Skip to main content

பெரியார் பல்கலை வினாத்தாளில் இன்னொரு மாபெரும் வரலாற்றுப்பிழை!

Published on 17/07/2022 | Edited on 17/07/2022

 

 Another huge historical error in Periyar University question paper!

 

பெரியார் பல்கலைக்கழகம் வழங்கிய வினாத்தாளில் சாதி சார்ந்த கேள்வி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதே வினாத்தாளில் மாபெரும் வரலாற்றுப் பிழையுடன் மற்றொரு வினாவும் கேட்கப்பட்டு உள்ளது.

 

சேலம் கருப்பூரில் பெரியார் பல்கலை செயல்பட்டு வருகிறது. இத்துடன் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த 113 கலை, அறிவியல் கல்லூரிகள் இணைவு பெற்றுள்ளன.

 

பல்கலையில் முதுகலை படிப்பு படித்து வரும் மாணவர்களுக்கு கடந்த ஜூன் மாதம் முதல் இரண்டாவது செமஸ்டர் தேர்வுகள் நடந்து வருகின்றன. எம்.ஏ., வரலாற்றுத்துறை மாணவர்களுக்கு ஜூலை 14ம் தேதி, 'கி.பி. 1880 முதல் 1947 வரையில் தமிழ்நாட்டில் விடுதலை போராட்டம்' என்ற பாடத் தேர்வு நடந்தது.

 

இதில், பகுதி-அ, ஒரு மதிப்பெண் பிரிவில், வரிசை எண்.11ல், 'தமிழ்நாட்டில் உள்ள தாழ்த்தப்பட்ட சாதி எது?' என்ற வினா கேட்கப்பட்டு இருந்தது. அதற்கு மகர், நாடார், ஈழவர், ஹரிஜன் என நான்கு விடை வாய்ப்புகள் வழங்கப்பட்டு இருந்தன. தேர்வில், சாதி சார்ந்த வினா கேட்கப்பட்டது மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள், அரசியல் கட்சியினர் என அனைத்து தரப்பினரிடமும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தின.

 

 Another huge historical error in Periyar University question paper!

 

சாதி சார்ந்த கேள்வி என்பது மட்டும் ஆட்சேபனைக்குரியது என்றில்லாமல், அரசியலமைப்புச் சட்டத்திலிருந்தே நீக்கப்பட்ட 'ஹரிஜன்' என்ற சொல்லை விடைகளுள் ஒன்றாக வழங்கப்பட்டதும் விவாதத்தை ஏற்படுத்தியது.

 

மேலும், தாழ்த்தப்பட்ட என்றும் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஷெட்யூல் கேஸ்ட் என்பதை ஆதிதிராவிடர் அல்லது பட்டியல் சமூகத்தினர் என்றுதான் குறிப்பிட வேண்டும் என்கிறது அரசாணை.

 

முன்பு, நாடார் சாதி, பட்டியல் சமூகத்தின் பிரிவில் வைக்கப்பட்டு இருந்தது. அதனால் அவர்களைக் குறி வைத்து இப்படியொரு வினா தயாரிக்கப்பட்டு இருக்கலாம் என்றும் சிலர் சந்தேகத்தை கிளப்பி விட்டுள்ளனர்.

 

சர்ச்சைகள் இறக்கை கட்டி பறக்கத் தொடங்கியவுடன், பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் வருத்தம் தெரிவித்தோடு, வினாத்தாள் வடிவமைப்பில் பின்பற்றக்கூடிய நடைமுறைகள் குறித்து நீண்ட விளக்கமும் கொடுத்துள்ளது.

 

இது ஒருபுறம் இருக்க, இதே வினாத்தாளில் ஒரு மதிப்பெண் பிரிவில், வரிசை எண்.10ல், 'பெரியார் என்ற பட்டத்தை ஈ.வெ.ரா.வுக்கு வழங்கியவர் யார்?' என்ற வினாவும் கேட்கப்பட்டு உள்ளது.

 

இந்த வினாவுக்கு, சரோஜினி நாயுடு, டாக்டர் தர்மாம்பாள், முத்துலட்சுமி ரெட்டி, அன்னிபெசன்ட் ஆகிய நான்கு விடை வாய்ப்புகள் வழங்கப்பட்டு உள்ளன. உண்மையைச் சொல்லப்போனால் இந்த நான்கு விடை வாய்ப்புகளுமே முற்றிலும் தவறானது ஆகும்.

