Skip to main content

புயலைக் கிளப்பிய அதானியின் உலகப் பொருளாதார மோசடி; காப்பாற்றும் மோடி - விவரிக்கும் பால்கி 

Published on 04/09/2023 | Edited on 04/09/2023

 

Balki | Adani | Modi | Rahul Gandhi

 

மத்தியில் ஆளும் பாஜக அரசின் தலைமை மற்றும் பிரதமர் மோடி அதானிக்கு ஆதரவாகச் செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டை பற்றி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கப் பொறுப்பாளர் கடலூர் பால்கி விளக்கமாக விவரிக்கிறார்.

 

பரபரப்பான அரசியல் சூழலில் இந்தியாவைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள் அனைவரும் மும்பையில் ஒன்றிணைந்துள்ளனர். இந்த வேளையில், ஒன்றிய அரசின் நெருங்கிய நண்பரும் அவரின் நிழலாக இருக்கக்கூடிய அதானி குழுமத்தின் மீது வெளியிடப்பட்டுள்ளதே ஒ.சி.சி.ஆர்.பி அறிக்கை. இதன் அறிக்கை, ஒழுங்கமைக்கப்பட்ட நிறுவனங்களினுடைய வரைமுறை இல்லாத முறைகேடுகள் மற்றும் லாபங்களில் உள்ள சறுக்கல்களை வெளிக்கொண்டு வருவது. ஏற்கனவே, ஹிண்டன்பெர்க் அறிக்கையை எடுத்துக் கூறியபோதும் அதானி தரப்பில் இருந்து, இந்தியாவினுடைய வளர்ச்சியை கேள்வி கேட்பதே வெளிநாட்டு ஆதரவாளர்களின் குரல் என பதிலுரைத்தது. ஹிண்டன்பெர்க் அறிக்கையில், ‘போலியான நிறுவனங்கள், தேவைப்பட்ட நிறுவனங்களுக்கு சலுகைகள் வழங்கியது மிகப்பெரிய அளவில் இந்தியப் பொருளாதாரத்தில் வரைமுறையுள்ள விதிகளுக்கு உட்பட்டு செயல்படுவதை விட நிதிகளும் விதிகளற்ற முறையில் அதானி குழுமம் ஈடுபட்டதாக’ அறிக்கை கூறியது.

 

அதில், 29 நிறுவனங்களில் 5 செயல்படாதவை. 24  நிறுவனம் அவருக்கு நெருங்கியவை. அதிலும் 22 நிறுவனங்களில் விதிகள் மீறப்பட்டுள்ளது எனபதே அறிக்கை. இந்த 22 நிறுவனங்களில் இருக்கும் சறுக்கல்களைப் பற்றி முறையான விசாரணை நடத்த செபி தொடங்கியது. கிட்டத்தட்ட அனைத்து நிறுவனத்தையும் அவர்கள் ஆய்வு செய்துவிட்டனர். இந்த இருபத்தி இரண்டு நிறுவனங்களின் முறைகேடுகளை நீதிமன்றம் வெளிக்கொண்டு வரவேண்டும். மேலும், குற்றம் செய்தவர் என்றால் நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றமற்றவர் என்றால் தீர்ப்பை வெளியிட வேண்டும். ஆனால், இந்த 22 நிறுவனங்களில் ஏற்பட்டிருக்கும் வீழ்ச்சி என்பதை அங்கொன்றும் இங்கொன்றுமாக சில பத்திரிகைகள் வெளியிட்டு வருகிறது. எனவே, தீர்ப்பை வெளியிடாமல் ஒத்தி வைத்திருப்பது. அதானியினுடைய ஆதரவு நிலைக்கு ஒன்றிய அமைச்சர் உள்பட அமைச்சரவையால் காட்டப்படும் பாரபட்சமே. செபி கூறுவதை வெளிக்கொண்டு வருவதே நீதிமன்றத்தின் வேலையாக இருக்க வேண்டும்.

