Skip to main content

கடன் வாங்கிய கணவனைவிட கடன் கொடுத்தவனே மேல்... மனைவி எடுத்த முடிவு... கடன் தொகை எவ்வளவு தெரியுமா?

Published on 29/09/2018 | Edited on 29/09/2018

 

Husband, wife, friend


 

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் பைலஓங்கலா தாலுகாவில் உள்ள முரகிபாவி கிராமத்தைச் சேர்ந்த பசவராஜ். கடந்த 2011ம் ஆண்டு சாந்தி என்ற பெண்ணை திருமணம் செய்த இவருக்கு தற்போது ஒரு மகள் உள்ளார். தற்போது சாந்தி மீண்டும் கர்ப்பமாக உள்ளார். 
 

இந்த நிலையில் பசவராஜ்,  பெலகாவி மாவட்ட கலெக்டர் ராஜப்பாவிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தார்.
 

அதில், அதில், ‘எனது மனைவி 2-வதாக கர்ப்பிணியாக இருக்கிறார். இந்நிலையில் ரூ.500 கடனை திரும்ப வழங்காததால் எனது மனைவியை ரமேஷ் கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டார். ரமேசுக்கு ஏற்கனவே திருமணம் ஆன நிலையில் அவருடைய மனைவி தாய் வீட்டுக்கு அனுப்பிவிட்டு 2-வது திருமணம் செய்து சவிதாவுடன் வாழ்ந்து வருகிறார். இதுபற்றி போலீசாரிடம் புகார் கொடுத்தால் அவர்கள் புகாரை வாங்க மறுத்துவிட்டனர். என் மனைவியை என்னிடம் ஒப்படைக்கும்படி ரமேசிடம் கூறினால் அவர் ஆபாசமாக திட்டுகிறார். எனவே, என் மனைவியை மீட்டு கொடுக்க வேண்டும்‘ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. 
 

பசவராஜ், தனது மனைவி சாந்தி மற்றும் மகளுடன் பிழைப்புக்காக பெலகாவி நகரத்துக்கு வந்தார். அப்போது பல இடங்களில் வேலை தேடினார். கிடைக்கவில்லை. பின்னர் தனியார் ஓட்டல் ஒன்றில் பசவராஜூம், சாந்தியும் வேலைக்கு சேர்ந்தனர். 
 

இவர்கள் வேலைக்கு சேர்ந்த ஓட்டலில் முத்தகனட்டி கிராமத்தை சேர்ந்த ரமேஷ் ஹூக்கேரி என்பவரும் வேலை செய்து வந்தார். ஒரே ஓட்டலில் வேலை செய்ததால் பசவராஜ், ரமேஷ் ஆகியோர் நண்பர்கள் ஆனார்கள். கணவருக்கு நண்பரானதால் ரமேசுடன் மனைவி சவிதாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது.
 

இந்த நிலையில், ரமேசிடம் இருந்து பசவராஜ் ரூ.500 கடன் வாங்கினார். பல மாதங்கள் ஆகியும் வாங்கிய கடனை பசவராஜ் திரும்பி கொடுக்கவில்லை. இதனால் கோபமடைந்த அடைந்த ரமேஷ், பசவராஜூவின் மனைவி சாந்தியிடம் 500 ரூபாயை திரும்பி தர முடியவில்லை அவருடன் எப்படி குடும்பம் நடத்தி, பிள்ளையை வளர்க்கப்போறீங்க என கேட்டுள்ளார். மேலும் சாந்தியை தனது வீட்டுக்கு அழைத்து சென்றார். 
 

தனது மனைவியை மூளை சலவை செய்து அழைத்துச் சென்றுவிட்டதாக ரமேஷ் மீது குற்றம் சாட்டி ஓட்டல் ஊழியர்களிடம் புலம்பியுள்ளார் பசவராஜ். ஓட்டல் ஊழியர்கள் ஆலோசனைப்படி போலீசில் புகார் அளித்துள்ளார். ஆனால் போலீசார் அந்த புகாரை பெறவில்லை. மேலும் கலெக்டர் அலுவலத்தில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அவர் ரமேசை தொடர்பு கொண்டு சாந்தியை அனுப்பி வைக்கும்படி கூறினார். இதை கேட்ட ரமேஷ், அவரை அவதூறாக திட்டியதுடன், தனது மனைவியை அவரது அம்மா வீட்டிற்கு அனுப்பிவிட்டதாகவும், சாந்தியை திருமணம் செய்து கொண்டதாகவும் கூறியுள்ளார். 
 