 

 Another huge historical error in Periyar University question paper!

 

ஈ.வெ.ரா.வுக்கு 'பெரியார்' என்ற பட்டத்தை வழங்கியவர், அன்னை மீனாம்பாள் அம்மையார் ஆவார். பெண் விடுதலை, சாதி ஒழிப்பு போராட்டங்களில் தவிர்க்க முடியாத சக்தியாக திகழ்ந்தவர், அன்னை மீனாம்பாள். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த சிவராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

 

நீதிக்கட்சி மற்றும் சுயமரியாதை இயக்கத்தில் பெண் தலைவர்களுள் முக்கியமானவராக இருந்தார். 1938ம் ஆண்டு நவ. 13ம் தேதி, சென்னையில் நடந்த தமிழ்ப்பெண்கள் மாநாட்டில்தான், ஈ.வெ.ரா.வுக்கு 'பெரியார்' என்ற பட்டத்தை அன்னை மீனாம்பாள் வழங்கினார்.

 

இதே மாநாட்டில் டாக்டர் தர்மாம்பாள் கலந்து கொண்டார். அதனால் அவருடைய பெயரை விடை வாய்ப்புகளுள் ஒன்றாக, வினாத்தாளை வடிவமைத்த ஆசிரியர் குழு சேர்த்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

 

முன்னத்தி ஏர் போல, சாதி சார்ந்த கேள்விக்கு மட்டும் Ôசெலக்டிவ்Õ ஆக யாரோ ஒருவர் பொங்கியெழ, அதையே சமூக ஆர்வலர்களும், அரசியல் கட்சியினரும் கண்டனம் என்ற பெயரில் வழிமொழிந்துள்ளனர்.

 

அதே வினாத்தாளில், சர்ச்சைக்குரிய வினாவுக்கு முந்தைய வினா, பெரியார் பற்றி கொஞ்சமும் அடிப்படை ஞானமின்றி, பிழையாக கேட்கப்பட்டு இருந்ததை ஒருவர் கூட கண்டுகொள்ளாமல் கடந்து போனதுதான் ஆகப்பெரிய வியப்பு எனலாம்.

 

இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால், வரிசை எண். 11ல் கேட்கப்பட்ட சாதி பற்றிய கேள்விக்கு மட்டும் வருத்தம் தெரிவித்து நீட்டி முழங்கிய பெரியார் பல்கலை, பெரியார் பற்றிய தவறான கேள்வியை கவனத்தில் கொள்ளாமல் கடந்து போனதை என்னவென்று சொல்வது எனத் தெரியவில்லை.

 

வினாத்தாள் வடிவமைக்கப்பட்ட பிறகு, அச்சகத்திற்கு கொடுக்கப்பட்டு, அங்கிருந்து தேர்வுக்கூடத்திற்குச் செல்லும் வரை பல்கலை துணைவேந்தர் முதல் தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் வரை எவர் ஒருவருக்கும் அதை முன்கூட்டியே பிரித்துப் பார்க்கும் அதிகாரம் இல்லை எனக்கூறும் பல்கலை நிர்வாகம், சர்ச்சை எழுந்த பிறகும் கூட வினாத்தாளை முழுமையாக ஆய்வு செய்யாமல் அரைகுறையான விளக்கம் கொடுக்கலாமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

 

வரலாற்றுத்துறை தேர்வுக்கான வினாத்தாளையே வரலாற்றுப் பிழையுடன் எழுதியது எவரோ அவரையும், கூர்ந்தாய்வின்போது கூட கண்டுகொள்ளாமல் அலட்சியமாக செயல்பட்ட குழுவினரையும் பணியில் இருந்தே அப்புறப்படுத்த வேண்டும் என்ற குரலும் பலமாக ஒலிக்கத் தொடங்கி இருக்கிறது.






 

சார்ந்த செய்திகள்

Next Story

பெரியார் பல்கலை. பதிவாளர் விவகாரம்; உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி!

