Skip to main content

கொரியா தமிழ் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு

Published on 21/01/2023 | Edited on 21/01/2023

 

korieya tamil society new members selected 

 

அறிவியலாளர்கள், பொறியாளர்கள் மற்றும் தொழில் நுட்பவியலாளர்களால் உருவாக்கப்பட்ட கொரிய தமிழ்ச் சங்கம், ஆராய்ச்சி நோக்கில் தமிழ்ப்பணி, பொதுவான மக்கள் பணி, அறிவியல், சமூகம், அரசியல் தலைமைகளுடனான உரையாடல், மற்றும் கோவிட் பெருந்தொற்று கால உதவிகள் உள்ளிட்ட செயல்பாடுகள் மூலம் நன் மதிப்பை பெற்றிருக்கும் அமைப்பாகும். கொரிய தமிழ்ச் சங்கம், கொரிய வெளியுறவுத்துறை சட்டத்தின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டு அமைக்கப்பட்ட சங்கம் என்பது குறிப்பிடத்தக்கது. சங்கத்தின் சட்ட திட்டப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் உள்ளிட்ட ஆளுமைக்களின் பொறுப்பு காலம் மூன்று ஆண்டுகள் ஆகும்.

 

தமிழ்ச் சமூகத்தில் புதிய தலைமைகள் உருவாவதை ஊக்குவிக்கும் வண்ணம் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் உள்ளிட்ட முக்கிய அங்கத்தினர் ஒரு முறை மட்டுமே பொறுப்பு வகிப்பது என்கிற மரபை கொரிய தமிழ்ச் சங்கம் பின்பற்றி வருகிறது.  அவ்வகையில் முனைவர் இராமசுந்தரம் தலைமையிலான முதல் ஆளுமை குழுவின் பொறுப்பு காலம் (மார்ச் 2020 - மார்ச் 2023) நிறைவு பெறுவதால், புதிய தலைவர் உள்ளிட்ட ஆளுமை குழுவினரை தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் கடந்த 2022 நவம்பர்-டிசம்பர் காலத்தில் நடைபெற்றது.  சங்கத்தின் அறிவுரை குழுவின் உறுப்பினர்-பிரதிநிதி பேராசிரியர் இரா. அச்சுதன் தலைமையில் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டு, வேட்பு மனுக்கள் பெறப்பட்டது. அறிவிப்புகளை வெளியிடுதல் மற்றும் வேட்பு விண்ணப்பங்களை ஆய்வு செய்தல் ஆகிய பணிகளை அறிவுரைக் குழு உறுப்பினர் இரா. அச்சுதன், மூத்த உறுப்பினர்கள் பேராசிரியர்கள் காமராஜ் ஈஸ்வரன், பெருமாள் முத்துராஜ், மற்றும் தெய்வசிகாமணி இரஞ்சித் குமார் ஆகியோர் செய்தனர்.

 

தேர்தல் முடிவுகள் சங்கத்தின் மூத்த அறிவுரைக் குழு உறுப்பினர்களான முனைவர்கள் போஜன் கருணாகரன், ஆரோக்கியம் அந்தோணிசாமி, செல்லத்துரை ரத்ன சிங் மற்றும் தாமஸ் நேசக்குமார் ஜெபக்குமார் இம்மானுவேல் எடிசன் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அவர்களின் ஒப்புதல் பெறப்பட்டது. பின்பு, பொறுப்புகளுக்கான விண்ணப்பங்களை கொடுத்திருந்தோர், பணிநிறைவு பெறும் தலைவர் முனைவர் இராமசுந்தரம் உள்ளிட்ட ஆளுமை குழுவினர், கொரிய புரவலர் திரு யு சே கியொங், திருமதி கிம் உன் சுக், தமிழ்நாட்டின் மூத்த ஊடகவியலாளரும், பதிப்பாளரும், எழுத்தாளருமான திரு. ஆதனூர் சோழன், மற்றும் பொது ஊடக பேச்சாளரும் அரசியல் தலைவருமான திரு காரை செல்வராஜ் உள்ளிட்ட பொது பார்வையாளர்கள், ஆகியோர் தேர்தல் பணிக் குழுவால் அழைக்கப்பட்டு பொது நிகர்நிலை காணொளி மூலம் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது.இந்த முடிவுகளை அனைவரும் ஏற்றுக் கொண்டதன் அடிப்படையில், உரிய அலுவலக நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டது.  இந்த நடைமுறைகள் தைத்திங்கள் 5-ம் நாளன்று (19 பிப்ரவரி 2023) முழுமையாக நிறைவுபெற்றதன் பேரில் சங்கத்தின் புதிய தலைவர் உள்ளிட்ட தகவல்கள் தற்பொழுது பொதுவெளிக்கு அறியத்தரப்படுகிறது.

