Skip to main content

பிரசவத்திற்காக வீட்டுக்கு சென்ற மனைவி... மூன்று பெண்களை திருமணம் முடித்த கணவன்..!

Published on 05/10/2021 | Edited on 05/10/2021

 

Three marriages that took place during the period of exile ... Husband who threatened his wife with girlfriends

 

தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சிங்காரன். இவர் திருப்பூரில் உள்ள ஒரு பின்னலாடை நிறுவனத்தில் பணிபுரிந்துவந்தார். அதே பின்னலாடை நிறுவனத்தில் திருப்பூர் மாவட்டம், பாண்டியன் நகரைச் சேர்ந்த கீதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணும் பணிபுரிந்துவந்தார். இங்குப் பணிபுரிந்தபோது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இருவரும் கடந்த 2012ஆம் ஆண்டு திருமணம் முடித்துள்ளனர். திருமணம் முடிந்து இருவரும் திருப்பூரிலேயே வாழ்ந்துள்ளனர். இந்நிலையில், கீதா இரண்டாவது முறையாக கருவுற்றார். இதையடுத்து, பிரசவத்திற்காக கீதாவை தர்மபுரிக்கு அனுப்பியுள்ளார் சிங்காரன்.

 

குழந்தை பிறந்தபின்பு தர்மபுரியிலிருந்து திருப்பூர் திரும்பிய கீதா, தனது கணவரின் செயலைக் கண்டு அதிர்ந்துள்ளார். அதனைத் தொடர்ந்து தனது கணவரை திருந்துமாறு அறிவுறுத்தியும் அவர் மாறாததால் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். அந்த மனுவில், ‘எனது இரண்டாவது பிரசவத்திற்காக தர்மபுரி அனுப்பிய எனது கணவர், சில ஆண்டுகள் கழித்தும் என்னை திருப்பூருக்கு அழைக்கவில்லை. அந்த நேரத்தில் அவர் ஏற்கனவே பணிபுரிந்த நிறுவனத்தைவிட்டு வேறு நிறுவனத்திற்குச் சென்றுள்ளார். அங்கு தனது வேலையைத் தொடர்ந்துவந்த எனது கணவர், சில நாட்களில் அங்கு பணிபுரியும் ஒரு பெண்ணை திருமணம்செய்துள்ளார். சில நாட்களில் அந்தப் பெண் மரணித்த காரணத்தால், கோவையைச் சேர்ந்த வேறொரு பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார்.

 

மேலும், அதோடு நிறுத்திக்கொள்ளாமல் நான்காவதாக மதுரையைச் சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். பிரசவத்திற்கு அனுப்பிய என்னை அவர் மறந்த நிலையில் தொடர்ந்து இதுபோன்ற நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டுவந்துள்ளார். மேலும் சிங்காரம், அப்பெண்கள் ஒருவரையொருவர் தெரிந்துகொள்ளாதபடி தனித்தனியாக வாடகை வீட்டில் குடியமர்த்தி வாழ்ந்துவந்துள்ளார். அவர் சாதுர்யமாக செயல்பட்டு இவற்றை எல்லாம் மறைத்துவந்த நிலையில், நான் திருப்பூருக்குத் திடீரென வந்ததும் இவை அனைத்தும் அம்பலமானது. அவரை நான் கண்டிக்கும்போதெல்லம் திமிராக பேசியதோடு மட்டுமில்லாமல், மற்ற காதலிகளையும் வைத்து என்னை மிரட்டினார்’ என கீதா மனுவில் குறிப்பிட்டுள்ளார்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தின் போது மணமகனின் அநாகரிக செயல்; அதிரடி முடிவு எடுத்த மணப்பெண்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
The bride who broke off the wedding in kerala

கேரளா மாநிலம், பத்தனதிட்டம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 32 வயது வாலிபர். இவர் துபாயில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில், இவருக்கும் அதே மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. மேலும், இவர்களது திருமணம் அங்குள்ள ஒரு தேவாலயத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், திருமண நாள் அன்று, மணமகன் மது குடித்துவிட்டு போதையில் மணமேடைக்கு வந்து கொண்டிருந்தார். இதனைக் கண்ட, மணப்பெண் உள்பட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். மேலும், மது போதையில் இருந்த மணமகன், பாதிரியாரிடமும், மணபெண்ணின் உறவினர்களிடம் தகராறு செய்துள்ளார். இதனைக் கண்டு கோபமடைந்த மணப்பெண், திருமணம் வேண்டாம் என்று அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதனால், அவர்களது திருமணம் பாதியில் நின்றுள்ளது.

இந்த சம்பவம் குறித்து, இரு வீட்டாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால், அங்கு கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதனை கண்ட அங்கிருந்தவர்கள், இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், இரு வீட்டாரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் மணப்பெண் குடும்பத்தினர், ‘தங்களுக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்றும், திருமணத்திற்கு பெரும் தொகை செலவு செய்ததால், அந்த தொகையை நஷ்ட ஈடாக திரும்ப தர வேண்டும். இல்லையென்றால், மணமகன் மீதும், அவரது உறவினர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தனர்.

அதற்கு, மணப்பெண் குடும்பத்தினர் செலவு செய்த தொகையான 6 லட்ச ரூபாயை நஷ்ட ஈடாக திரும்ப கொடுக்க மணமகனின் குடும்பத்தினர் ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து, அனைவரும், அங்கிருந்து கலைந்து சென்றனர். இதற்கிடையே, மது போதையில் அனைவரிடமும் தகராறு செய்ததற்காக மணமகனின் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story

அதிமுக - நா.த.க.வினர் இடையே திடீர் மோதல்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Sudden issue between ADMK and ntk

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இத்தகைய சூழலில் தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் அதிமுக - நாம் தமிழர் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பாலக்கோடு காவல் நிலையம் அருகே நாம் தமிழர் கட்சியினருக்கு காலை 11 மணியளவில் பிரச்சாரம் மேற்கொள்ள நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதே போன்று அதிமுகவினருக்கு காலை 12 மணியளவில் பிரச்சாரம் மேற்கொள்ள நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் 12 மணிக்கு முன்பாகவே அதிமுகவினர் பாலக்கோடு காவல் நிலையம் அருகே வந்து பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.

அப்போது அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாக அதிமுகவினர் பிரச்சாரம் செய்ததால் நாம் தமிழர் கட்சியினர் எதிர்த்துள்ளனர். இதனால் இரு கட்சியினருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது. மேலும் நாம் தமிழர் கட்சியினர் வந்த வாகனத்தை அதிமுகவினர் உடைத்ததால் அப்பகுதியில் பெரும்  பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக பாலக்கோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.