Published on 28/02/2024 | Edited on 28/02/2024
Periyar University Registrar Matters The High Court questions

'பியூட்டர் பவுண்டேஷன்' என்ற தனியார் நிறுவனத்தை தொடங்கி பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தராக இருக்கக்கூடிய ஜெகநாதன் மற்றும் பதிவாளர் பொறுப்பு வகித்த தங்கவேல், இணை பேராசிரியராகப் பணியாற்றி வந்த சதீஷ், பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியராக இருந்த ராம் கணேஷ் ஆகியோர் கல்விக் கட்டணம் பெற்று மோசடி செய்ததாக புகார்கள் எழுந்தன. இதனடிப்படையில் பெரியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்த தொழிலாளர் சங்க சட்ட ஆலோசகர் இளங்கோவன் கொடுத்த புகாரில் சேலம் கருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனை கைது செய்தனர். ஜாமீனில் வெளிவந்த ஜெகநாதன் மீண்டும் துணை வேந்தராகப் பணியாற்றி வருகிறார்.

அதே சமயம் பல்கலைக்கழகத்தின் பதிவாளராகவும் கணினி அறிவியல் துறைக்கு தலைவராகவும் பணியாற்றி வந்த தங்கவேல், தனது துறைக்குத் தேவையான கணினி, இணைய சேவைக்கான பொருட்களை வாங்கியதில் முறைகேடு செய்ததாகவும், ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கு நடத்தப்படும் திறன் மேம்பாட்டு பாடத் திட்டங்களில் பெரும் முறைகேடு நிகழ்ந்துள்ளதாகவும் புகார் எழுந்தது. இந்த முறைகேடு தொடர்பாக எழுந்த புகாரின் பேரில் தணிக்கைக் குழு ஆய்வு செய்திருந்தது. இந்த ஆய்வில் முறைகேட்டில் தங்கவேல் ஈடுபட்டது நிரூபணமானது.

அதன்பின்னர் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேலை பணியிடை நீக்கம் செய்ய பல்கலைக்கழக துணை வேந்தருக்கு தமிழக அரசு கடந்த 7 ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது. பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த அமைக்கப்பட்ட அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் பழனிசாமி குழு அறிக்கை அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை தமிழக உயர்கல்வித் துறைச் செயலாளர் கார்த்திக் பிறப்பித்திருந்தார். இருப்பினும் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் பதிவாளர் தங்கவேலை பணியிடை நீக்கம் செய்யாமல் இருந்து வந்தார். இதற்கு ஆசிரியர் சங்கங்களை சேர்ந்தவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதனையடுத்து பதிவாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு கணினி அறிவியல் துறை தலைவராக உள்ளார். அதே சமயம் தங்கவேல் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் கேட்டு துணைவேந்தர் ஜெகநாதன் உயர்கல்வித் துறைக்கு கடிதம் எழுதி இருந்தார். இது தொடர்பாக தமிழக உயர்கல்வித் துறைச் செயலாளர் கார்த்திக், துணை வேந்தருக்கு மீண்டும் எழுதியிருந்த கடிதத்தில், “பதிவாளராக இருந்த தங்கவேலு மீதான குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்கள் அனுப்பப்பட்டுள்ளது. தங்கவேல் மீது 8 புகார்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே தங்கவேலுவை பணியிடை நீக்கம் செய்ய நடவடிக்கை எடுத்து அரசுக்கு தெரிவிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Periyar University Registrar Matters The High Court questions

இதற்கிடையே பணிநீக்கம் தொடர்பான உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பதிவாளராக இருந்த தங்கவேல் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு இன்று (28.02.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தங்கவேல் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஐசக் மோகன்லால், “பல்கலைக்கழகம் என்பது தனிச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது. இதில் சிண்டிகேட், செனட் உறுப்பினர்கள் உள்ளனர். மனுதாரர் 34 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டவர். நாளை ஓய்வு பெற உள்ள நிலையில் பணிநீக்கம் செய்வது தொடர்பான பரிந்துரை தங்கவேலுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே பணிநீக்கம் தொடர்பான பரிந்துரைக்கு தடை விதிக்க வேண்டும்” என வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி இளந்திரையன், “உயர் கல்வித்துறை செயலாளரின் பரிந்துரை குறித்து பல்கலைக்கழக நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது” எனக் கேள்வி எழுப்பினார்.