 

தலைவராக திருச்சி மாவட்டம், பெருவள்ளப்பூரை சேர்ந்த முனைவர் செல்வராஜ் அரவிந்தராஜா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் தற்பொழுது சுஒன், கொரியா, சுங்கின்வான் பல்கலைக்கழகத்தில் நானோ தொழில்நுட்ப ஆராய்ச்சியாளராக பணிபுரிகிறார்.  துணைத்தலைவராக தஞ்சை மாவட்டம், சாலியமங்கலத்தைச் சேர்ந்த திருமிகு தட்சிணாமூர்த்தி விஜயலட்சுமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இங்கு உயிர் தொழில்நுட்ப ஆராய்ச்சியாளராக பணிபுரிந்து வருகிறார். கன்னியாகுமரி மாவட்டம், இராஜாக்கமங்கலத்தை சேர்ந்த திருமிகு பீட்டர் சகாய டார்சியூஸ், செயலாளர் - உள்ளக ஆளுமை பணி - பொறுப்பிற்கு தேர்தெடுக்கப்பட்டுள்ளார். தற்பொழுது பக்சுலான் எனும் மென்பொருள் நிறுவனத்தில் (சியோல், கொரியா) ஆராய்ச்சியாளராக பணிபுரிந்து வருகிறார்.

 

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையை சேர்ந்த முனைவர் கோவிந்தராஜ் சரவணன் செயலாளர் - பொதுச் செயல்பாடுகள் - பொறுப்பிற்கு தேர்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் கச்சான் பல்கலைக்கழகத்தில் (சொங்னாம், கொரியா) உயிர் நானோ பொறியியல் துறையில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். சிவகங்கை மாவட்டம், மாங்குடியைச் சேர்ந்த முனைவர் நல்லாள் முத்துசாமி பொருளாளராக தேர்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் சியோல் ஹன்யாங் பல்கலைக்கழக்தில் ஆற்றல்தொழில்நுட்ப துறையில் ஆராய்ச்சியாளராக பணிபுரிந்து வருகிறார். இணைப் பொருளாளராக திருச்சி மாவட்டம், மணப்பாறையைச் சேர்ந்த முனைவர் பீட்டர் ஜெரோம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் அன்சான் ஹன்யாங் பல்கலைக்கழக்தில் குறைக்கடத்தி தொழில்நுட்பத்துறையில் ஆராய்ச்சியாளராக பணிபுரிந்து வருகிறார்.

 

கொரியாவில் வசித்து வரும் சென்னையைச் சேர்ந்த ஆசிரியையுமான சரண்யா பாரதிராஜா, கொரியாவில் வசிக்கும் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் மா. சாந்தி பிரின்ஸ், சேலம் ஆட்டையாம்பட்டியைச் சேர்ந்த இரா. சுவாமி ராஜன், தகவல் தொடர்பு செயலாளர் (மென்பொருள் ஆராய்ச்சியாளர், சுஒன், கொரியா) மற்றும் சென்னையைச் சேர்ந்த பொறியாளர் வேதபுரி ஹேமநாதன் (இயந்திர பொறியியல் நிபுணர், சுஒன், கொரியா) ஆகியோர், முறையே, தாயகத் தொடர்பு, மக்கள் தொடர்பு, தகவல் தொடர்பு மற்றும் கொரிய புரவலர் இணைப்புச் செயலாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இணைச் செயலாளர் பொறுப்பிற்கு முனைவர்கள் இருதய பாண்டி செலஸ்டின் இராஜா (ஆராய்ச்சியாளர், பூசான் பல்கலைக்கழகம், கொரியா. சொந்த ஊர் - தூத்துக்குடி மாவட்டம், சொக்கன்குடியிருப்பு), இராமர் இராஜா மணிகண்டன் (ஆராய்ச்சியாளர், சொங்னம் கச்சான் பல்கலைக்கழகம், கொரியா. சொந்த ஊர் - விருதுநகர் மாவட்டம், திருச்சுழி) மற்றும் ஆறுமுகசாமி சிவகுமார் (ஆராய்ச்சியாளர், சொங்னம் கச்சான் பல்கலைக்கழகம், கொரியா. சொந்த ஊர் - விருதுநகர் மாவட்டம், சிவகாசி) திருவாளர்கள் ஆஷிக் இலாஹி (ஆராய்ச்சி மாணவர், உள்சான் தொழில்நுட்ப நிறுவனம், கொரியா. சொந்த ஊர் - தஞ்சை மாவட்டம், கும்பகோணம்) ஜீவானந்தம் சம்பத் (ஆராய்ச்சி மாணவர், போகாங் பல்கலைக்கழகம், கொரியா. சொந்த ஊர் - கோயம்புத்தூர்) ஆறுமுகம் பாரதி (ஆராய்ச்சி மாணவர், யங்னம் பல்கலைக்கழகம், கொரியா. சொந்த ஊர் - கடலூர் மாவட்டம், கீழ்காங்கேயன் குப்பம்) மற்றும் திப்பன் மணிகண்டன் (ஆராய்ச்சி மாணவர், பூசான் பல்கலைக்கழகம், கொரியா. சொந்த ஊர் - நீலகிரி மாவட்டம், நந்தட்டி) ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

