Skip to main content

வாடிய கணவர்... மனைவி சேலையிலேயே தூக்கிட்டு தற்கொலை!! 

Published on 07/10/2021 | Edited on 07/10/2021

 

 wife passed away by husband hanging himself in a sari

 

திருவொற்றியூர் கலைஞர் நகர் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் தயாளன்(73) நத்தின்னா தம்பதியினர். மின் வாரியத்தில் உதவி செயற்பொறியாளராக பணி புரிந்து ஓய்வு பெற்றவர் தயாளன். இவர்களுக்கு நந்தினி என்ற மகளும்  கோபி என்ற மகனும் உள்ளனர். கடந்த மே மாதம் கணவன் மனைவி இருவருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் தயாளன் குணமடைந்த நிலையில் கடந்த மே மாதம் எட்டாம் தேதி நத்தின்னா சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.

 

இதனால் மனைவி இறந்த துக்கம் தாள முடியாமல் தினமும் மன வேதனையில் இருந்து வந்துள்ளார் தயாளன். அவர் தனது மனைவியை மறக்க முடியாமல் அடிக்கடி அவரை பற்றி பலரிடமும் பேசியுள்ளார். இந்நிலையில் நேற்று(06.10.2021) மகாளய அமாவாசை என்பதால், தன் மனைவியின் படத்தை வைத்து பூஜை செய்துள்ளார். தனது மனைவி இறந்ததை எண்ணி நேற்று மிக வருத்தத்தில் இருந்துள்ளார். இன்று காலை வழக்கம் போல் தயாளனுக்கு டீ கொடுப்பதற்காக மகள் நந்தினி அவரது அறையை திறந்துள்ளார். அப்பொழுது அவரது அறையில் இருந்த மின்விசிறி கொக்கியில் மனைவியின் புடவையால் தூக்கு மாட்டி தயாளன் தற்கொலை செய்து தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தார்.

 

இதை பார்த்து கதறிய மகளின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் சாத்தாங்காடு காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். காவல்துறையினர் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மனைவி இறந்த துக்கத்தில் இருந்து மீளாமல் ஒய்வுபெற்ற அரசு அதிகாரி தற்கொலை செய்துகொண்டது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.