Periyar University Registrar Matters The High Court questions

இதற்குப் பதிலளித்த தற்போதைய பதிவாளர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சந்திரகுமார், “பணி நீக்கம் குறித்து பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் நிர்வாகம் தான் முடிவெடுக்க வேண்டும். இது தொடரான பரிந்துரை சிண்டிகேட் குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, “நிதி முறைகேடு புகார் தொடர்பான விசாரணை அறிக்கையைத் தமிழக அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். உயர் கல்வித்துறை செயலாளரின் பரிந்துரை மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் துணைவேந்தர் தமிழக அரசிடம் விளக்கம் கேட்டது ஏன்? முறைகேடு புகார் தொடர்பாக சேலம் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேல் மீது துணைவேந்தர் உரிய நடவடிக்கை எடுக்கலாம். மார்ச் 14 ஆம் தேதி இந்த வழக்கு தொடர்பான உத்தரவு பிறப்பிக்கப்படும்” எனத் தெரிவித்தார். பதிவாளராக இருந்த தங்கவேல் நாளையுடன் (29.02.2024) பணி ஓய்வு பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

பெரியார் பல்கலை. பதிவாளர் விவகாரம்; உயர் கல்வித்துறை அதிரடி உத்தரவு

Published on 27/02/2024 | Edited on 27/02/2024
Periyar University. Registrar Matters; Higher Education Action Order

'பியூட்டர் பவுண்டேஷன்' என்ற தனியார் நிறுவனத்தை தொடங்கி பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தராக இருக்கக்கூடிய ஜெகநாதன் மற்றும் பதிவாளர் பொறுப்பு வகித்த தங்கவேல், இணை பேராசிரியராகப் பணியாற்றி வந்த சதீஷ், பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியராக இருந்த ராம் கணேஷ் ஆகியோர் கல்விக் கட்டணம் பெற்று மோசடி செய்ததாக புகார்கள் எழுந்தன. இதனடிப்படையில் பெரியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்த தொழிலாளர் சங்க சட்ட ஆலோசகர் இளங்கோவன் கொடுத்த புகாரில் சேலம் கருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனை கைது செய்தனர். ஜாமீனில் வெளிவந்த ஜெகநாதன் மீண்டும் துணை வேந்தராகப் பணியாற்றி வருகிறார்.

அதே சமயம் பல்கலைக்கழகத்தின் பதிவாளராகவும் கணினி அறிவியல் துறைக்கு தலைவராகவும் பணியாற்றி வந்த தங்கவேல், தனது துறைக்குத் தேவையான கணினி, இணைய சேவைக்கான பொருட்களை வாங்கியதில் முறைகேடு செய்ததாகவும், ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கு நடத்தப்படும் திறன் மேம்பாட்டு பாடத் திட்டங்களில் பெரும் முறைகேடு நிகழ்ந்துள்ளதாகவும் புகார் எழுந்தது. இந்த முறைகேடு தொடர்பாக எழுந்த புகாரின் பேரில் தணிக்கைக் குழு ஆய்வு செய்திருந்தது. இந்த ஆய்வில் முறைகேட்டில் தங்கவேல் ஈடுபட்டது நிரூபணமானது.

அதன்பின்னர் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேலை பணியிடை நீக்கம் செய்ய பல்கலைக்கழக துணை வேந்தருக்கு தமிழக அரசு கடந்த 7 ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது. பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த அமைக்கப்பட்ட அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் பழனிசாமி குழு அறிக்கை அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை தமிழக உயர்கல்வித் துறைச் செயலாளர் கார்த்திக் பிறப்பித்திருந்தார். இருப்பினும் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் பதிவாளர் தங்கவேலை பணியிடை நீக்கம் செய்யாமல் இருந்து வந்தார். இதற்கு ஆசிரியர் சங்கங்களை சேர்ந்தவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

Periyar University Registrar Matters Higher Education Action Order

இதனையடுத்து பதிவாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு கணினி அறிவியல் துறை தலைவராக உள்ளார். அதே சமயம் தங்கவேல் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் கேட்டு துணைவேந்தர் ஜெகநாதன் உயர்கல்வித் துறைக்கு கடிதம் எழுதி இருந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் தமிழக உயர்கல்வித் துறைச் செயலாளர் கார்த்திக், துணை வேந்தருக்கு மீண்டும் எழுதியுள்ள கடிதத்தில், “பதிவாளராக இருந்த தங்கவேலு மீதான குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்கள் அனுப்பப்பட்டுள்ளது. தங்கவேல் மீது 8 புகார்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே தங்கவேலுவை பணியிடை நீக்கம் செய்ய நடவடிக்கை எடுத்து அரசுக்கு தெரிவிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 29 ஆம் தேதியுடன் ஓய்வு பெற இருக்கும் நிலையில், தங்கவேலை பணியிடை நீக்கம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டு மீண்டும் கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.