 

சென்னையை சேர்ந்தவரும், பொறியாளரும், தொழில்முறை சிற்பியுமான சி. தாமோதரன் கொரிய தமிழ்ச் சங்கத்தின் பன்னாட்டு தொடர்பாளராக செயல்படுவார். மேலும், சங்கத்தின் தேவைக்கேற்ப பொறுப்பாளர்களை நியமனம் செய்ய தேர்ந்தெடுக்கப்பட்ட சங்கத்தின் தலைவர் உரிமையுடையவராவார்.  எதிர்வரும் தைத்திங்கள் 29-ம் நாள் (12 பிப்ரவரி 2023) அன்று சியோல் கச்சான் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற இருக்கும் தமிழர் திருநாள் - 2023 நிகழ்வில் கொரிய வாழ் தமிழ் மக்கள் முன்னிலையில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய தலைவர் உள்ளிட்ட ஆளுமை குழுவினர் முறைப்படி பொறுப்பேற்க உள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

1857 கி.மீ. சைக்கிள் ஓட்டும் போட்டியில் வென்ற கொரியத் தமிழர்

Published on 26/02/2024 | Edited on 26/02/2024
Korean Tamil wins cycling competition

உலகம் முழுவதும் தமிழர்கள் வேலைக்கு சென்றிருக்கிறார்கள். ஆனால், பணிபுரியும் நாட்டில் இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்து, சாதனை புரிபவர்கள் மிகவும் சிலரே இருக்கிறார்கள். அப்படி பல துறைகளிலும் இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் சாதனை புரிந்த தமிழர்களைக் கவுரவிக்க, தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் விழா நடத்தி விருது வழங்குகிறது.

2023 ஆம் ஆண்டுக்கான அயலகத் தமிழர் விருது வழங்கும் விழா 2024 ஜனவரியில், சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்றது.  மூன்றாம் ஆண்டாக நடைபெற்ற இந்த அயலகத் தமிழர் மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அறிவியல், தொழில், சமூக சேவை, விளையாட்டு என 8 பிரிவுகளின் கீழ் பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்ட 14 அயலகத் தமிழர்களுக்கு விருதுகளை வழங்கினார். இதில் 58 நாடுகளில் இருந்து தமிழ் வம்சாவளியினர், அமைச்சர்கள், கல்வியாளர்கள், கவிஞர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 218 உலகத் தமிழ்ச் சங்கங்களைச் சேர்ந்த அயலகத் தமிழர்கள் பங்கேற்றனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் விருதுபெற்ற 14 அயலகத் தமிழர்களில், அவர்களில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகேயுள்ள குதிரைகுத்தி கிராமத்தைச் சேர்ந்த முனைவர் குருசாமி ராமன் தனித்த சிறப்புடையவர். இவருக்கு விளையாட்டில் சாதனை புரிந்த தமிழர் பிரிவில், தமிழ்நாடு அரசின் கணியன் பூங்குன்றனார் விருது, தங்கப் பதக்கத்துடன் பாராட்டுப் பத்திரமும் வழங்கப்பட்டது.

