Skip to main content

ஐ.பி.எல் ஏலம்; 8.40 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட தமிழக வீரர்

Published on 18/12/2018 | Edited on 18/12/2018

 

bvc

 

2019 ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடருக்கான ஏலம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் தமிழகத்தை சேர்ந்த 27 வயதான வருண் சக்ரவர்த்தியை 8.40 கோடி கொடுத்து பஞ்சாப் அணி எடுத்துள்ளது. சுழற்பந்துவீச்சாளரான இவர் டி.என்.பி.எல் தொடரில் மதுரைக்காக விளையாடினார். 20 லட்சத்தில் தொடங்கிய இவரின் ஏலம் மிகுந்த போட்டிக்கு பின் 8.40 கோடிக்கு பஞ்சாப் அணியால் முடிக்கப்பட்டது.  பந்துவீச்சு மட்டுமல்லாமல் பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங்கிலும் சிறப்பாக செயல்படக்கூடியவர் வருண் என்பது குறிப்பிடத்தக்கது.