 

தற்போது வெளியான ஒ.சி.சி.ஆர்.பி அறிக்கை என்பது ஹிண்டன்பெர்க் அறிக்கை போலவே தான். வெளிநாடுகளில் முதலீடு செய்வதற்கும் வரைமுறைகள் இருக்கிறது. ஆனால், அதானியின் குடும்ப நண்பரான நாசர் அலியும் அவரின் நண்பர் ஒருவரும் அதானியின் குழுமத்திற்கு பினாமியாக இருந்துள்ளனர் என அறிக்கை கூறுகிறது. 430 மில்லியன் டாலர் ஈடுபட்டுள்ளது என்றால் எவ்வளவு பெரிய தொகை என சிந்திக்க வேண்டும். இரண்டு நபர்கள், பெயர் குறிப்பிடப்படாத அரபு எமிரேட்ஸில் இருக்கும் நிறுவனங்களுக்கு மூலதனத்தை திரட்டச் சென்று பின்னர், அதில் வரும் பணத்தை மறு மூலதனம் செய்வது உலகின் பொருளாதாரத்தில், மாதிரியான நிறுவனம் ஒழுங்கமைப்பு விதிகளை மீறி செயல்பட்டுள்ளது என்பதனை ஒ.சி.சி.ஆர்.பி அறிக்கை சொல்கிறது. இதில் ஹிண்டன்பெர்க் அறிக்கையை விட அதிகம் தகவல்களை அளித்திருக்கிறது. அதனால், விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த அறிக்கையின் பாதிப்பை பங்கு சந்தைகள் உணர்ந்ததால் பயங்கரமான சரிவை சந்தித்துள்ளதாக செய்திகள் வெளிவந்தது. அதாவது, சில நிமிடங்களிலே அதானியின் பங்கு வீழ்ந்துள்ளது எனத் தெரிவிக்கிறது. 

 

அதானி தரப்பில் இருந்து ஹிண்டன்பெர்க் அறிக்கைக்கு, "அதானியின் வளர்ச்சியைக் கண்டு பொறுக்க முடியாதவர்கள், அதானியின் வளர்ச்சியை பற்றி பொறாமைப் படுபவர்கள் வெளிநாட்டுடன் சேர்ந்து சதி செய்கிறார்கள்” எனக் கூறியது. ஆனால், ஹிண்டன்பெர்க் அறிக்கையில் வெளிநாடுகள் குறித்து இல்லை. இருந்தும் அதானி இதனை அவ்வாறு குற்றம் சாட்டினார். இந்த அறிக்கையின் போது வீழ்ந்ததை விட குறைவான வீழ்ச்சி தான் ஹிண்டன்பெர்க் அறிக்கை. இந்தக் குற்றச்சாட்டுகளை ஆதாரப் பூர்வமாக அவர்கள் மறுக்கவில்லை. இரண்டாவது அறிக்கை வருவதற்கு முன் பிரசவத்தில் ஊழல் செய்தது என்பதையும் வெளியே கொண்டு வந்துள்ளனர். அதில், 62% சதவீத  ஆட்களை நாம் பரிசோதனைக்கு உட்படுத்தினோம். அதாவது, பிரசவத்திற்கு ஈடுபட்டுள்ள ஏஜென்சி மற்றும் அதன் முறைகேடுகளை விசாரிக்கையில், நூற்றுக்கு அறுபத்தி இரண்டு பேரை கணக்கில் எடுத்தோம். அவர்களில் 38% ஆண்கள் பிரசவித்துள்ளார்கள் என தெரிந்தது. இந்த ஏஜென்சி தான், அந்த அதானியின் 22 பினாமி நிறுவனத்தில் ஒன்று. இதுபோன்று இன்சுரன்ஸ் முறைகேடு நடந்துள்ளது. அதில், அந்த பகுதியில் உள்ள விவசாயிகளை விட நிறைய நபர்களுக்கு இன்சுரன்ஸ் செய்ததாகவும் பணப் பட்டுவாடா போன்றவை நடந்துள்ளதும் தெரிய வருகிறது. இதுவும் அந்த பினாமி நிறுவனங்களில் ஒன்று தான். ஹிண்டன்பெர்க் அறிக்கையில் ஆதாரங்களோடு குற்றம்சாட்டியதே சதி என்று சொன்னவர் அதானி. உலக மூலதனத்தில் கணிசமான தொகையை ஆட்டையைப் போடுகிறார்கள் என தெரியவந்தது. அவர்களை மறுப்பு அறிக்கை விடுக்கத் தள்ளியுள்ளது. அந்த இரண்டு நபர்களை விசாரித்தால், பண மதிப்பிழப்பு முறைகேடுகளை விட அதிக முறைகேடு நடந்தது வெளிச்சத்திற்கு வரும். அதானி சந்தித்திருக்கும் மிகப்பெரிய பங்குச் சந்தை வீழ்ச்சி இது என செபியின் ஆடிட்டர்கள் அறிக்கையை எழுதுகிறார்கள். 

