Skip to main content

வாரிசு நடிகர் படத்தின் இசையை வெளியிட்ட கே.பாக்யராஜ்!

Published on 02/02/2021 | Edited on 02/02/2021

 

vdsav

 

கிரௌன் பிக்சர்ஸ் தயாரிப்பில் எஸ்.எம்.இப்ராஹிம் வழங்கும் ‘சிதம்பரம் ரெயில்வே கேட்' படத்தின் இறுதிக்கட்ட பணிகள் அனைத்தும் முடிந்து, வரும் பிப்ரவரி 5ஆம் தேதி திரைக்கு வர தயாராக உள்ளது.

 

தற்போது இப்படத்தின் இசையானது பிரபல இயக்குனர் மற்றும் நடிகர் திரு. பாக்யராஜ் அவர்களால் வெளியிட்டுள்ளது. இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். மேலும் இசைஞானி இளையராஜா இப்படத்தில் ஒரு பாடல் பாடியுள்ளார்.

 

cvdv

 

நடிகர் மயில்சாமியின் மகன் அன்பு மயில்சாமியுடன், மாஸ்டர் மகேந்திரன் இணைந்து நடித்துள்ள இப்படத்தில் நீரஜா கதாநாயகியாக நடித்துள்ளார். இரண்டாம் நாயகியாக காயத்ரி நடித்துள்ளார். வில்லன் வேடத்தில் சூப்பர் சுப்புராயன் நடித்துள்ளார்.  மேலும் ‘லொள்ளு சபா’ மனோகர் மற்றும் ‘பிக்பாஸ்’ டேனியல் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"அப்பா ரொம்ப ஃபீல் பண்ணாரு... சாரி!" - கரோனாவில் பாக்யராஜ்! சாந்தனு விளக்கம்!

Published on 08/05/2021 | Edited on 08/05/2021

 

dgxdbdb

 

இந்தியாவில் வேகமெடுத்துவரும் கரோனா இரண்டாம் அலை ஏற்படுத்திய தாக்கத்தால், பாதிப்புக்குள்ளாவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. அதிகரிக்கும் மரணங்கள், மருத்துவமனைகளில் நிலவும் ஆக்சிஜன் மற்றும் படுக்கைகளின்மை ஆகியன மத்திய, மாநில அரசுகளுக்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளன. அதே நேரத்தில், கரோனா தொற்றில் இருந்து மீண்டு வருவோரின் எண்ணிக்கை கணிசமான அளவில் அதிகரித்துவருவது சற்று ஆறுதல் அளிக்கக்கூடிய விஷயமாக உள்ளது.

 

இந்த நிலையில், பிரபல நடிகரும் இயக்குநருமான கே. பாக்யராஜ், அவரது மனைவி நடிகை பூர்ணிமா பாக்யராஜ் இருவருக்கும் தற்போது கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவருடைய மகன் நடிகர் ஷாந்தனு தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் நேற்று (07.05.02021) பதிவிட்டார். அதில், தன் பெற்றோர் மருத்துவரின் அறிவுரையின் பேரில் வீட்டுத் தனிமையில் இருப்பதாக கூறியிருந்தார். இந்நிலையில், அவரது பெற்றோர்களுக்கு வரும் தொலைபேசி அழைப்புகள் குறித்து சாந்தனு தற்போது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில்... 

 

"Dear wellwishers

அப்பா compulsory ஓய்வுல இருக்கணும்னு Dr’s அட்வைஸ், அதான் phone’la யார்கிட்டயும் பேச முடியல.
நான் பேசலேன்னு கால் பண்ணவங்க feel பண்ணுவாங்கன்னு அப்பா ரொம்ப feel பண்ணாரு. Sorry, புரிஞ்சுக்குவீங்கன்னு தெரியும். ரெண்டு பேரும் நலமா இருக்காங்க. We will return ur calls soon" என பதிவிட்டுள்ளார்.

 

 

Next Story

கே. பாக்யராஜ் தம்பதியருக்கு கரோனா தொற்று உறுதி! 

Published on 07/05/2021 | Edited on 07/05/2021

 

gdsgdsgsdgdsgs

 

இந்தியாவில் வேகமெடுத்துவரும் கரோனா இரண்டாம் அலை ஏற்படுத்திய தாக்கத்தால், பாதிப்புக்குள்ளாவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. அதிகரிக்கும் மரணங்கள், மருத்துவமனைகளில் நிலவும் ஆக்சிஜன் மற்றும் படுக்கைகளின்மை ஆகியன மத்திய, மாநில அரசுகளுக்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளன. அதே நேரத்தில், கரோனா தொற்றில் இருந்து மீண்டு வருவோரின் எண்ணிக்கை கணிசமான அளவில் அதிகரித்துவருவது சற்று ஆறுதல் அளிக்கக்கூடிய விஷயமாக உள்ளது.

 

இந்த நிலையில், பிரபல நடிகரும் இயக்குநருமான கே. பாக்யராஜ், அவரது மனைவி நடிகை பூர்ணிமா பாக்யராஜ் இருவருக்கும் தற்போது கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவருடைய மகன் நடிகர் ஷாந்தனு தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "என் பெற்றோர் கே. பாக்யராஜ் மற்றும் பூர்ணிமா பாக்யராஜ் இருவருக்கும் இன்று கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. எங்கள் பணியாளர்கள் உட்பட அனைவரும் மருத்துவரின் அறிவுரையின் பேரில் வீட்டுத் தனிமையில் இருக்கிறோம். கடந்த 10 நாட்களில் எங்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் அனைவரும் பரிசோதித்துக்கொள்ளுங்கள். அவர்கள் சீக்கிரம் குணமடைய பிரார்த்தனை செய்யுங்கள்" என பதிவிட்டுள்ளார்.