Korean Tamil wins cycling competition

முனைவர் குருசாமி ராமன், கொரியாவில் 1857 கிலோமீட்டர் தூரமுள்ள சைக்ளிங் கிராண்ட் ஸ்லாம் போட்டியில் வெற்றிபெற்ற முதல் இந்தியத் தமிழர் என்ற பெருமையைப் பெற்றவர். இதன்மூலம், தமிழ்நாட்டுக்கும், கொரியாவில் வசிக்கும் தமிழர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.குதிரை குத்தி கிராமத்தைச் சேர்ந்த குருசாமி – மாரியம்மாள் தம்பதியின் மகனாக, பின்தங்கிய கிராமத்தில் பிறந்த முனைவர் ராமன் தென் கொரியாவில் உள்ள யெங்ணம் பல்கலைக்கழகத்தில் ஜினோமிக்ஸ் பிரிவில் ஆராய்ச்சியாளராகவும் உதவி பேராசிரியராகவும் தென் கொரியாவில் உள்ள யெங்ணம் பல்கலையில் கடந்த பத்து வருடங்களாக பணிபுரிகிறார். முனைவர் ராமன், மனைவி பொன் அருணா மற்றும் மகள் அதிராவுடன் தென் கொரியாவில் வசித்து வருகிறார்.

Next Story

கொரிய பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த பாஜக பிரமுகர்; ஆஸ்திரேலியா நீதிமன்றம் அதிரடி! 

Published on 26/04/2023 | Edited on 26/04/2023

 

australia overseas friends of the bjp leader balesh dhankhar related court judgement

 

ஆஸ்திரேலியாவில் உள்ள  சிட்னியில் வசித்து வரும் இந்திய வம்சாவளி தொழிலதிபர் பாலேஷ் தன்கர். பாஜக பிரமுகரான இவர்  'ஓவர்சீஸ் பிரண்ட்ஸ் ஆஃப் தி  பி.ஜே.பி' எனும் பாஜகவின் வெளிநாட்டு உறுப்பினர்களுக்காக அமைப்பை உருவாக்கி அதன் தலைவராகச் செயல்பட்டு வந்தவர். இந்நிலையில் பாலேஷ் தன்கர் வீட்டில் கடந்த 2018ம் ஆண்டு போலீசார் திடீரென சோதனை மேற்கொண்டனர். அப்போது அவரது வீட்டில் பல பெண்களை பாலேஷ் தன்கர் பாலியல் வன்கொடுமை செய்து பதிவு செய்து வைத்திருந்த வீடியோக்களை போலீசார் கைப்பற்றினர். அந்த வீடியோவில் இருந்த பெண்களில் சிலர் சுயநினைவில்லாமல்  போதையில் இருந்துள்ளனர். அந்த விடீயோக்களில் இருந்தவர்களில் பெரும்பாலும் கொரிய நாட்டைச் சேர்ந்த  பெண்களாக இருக்கும் என போலீசார் கருதினர். இது மட்டுமின்றி பாலேஷ் தன்கர் மீது ஐந்து பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து தாக்கியதாக ம குற்றம் சாட்டப்பட்டது.

 

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு  இவ்வழக்கு சிட்னி நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில்  தற்போது அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்ட பாலேஷ் தன்கர் போதைப் பொருட்களை பயன்படுத்தி அதன் மூலம் பெண்களை பாலியல் கொடுமை செய்துள்ளார். இணையதளம் மூலம் பெண்களை வீட்டிற்கு வரவழைத்து  தனிமையில் இருந்ததும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில்  5 கொரிய பெண்களை தாக்கியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு வேலை தேடி வரும் கொரிய பெண்களை தன்னுடைய பாலியல் இசைக்கும் பயன்படுத்தி வந்துள்ளார். மேலும் பெண்களுக்கு மது அல்லது ஐஸ் கிரீமில்  மயக்க மருந்து கலந்து கொடுத்து தனது பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.

 

இது குறித்து இவரிடம் தட்டிக்கேட்ட பெண்களை தாக்கியுள்ளார். மேலும் தனது படுக்கை அறையில் உள்ள கடிகாரத்தில் மறைத்து வைத்திருந்த ரகசிய கேமரா மூலம் பெண்களுடன் தனிமையில் இருக்கும் காட்சிகளையும், தன்னுடன் ஒத்துழைக்காத பெண்களை தாக்கும் காட்சிகளையும் அந்த கேமிரா மூலம் பதிவு செய்துள்ளார். இதன் பதிவுகளை போலீசார் கைப்பற்றியதன் அடிப்படையில் பாலேஷ் தன்கர் குற்றவாளி என்பது உறுதியாகி உள்ளது. மேலும் அவருக்கான தண்டனை விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.