 

சனிக்கிழமை மாலை மும்பையில் எதிர்க்கட்சிகளின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்தது. இது குறித்து எதிர்க்கட்சிகள் வலிமையான குரல் எழுப்பும் இயக்கம் நடத்தவும் தயாராக உள்ளது. ஏற்கனவே, செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி வரை பெரிய எதிர்ப்பிற்கு இந்திய கூட்டணி ஆட்கள் முயன்றுள்ளனர். மகாராஷ்டிராவில் நிலங்களை கடுமையான முறையில் அபகரித்து தொழிற்சாலைகளை கட்டுவதற்கு அதானி குழுமம் முயற்சித்தது. தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளனர். அதனால் நிச்சயம் எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டு இயக்கம் நடத்தும். அதேபோல, அதானியை பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் ஒன்றிய அரசுக்கு இருக்கிறது என்றே நாம் பார்க்க வேண்டும். இவர்கள் எப்படி அவர்களை காப்பாற்றுவார்கள் என்பதனை காலம் தான் விளக்கும்.

 


 

Next Story

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள்'-தமிழிசை பேட்டி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024

 

nn

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள் எதிர்க்கட்சிகள்' என தமிழிசை சௌந்தரராஜன்  தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜகவின் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''பாஜக வெறுப்பு அரசியல் பேசுகிறது என தீவிரமாக பிரச்சாரம் செய்கிறார்கள். மோடி எந்த வெறுப்பையும் சொல்லவில்லை. இன்னும் சொல்லப் போனால் 2016-ல் இருந்து 2020 வரை இதுவரை எந்த பிரதமரும் சிறுபான்மை மக்களுக்கு கொடுக்காத அளவிற்கு சிறுபான்மை மக்களுக்கு மோடி ப்ரோக்ராம் கொடுத்துள்ளார். புதுச்சேரியில் ஆளுநராக இருந்தால் எனக்கு தெரியும். சிறுபான்மை மக்களுக்கு ஸ்கில் டெவலப்மெண்ட், உதவித்தொகை என சிறுபான்மை மக்களை உயர்த்துவதில் இதுவரை எந்த பிரதமரும் பாடுபடாத அளவுக்கு மோடி பாடுபட்டு இருக்கிறார். அதை பொறுத்துக் கொள்ளாமல் இவர்கள் இப்படி பேசுகிறார்கள்.

சிறுபான்மை மக்களுக்கு யார் அதிகம் உதவி செய்திருக்கிறார்கள்; அவர்கள் முன்னேறும் திட்டத்திற்கு யார் அதிகம் பாடுபட்டு இருக்கிறார்கள் என்றால் அது பிரதமர் மோடி தான். இதை பொறுத்துக் கொள்ளாமல் தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள். தமிழ்நாட்டில் பல வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கிறது என்று நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆளுங்கட்சி அதற்கு செவிசாய்க்க மாட்டேன் என்கிறார்கள்.இதனால் மாநில தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது என்று சொல்ல முடியுமா? அந்தந்த தேர்தல் அதிகாரிகள் முடிவெடுக்கிறார்கள். நாம் என்ன சொல்கிறோமோ அதைத்தான் தேர்தல் அதிகாரிகளும் சொல்ல வேண்டும் என எதிர்பார்ப்பது அரசியலில் அவசியம் கிடையாது.

மணிப்பூர் பிரச்சனை இன்றைய நேற்றைய பிரச்சனை இல்லை. மணிப்பூர் பிரச்சனையில் பல உள் விவகாரங்கள்  இருக்கிறது. இவையெல்லாம் சரி செய்யப்பட வேண்டும் என்பது அனைவரின் ஆசை. யாருக்கும் எங்கும் கலவரம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஆனால் கலவரத்தை அரசியலாக்கும் எண்ணத்தில் எதிர்க்கட்சிகள் செயல்படுகின்றன என்பதுதான் எங்களுடைய குற்றச்சாட்டு. அரசு அதிகாரிகள் வீட்டிலேயே சில இடங்களில் போதைப் பொருட்கள் வைப்பதற்கு உதவி செய்திருக்கிறார்கள் என்பது தொடர்பான செய்திகள் பெரும் சோகத்தை தருகிறது. கண்ணகி நகரில் நான் போகும்போது பெண்கள் வைத்த முதல் கோரிக்கை இங்கு உள்ள கஞ்சா பழக்கத்தையும், போதை பழக்கத்தையும் தடுக்க வேண்டும் என்பதுதான். அங்குள்ள இளைஞர்களுக்கு மறுவாழ்வு மையங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்பது தாய்மார்களின் கோரிக்கையாக உள்ளது'' என்றார்.

