Skip to main content

சுவரில் ரத்தக்கறை... தலையில் காயம்... தூக்கில் சடலமாக பெண் பொறியாளர்! கொலையா? போலீசார் விசாரணை!!

Published on 13/06/2022 | Edited on 13/06/2022

 

women engineer incident in salem district police investigation

 

சேலத்தில், திருமணம் ஆகி மூன்று ஆண்டுகள் ஆன நிலையில், இளம்பெண் ஒருவர் தூக்கில் சடலமாகத் தொங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுவரில் படிந்துள்ள ரத்தக்கறை, சடலத்தின் தலையின் உள்ள காயம் ஆகியவை இந்த சம்பவத்தில் பல்வேறு சந்தேகங்களை கிளப்பி இருக்கிறது.

 

சேலம் சூரமங்கலம் ரெட்டிப்பட்டியைச் சேர்ந்தவர் கீர்த்திராஜ். கோவையில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி தனஸ்ரீயா (வயது 26). பொறியியல் பட்டதாரி. இவர்களுக்கு திருமணம் ஆகி மூன்று ஆண்டுகள் ஆகின்றன. குழந்தைகள் இல்லை. 

 

இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், ஜூன் 11- ஆம் தேதி இரவு திடீரென்று வீட்டில் தனஸ்ரீயா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கீர்த்திராஜின் தந்தை, மனைவியின் பெற்றோருக்கு தகவல் அளித்தார். 

 

சூரமங்கலம் முல்லை நகரில் வசித்து வரும் தனஸ்ரீயாவின் தந்தை தியாகலிங்கம், தாயார் ராஜலட்சுமி ஆகியோர் மகள் இறந்துவிட்டதாக கிடைத்த தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். கீர்த்திராஜ்தான் தனஸ்ரீயாவை அடித்துக் கொலை செய்துவிட்டு நாடகமாடுவதாகக் கூறினர். இச்சம்பவம் குறித்து சூரமங்கலம் காவல்நிலைய காவல்துறையினர் விசாரித்தனர். தனஸ்ரீயாவின் தலையின் பின் பக்கத்தில் காயம் இருப்பதும், வீட்டு சுவரில் பல இடங்களில் ரத்தக்கறை உள்ளதும் தெரிய வந்துள்ளது. 

 

கடந்த பத்து நாள்களுக்கு முன்பு கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தனஸ்ரீயா கோபித்துக்கொண்டு, தனது பெற்றோர் வீட்டுக்குச் சென்று விட்டார். அவரை கீர்த்திராஜ் சமாதானம் செய்து, ஜூன் 11- ஆம் தேதிதான் வீட்டுக்கு அழைத்து வந்தார். அன்று இரவுதான் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது தெரிய வந்துள்ளது. எனினும், உடற்கூராய்வு அறிக்கை வந்த பிறகே இந்த மரணம் தற்கொலையா அல்லது கொலையா? என்பது தெரிய வரும் என்கிறது காவல்துறை. சடலம், கூராய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. 

 

காவல்துறையினர் கீர்த்திராஜ், அவருடைய தந்தை பெரியசாமி, தாயார் ரஞ்சனி ஆகியோரை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

திருமணம் ஆகி மூன்று ஆண்டுக்குள் தனஸ்ரீயாவின் மரணம் நடந்துள்ளதால் இதுகுறித்து சேலம் கோட்டாட்சியரும் நேரடி விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் ரெட்டிப்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 


 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.