Skip to main content

விமர்சனம் செய்த மாளவிகா; பதிலடி கொடுத்த நயன்தாரா

Published on 22/12/2022 | Edited on 22/12/2022

 

nayanthara replied to malavika mohanan criticize

 

'ரௌடி பிக்சர்ஸ்' தயாரிப்பில் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள 'கனெக்ட்' படம் இன்று (22.12.2022) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. 'மாயா' திரைப்படத்தை இயக்கிய அஷ்வின் சரவணன் இயக்கியுள்ள இப்படத்தில் சத்யராஜ், அனுபம் கெர், ஹனியா நபிஷா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

 

முன்னதாக நடிகை மாளவிகா மோகனன் ஒரு பேட்டியில் நயன்தாராவை குறித்து அவர் பெயர் குறிப்பிடாமல் விமர்சனம் செய்திருந்தார். "ஒரு முன்னணி நடிகை மருத்துவமனை காட்சியில் ஃபுல் மேக்கப் போட்டு, ஒரு முடி கூட கலையாமல் இருக்கிறார். சாகும் தறுவாயில் இருக்கும் ஒருவர் எப்படி அப்படி இருக்க முடியும். கமர்ஷியல் படமாக இருந்தாலும் ஒரு சின்ன ரியலிஸ்டிக் கூட வேண்டாமா" எனக் கூறியிருந்தார். 

 

இந்த நிலையில், நயன்தாரா ஒரு பேட்டியில் மாளவிகா மோகனன் கூறிய விமர்சனத்திற்கு பதில் அளித்துள்ளார். அவர் கூறுகையில், "ஒரு நேர்காணலில் பார்த்தேன். ஒரு நடிகை என் பெயர் குறிப்பிடாமல் நான் நடித்த காட்சி குறித்து விமர்சித்திருந்தார். மருத்துவமனை காட்சியில் பக்காவாக இருக்க வேண்டுமென்று நான் சொல்ல வரவில்லை. ஆனால், முடியெல்லாம் கலைந்துபோயா அங்கு இருக்க முடியும். நிஜத்தில் மருத்துவமனைக்கு சென்றால் கூட முடியெல்லாம் இணைத்து கட்டிவிட்டு விடுவார்கள். 

 

கமர்ஷியல் படத்துக்கும் ரியலிஸ்டிக் படத்துக்கும் பெரிய வித்தியாசங்கள் இருக்கின்றன. ரியலிஸ்டிக் படங்கள் நடிக்கும் போது அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றது போல் நம்மால் முடிந்த மெனக்கெடல்களை முயற்சிக்கலாம். ஆனால் அந்த நடிகை குறிப்பிட்டது கமர்ஷியல் படம். அதில் என் இயக்குநர் என்ன கேட்கிறாரோ, அதைத் தான் நான் கொடுக்க முடியும். அந்தந்த படத்திற்கு ஏற்றது போலத்தான் நாம் நடிப்பைக் கொடுக்க முடியும். அது படத்திற்கு ஏற்றது போல் மாறுபடும்" எனக் கூறியுள்ளார். 

 

மாளவிகா மோகனன் மற்றும் நயன்தாரா இருவரும் பெயரைக் குறிப்பிடாமல் பேசியிருந்தாலும், அவர்கள் பேசிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“ஜெய் ஸ்ரீராம்...” - வருத்தம் தெரிவித்த நயன்தாரா  

Published on 19/01/2024 | Edited on 19/01/2024
Nayanthara expresses regret over Annapoorani film issue

நயன்தாரா, ஜெய் உள்ளிட்ட பலர் நடிப்பில் அறிமுக இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான அன்னபூரணி படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனமே பெற்றது. இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் 29 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அன்னபூரணி படம் வெளியான நிலையில், இப்படத்தில் கடவுள் ராமர் அசைவம் சாப்பிட்டதாக வரும் ஒரு காட்சியை குறிப்பிட்டு, இப்படம் மத உணர்வைப் புண்படுத்தும் விதமாக இருப்பதாக மும்பையைச் சேர்ந்த சிவசேனா முன்னாள் தலைவர் ரமேஷ் சோலங்கி என்பவர், மும்பை எல்டி மார்க் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். 

