Skip to main content

காட்டு மாடு முட்டி தள்ளியதில் பெண் பலி

Published on 20/08/2022 | Edited on 20/08/2022

 

yercaud cow and women incident police investigation

 

ஏற்காட்டில் காட்டு மாடு முட்டியதில் பெண் சிகிச்சைப் பலனின்றி இறந்தார்.  

 

சேலம் மாவட்டம், ஏற்காடு பட்டிப்பாடியைச் சேர்ந்தவர் சேகர். இவருடைய மனைவி தேவி (வயது 37). இவர், வியாழக்கிழமை (ஆக. 18) ஏற்காடு நகர பகுதிக்குச் சென்றுவிட்டு, இருசக்கர வாகனத்தில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார்.  

 

அன்று மாலை 05.00 மணியளவில், நடுவூர் அருகே சென்று கொண்டிருந்தபோது, சாலையின் குறுக்கே திடீரென்று பாய்ந்து வந்த ஒரு காட்டு மாடு, தேவியை முட்டித் தள்ளியது. இதில், அவர் பலத்த காயம் அடைந்தார். கீழே விழுந்து கிடந்த அவரை அப்பகுதியினர் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.  

 

அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சை  பலனின்றி வெள்ளிக்கிழமை 03.30 மணியளவில் தேவி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ஏற்காடு காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

 


 

சார்ந்த செய்திகள்