். காங்கிரஸ், பாஜக கூட்டணியில் இல்லாத மாநில கட்சிகளான எதிர்க்கட்சிகள் கூட இன்றைக்கு மு.க.ஸ்டாலின் எடுக்கும் இந்த முன்னெடுப்பில் கலந்து கொள்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள். இது மிகப் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. அதைப் பார்த்து பொறுத்துக் கொள்ளாத அண்ணாமலை வாய்க்கு வந்ததை பேசிக் கொண்டிருக்கிறார்.

 

பாட்னா கூட்டம் வரவேற்பை பெற்று வருகிறது என்று கூறுகிறீர்கள். ஆனால் அங்கு தான் ‘கோ பேக் ஸ்டாலின்’ என்று ட்ரெண்ட் ஆகி வருகிறது என்று கூறுகிறார்களே?

 

கும்மிடிப்பூண்டியை தாண்டினால் முதல்வரை யாருக்கும் தெரியாது என்று சொல்கிறார்கள். அப்படிப்பட்டவரை பார்த்து ஏன் பயப்பட வேண்டும். யாருக்கும் தெரியாத முதல்வரை பார்த்து அமைதியாக போக வேண்டியது தானே. அண்ணாமலை போன்றவருக்கு முதல்வரை தெரியாமல் இருக்கலாம். ஆனால், அண்ணாமலையின் முதலாளிகளுக்கு மு.க. ஸ்டாலின் யார் என்றும், திராவிட முன்னேற்றக் கழகம் என்றால் என்ன என்பதும் கண்டிப்பாக தெரியும்.

 

பீகார் தொழிலாளர்கள் தமிழ்நாட்டிற்கு வேலைக்கு வருவதை விமர்சிப்பதால் கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில் பீகார் முதல்வர் கலந்து கொள்ளவில்லை என்று கூறுகிறார்களே?

 

இதெல்லாம் அவர்கள் கூறும் கட்டுக்கதை தான். மொழியை வைத்தோ இங்கு வரும் புலம்பெயர் தொழிலாளர்களை வைத்தோ திமுக என்றைக்கும் கிண்டல் செய்ததே இல்லை.

 

தன்னுடைய சொந்த கட்சியில் உள்ளவர்கள் உள்பட அனைவர் வீட்டிலும், கழிவறையிலும் கேமரா வைத்து வீடியோ எடுப்பது போன்று மலிவான அரசியலை அண்ணாமலை செய்து கொண்டிருக்கிறார். இன்றைக்கு கூட அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுகவினர் பேசியதை முன்னுக்குப் பின் ஒட்டி வடமாநில தொழிலாளர்களை கேவலமாக பேசுகிறார்கள் என்று புரளியை கிளப்பி வருகிறார். பாஜகவும் ஆர்.எஸ்.எஸ்ஸும் இதுபோன்று வேலை தான் பார்ப்பார்கள். அதைத் தான் அண்ணாமலை பார்த்து வருகிறார்.

 

இதுபோன்ற மலிவான பிரச்சாரங்கள் மூலமாகவும், மலிவான அரசியல் யுக்திகள் மூலமாகவும் தேர்தலில் வென்று விடலாம் என்று எண்ணுகிறார்கள். இதையே தான் இவர்களின் முப்பாட்டர்கள் முதற்கொண்டு செய்தார்கள். அதனால் இதையெல்லாம் நாங்கள் அப்போதே பார்த்து விட்டோம். ஆகவே இதுபோன்ற மலிவான பிரச்சாரங்களின் வாயிலாக எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை ஒரு போதும் சீர் குலைக்க முடியாது  என்று அண்ணாமலை தெரிந்து கொள்ள வேண்டும்.

 

 

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.

Next Story

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள்'-தமிழிசை பேட்டி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024

 

nn

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள் எதிர்க்கட்சிகள்' என தமிழிசை சௌந்தரராஜன்  தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜகவின் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''பாஜக வெறுப்பு அரசியல் பேசுகிறது என தீவிரமாக பிரச்சாரம் செய்கிறார்கள். மோடி எந்த வெறுப்பையும் சொல்லவில்லை. இன்னும் சொல்லப் போனால் 2016-ல் இருந்து 2020 வரை இதுவரை எந்த பிரதமரும் சிறுபான்மை மக்களுக்கு கொடுக்காத அளவிற்கு சிறுபான்மை மக்களுக்கு மோடி ப்ரோக்ராம் கொடுத்துள்ளார். புதுச்சேரியில் ஆளுநராக இருந்தால் எனக்கு தெரியும். சிறுபான்மை மக்களுக்கு ஸ்கில் டெவலப்மெண்ட், உதவித்தொகை என சிறுபான்மை மக்களை உயர்த்துவதில் இதுவரை எந்த பிரதமரும் பாடுபடாத அளவுக்கு மோடி பாடுபட்டு இருக்கிறார். அதை பொறுத்துக் கொள்ளாமல் இவர்கள் இப்படி பேசுகிறார்கள்.

சிறுபான்மை மக்களுக்கு யார் அதிகம் உதவி செய்திருக்கிறார்கள்; அவர்கள் முன்னேறும் திட்டத்திற்கு யார் அதிகம் பாடுபட்டு இருக்கிறார்கள் என்றால் அது பிரதமர் மோடி தான். இதை பொறுத்துக் கொள்ளாமல் தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள். தமிழ்நாட்டில் பல வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கிறது என்று நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆளுங்கட்சி அதற்கு செவிசாய்க்க மாட்டேன் என்கிறார்கள்.இதனால் மாநில தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது என்று சொல்ல முடியுமா? அந்தந்த தேர்தல் அதிகாரிகள் முடிவெடுக்கிறார்கள். நாம் என்ன சொல்கிறோமோ அதைத்தான் தேர்தல் அதிகாரிகளும் சொல்ல வேண்டும் என எதிர்பார்ப்பது அரசியலில் அவசியம் கிடையாது.

மணிப்பூர் பிரச்சனை இன்றைய நேற்றைய பிரச்சனை இல்லை. மணிப்பூர் பிரச்சனையில் பல உள் விவகாரங்கள்  இருக்கிறது. இவையெல்லாம் சரி செய்யப்பட வேண்டும் என்பது அனைவரின் ஆசை. யாருக்கும் எங்கும் கலவரம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஆனால் கலவரத்தை அரசியலாக்கும் எண்ணத்தில் எதிர்க்கட்சிகள் செயல்படுகின்றன என்பதுதான் எங்களுடைய குற்றச்சாட்டு. அரசு அதிகாரிகள் வீட்டிலேயே சில இடங்களில் போதைப் பொருட்கள் வைப்பதற்கு உதவி செய்திருக்கிறார்கள் என்பது தொடர்பான செய்திகள் பெரும் சோகத்தை தருகிறது. கண்ணகி நகரில் நான் போகும்போது பெண்கள் வைத்த முதல் கோரிக்கை இங்கு உள்ள கஞ்சா பழக்கத்தையும், போதை பழக்கத்தையும் தடுக்க வேண்டும் என்பதுதான். அங்குள்ள இளைஞர்களுக்கு மறுவாழ்வு மையங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்பது தாய்மார்களின் கோரிக்கையாக உள்ளது'' என்றார்.