அதனடிப்படையில் நயன்தாரா, ஜெய், நிலேஷ் கிருஷ்ணா உள்ளிட்ட படக்குழுவினர் சிலர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். பின்பு இப்படத்துக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் இந்து அமைப்பைச் சார்ந்தவர்கள் படத்தை தடை செய்யவேண்டும் எனப் பதிவிட்டு வந்தனர். மேலும் மும்பையில் உள்ள நெட்ஃபிளிக்ஸ் அலுவலகத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். பிறகு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இப்படம் நீக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அன்னப்பூரணி படத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். 

இந்த நிலையில் நடிகை நயன்தாரா இது குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஜெய் ஸ்ரீராம் என்று குறிப்பிட்டு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ எனது நடிப்பில் வெளியான 'அன்னபூரணி' திரைப்படம் கடந்த சில நாட்களாக பேசு பொருளாகியிருப்பது குறித்து கனத்த இதயத்துடனும் சுய விருப்பத்துடனும் இந்த அறிக்கையை வெளியிடுகிறேன். 

'அன்னபூரணி' திரைப்படத்தை வெறும் வணிக நோக்கத்துக்காக மட்டுமல்லாமல் ஒரு நல்ல கருத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு முயற்சியாகவே பார்த்தோம். மன உறுதியோடு போராடினால் எதையும் சாதிக்கலாம் என்பதை உணர்த்தும் வகையிலேயே 'அன்னபூரணி' திரைப்படத்தை நாங்கள் உருவாக்கினோம். அன்னபூரணி வாயிலாக ஒரு நேர்மறையான கருத்தை விதைக்க விரும்பிய நாங்கள் எங்களை அறியாமலேயே சிலரது மனங்களை புண்படுத்தியிருப்பதாக உணர்ந்தோம்.

தணிக்கை குழுவால் சான்றளிக்கப்பட்டு திரையரங்கில் வெளியான ஒரு படம் ஓடிடியில் இருந்து நீக்கப்பட்டது நாங்கள் சற்றும் எதிர்பாராத ஒன்று. மற்றவர் உணர்வை புண்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கும் எனது குழுவுக்கும் துளியும் இல்லை. கடவுளின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டு அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் செல்வதை வழக்கமாக வைத்திருக்கும் நான் ஒருபோதும் இதை உள்நோக்கத்துடன் செய்திருக்க மாட்டேன். அதையும் மீறி உங்களின் உணர்வுகளை எந்த வகையிலாவது புண்படுத்தி இருந்தால் அதற்கு நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்னபூரணி படத்தின் உண்மையான நோக்கம் ஊக்கமும் உத்வேகமும் அளிப்பது தானே தவிர யார் மனதையும் புண்படுத்துவது அல்ல. எனது 20 ஆண்டுகால திரை பயணத்தின் நோக்கம் ஒன்றே ஒன்றுதான். அது நேர்மறையான எண்ணங்களை பரப்புவதும், மற்றவர்களிடமிருந்து நல்லவற்றை கற்றுக் கொள்வதும் மட்டுமே என்பதை மீண்டும் ஒருமுறை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்”எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

“மோசமான நடவடிக்கை” - மாளவிகா மோகனன் குற்றச்சாட்டு

Published on 03/01/2024 | Edited on 03/01/2024
malavika mohanan recent post

நடிகை மாளவிகா மோகனன் தற்போது விக்ரம் நடிக்கும் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்காக தீவிர உடற்பயிற்சியும் சிலம்ப பயிற்சியும் மேற்கொண்டார். கோலார் தங்க வயலை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் பார்வதி, பசுபதி உள்ளிட்ட பலர் நடித்திருக்க ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் வருகிற 26ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அது தள்ளிப் போக வாய்ப்புள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. 

மேலும், தெலுங்கில் பிரபாஸ் நடிப்பில் மாருதி இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் கதாநாயகியாக நடிக்க கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படி படங்களில் அடுத்தடுத்து தொடர்ந்து பிசியாக நடித்து வரும் மாளவிகா, சமூக வலைதளப்பக்கங்களில் ஆக்டிவாக இருப்பார். படங்களின் அப்டேட், புது ஃபோட்டோஷூட் புகைப்படங்கள், ஆகியவற்றை தாண்டி அவ்வப்போது சில சர்ச்சையான விஷயங்கள் குறித்தும் தனது கருத்தை முன்வைப்பார். 

இந்த நிலையில் ஒரு தனியார் விமான நிறுவனம் ஒன்றை குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஜெய்ப்பூரில் முரட்டுத்தனமாகவும் மோசமான சேவையாகவும் இருந்தது. பணியாளர் நடவடிக்கையும் மோசமாக இருந்தது” என குறிப்பிட்டுள்ளார்.