Next Story

அமேதி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியா? பதிலளித்த கார்கே

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Kharge replied Rahul Gandhi Contest in Amethi Constituency?

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 88 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில் கேரளாவில் 20, கர்நாடகாவில் 14, ராஜஸ்தானில் 13, மத்தியப் பிரதேசத்தில் 6, மகாராஷ்டிராவில் 8, உத்தரப் பிரதேசத்தில் 8, அசாமில் 5, பீகாரில் 5, சத்தீஸ்கரில் 3, மேற்கு வங்கத்தில் 3, ஜம்மு காஷ்மீர் மற்றும் திரிபுராவில் தலா 1 தொகுதிகள் என மொத்தம் 88 தொகுதிகள் தேர்தல் நடைபெற்றது. 

இதற்கிடையில், கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியிலும், கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் ராகுல் காந்தி போட்டியிட்டார். இதில், அமேதி தொகுதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணியிடம் தோல்வி அடைந்தார். அதே நேரம் வயநாடு தொகுதியில் அதிகபட்ச வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி வெற்றி பெற்றார். இந்த நிலையில்,  இந்த மக்களவைத் தேர்தலில் கேரளா மாநிலம், வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி காங்கிரஸ் சார்பாக போட்டியிடுகிறார். அதே சமயம், ராகுல் காந்தி கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி தொகுதியில் மீண்டும் போட்டியிடுவாரா? என்று கேள்வி் பலரிடம் இருந்தும் எழுந்து வருகின்றது. அதே நேரத்தில், அமேதி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பெயரை வெளியிடாமல் காங்கிரஸ் தொடர்ந்து மெளனம் காத்து வருகிறது. 

Kharge replied Rahul Gandhi Contest in Amethi Constituency?

இந்த நிலையில், இன்று (27-04-27) காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில், ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், உத்தரப் பிரதேசத்தின் அமேதி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் யார்? என்பது குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கிடையில்,  காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். 

அப்போது அவர், “பிரதமர் மோடி தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை. ஆனாலும், மோடி நாட்டுக்காக நிறைய வேலை செய்துள்ளார் என்று கூறுகிறார். நான் அதிகம் பேச விரும்பவில்லை. காங்கிரஸ் இந்தியாவை சுதந்திரமாக்கியவர்களின் கட்சி. இந்தியாவின் சுதந்திரத்திற்காகவும், இந்தியாவின் வளர்ச்சிக்காகவும் பா.ஜ.க ஒருபோதும் போராடவில்லை. இந்த நாட்டைக் கட்டியெழுப்பினோம். நேருவுக்கு ஒன்றுமில்லை, இந்திரா காந்தி ஒன்றுமில்லை, லால்பகதூர் சாஸ்திரி ஒன்றுமில்லை, மோடிதான் எல்லாம் என தேசப்பற்றைப் பற்றி பாஜகவினர் எவ்வளவோ பேசுகிறார்கள்.

2014க்குப் பிறகு இந்தியா சுதந்திரம் அடைந்தது, அதற்கு முன் நாடு சுதந்திரம் அடையவில்லை என்ற எண்ணத்தை கூட வைத்துள்ளார்கள். இவை அனைத்தும் அவரது வார்த்தைகளில் பிரதிபலிக்கின்றன. இதில் வருத்தம் என்னவென்றால், காங்கிரஸ் கட்சியால் வளர்க்கப்பட்டு, தலைவர்களாக மாறியவர்களும் இதையே சொல்கிறார்கள். காங்கிரஸ் மிகவும் மோசமாக இருந்திருந்தால், உங்கள் வாழ்நாளில் 30-40 வருடங்களை ஏன் தேவையில்லாமல் செலவழித்தீர்கள்?. இவர்களுக்கு என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. ஆனால் அவர்களும் இந்திரா காந்தி, சோனியா காந்தி, ராகுல் காந்தியை விமர்சிக்கிறார்கள் எனப் பேசினார். இதனையடுத்து, அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் காங்கிரஸ் சார்பாக யார் போட்டியிடுவார்கள் என செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த கார்கே, “சில நாட்கள் பொறுத்திருங்கள். எல்லாம் தெளிவாகிவிடும்” எனக் கூறினார்.