இதனால் விரக்தியின் உச்சத்துக்கு சென்ற பசவராஜ், பெலகாவி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் முன்பு தனது மனைவியை மீட்டு தருமாறு கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆன்லைன் ரம்மியில் மூழ்கிய கணவன்; மனைவி எடுத்த பரிதாப முடிவு

Published on 10/03/2024 | Edited on 10/03/2024
nn

ஆன்லைன் ரம்மி சூதாட்டம் காரணமாக பலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்கள் தமிழகம் மட்டுமல்லாது பல மாநிலங்களில் நிகழ்ந்து வருகிறது. இந்தநிலையில் கள்ளக்குறிச்சியில் ரம்மி ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையான கணவனால் மனைவி தற்கொலை செய்து கொண்ட துயர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கள்ளக்குறிச்சி அண்ணா நகர் பிரதான சாலை பகுதியில் வசித்து வருபவர் செண்பகராமன். இவருடைய மனைவி கௌசல்யா. கணவன் செண்பகராமன் ரம்மி ஆன்லைன் சூதாட்ட விளையாட்டிற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் வெளியே சென்ற செண்பகராமன் ஆன்லைன் ரம்மி விளையாடிக் கொண்டிருந்த பொழுது மனைவி கைது கௌசல்யா கால் செய்துள்ளார்.

ஆனால் செண்பகராமன் அவருடைய விளையாட்டில் பிஸியாக இருந்தால் அழைப்பை எடுக்க மறுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து வீட்டுக்கு வந்த செண்பகராமனிடம் கௌசல்யா செல்போன் அழைப்பை எடுக்காதது குறித்து கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் வீட்டை விட்டு செண்பகராமன் வெளியே சென்ற நிலையில், கௌசல்யா மனமுடைந்து தூக்கிட்டு வீட்டிலேயே தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவல் காவல் நிலையத்திற்கு சென்ற நிலையில் உடலை கைப்பற்றிய போலீசார் உடலை பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததோடு, இந்த சம்பவம் தொடர்பாக கணவன் செண்பகராமனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

விபத்தில் உயிரிழந்த உயிர் நண்பன்; அதே இடத்தில் இளைஞர் எடுத்த பரிதாப முடிவு

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
A friend who lose in live in an accident; A pathetic decision taken by the youth at the same place

உடன் வந்த உயிர் நண்பன் விபத்தில் உயிரிழந்ததால் மனமுடைந்த இளைஞர் அதே இடத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மத்தியப்பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.

மத்தியப்பிரதேசம் மாநிலம் இந்தூர்-அகமதாபாத் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் அமைந்துள்ளது நல்கிடா என்ற பகுதி. அங்கு சாலை ஓரத்திலிருந்த மரத்தில் 28 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் தூக்கிட்ட நிலையில் சடலமாக கிடந்தார். அருகில் இருந்த ராஜ்கட் காவல் நிலையத்திற்கு இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அளிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இளைஞரின் உடலை கீழே இறக்கி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துவிட்டு இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த இளைஞர் ஜபூவா மாவட்டத்தைச் சேர்ந்த கண்டிசிங் என தெரிய வந்தது. அவருடைய மொபைல் போனை எடுத்து ஆராய்ந்தபோது தற்கொலை செய்வதற்கு முன்பு வீடியோ ஒன்றை பதிவு செய்து அதை அவருடைய நண்பர்களுக்கு அனுப்பி இருந்தார்.

அந்த வீடியோவில் தன்னுடைய தற்கொலைக்கான காரணம் என்ன என்பது பற்றி குறிப்பிட்டிருந்தார். அதாவது கடந்த சில நாட்களுக்கு முன்பு கண்டி சிங் அவருடைய நண்பர் நௌசிங் உடன் இந்தூர்-அகமதாபாத் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது எதிர்ப்புறம் வந்த இரு சக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் நௌசிங் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தன்னுடைய உயர் நண்பன் விபத்தில் உயிரிழந்ததைத் தாங்க முடியாத கண்டி சிங் அதே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.