Skip to main content

வாரத்தில் 2 நாள் மட்டுமே வாகனங்களை இயக்க அனுமதி! ஒவ்வொரு நாளும் ஒரு வண்ணம்!!

Published on 10/04/2020 | Edited on 10/04/2020


கரோனா வைரஸ் தொற்றுக்கு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்நிலையில், நோயின் தாக்கத்தில் இருந்து விடுபட மலேரியாவுக்கு வழங்கப்படும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மற்றும் அசித்ரோமைசின் மாத்திரகளைப் பயன்படுத்தலாம் என உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது.

இது ஒருபுறம் இருந்தாலும், கரோனா தொற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அனைத்து நாடுகளுக்கும் உலக சுகாதார நிறுவனம் அறிவுரை வழங்கியுள்ளது. அதையடுத்து மார்ச் 25ம் தேதி முதல் வரும் 14ம் தேதி வரை இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

 

weekly twodays only vehicle allowed salem district


என்னதான் கடுமையான உத்தரவுகளைப் போட்டாலும், தாக்கத்தை உணராத மக்கள் பொறுப்பின்றி வெளியில் நடமாடுகின்றனர். விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு, வாகனங்கள் பறிமுதல் என்று காவல்துறை நடவடிக்கை ஒருபுறம் கடுமையாக்கப்பட்டு உள்ளன.

இந்நிலையில், பொதுவெளியில் வாகன ஓட்டிகள் தேவையின்றி நடமாடுவதைத் தவிர்க்க, சேலம் மாநகர காவல்துறையினர் புதிய கட்டுப்பாடுகளை வியாழக்கிழமை (ஏப். 9) முதல் அமல்படுத்தி உள்ளனர். 

காய்கறிகள், மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் வாங்குதல் உள்ளிட்ட முக்கியத் தேவைக்காக வாகனங்களில் வருவோர், இனி வாரத்தில் இரண்டு நாள்கள் மட்டுமே வெளியே வர முடியும். அதேநேரம், ஐந்து நாள்களுக்குத் தேவையான காய்கறிகளை வாங்கிக் கொள்ளும்படியும் மாநகர காவல்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
 

http://onelink.to/nknapp

ஒருவர் எத்தனை முறை வாகனங்களில் பொதுவெளியில் சுற்றுகிறார் என்பதை அறிந்து கொள்ள, வாகனங்களின் பதிவெண் பலகையில் ஒவ்வொரு முறைக்கும் ஒவ்வொரு நிறத்தினாலான வண்ணத்தை காவல்துறையினர் பூசுகின்றனர்.

அதாவது, ஒருவர் முதல்முறையாக வெள்ளிக்கிழமையன்று வாகனத்தில் வருகிறார் எனில் அவருடைய பதிவெண் பலகையில் சிவப்பு வண்ணத்தில் ஒரு கோடு போடப்படும். அவர் மறுபடியும் திங்கள் கிழமையன்று இரண்டாவது முறையாகப் பொதுவெளியில் வாகனங்களை எடுத்துக்கொண்டு வர அனுமதிக்கப்படுவர். 

weekly twodays only vehicle allowed salem district

சனிக்கிழமையன்று வரும் வாகனங்களில் மஞ்சள் வண்ணத்தில் கோடு போடப்படும். அவர் இரண்டாவது முறையாகச் செவ்வாய்க்கிழமை மட்டுமே வெளியில் வாகனங்களில் நடமாடலாம். ஞாயிற்றுக்கிழமை அன்று வரும் வாகனங்களின் பதிவெண் பலகையில் பச்சை வண்ணத்தில் கோடு போடப்படும். அவர்கள் இரண்டாவது முறை புதன்கிழமை அனுமதிக்கப்படுவர். 

 


இந்த மூன்று வண்ணங்களும் பூசப்படாத வாகனங்கள் மட்டும் வியாழக்கிழமை அனுமதிக்கப்படும். அன்று வரும் வாகனங்களில் பச்சை வண்ணத்தில் கோடு போடப்படும்.அந்த வாகனங்கள் இரண்டாவது முறையாக ஞாயிறு அல்லது புதன்கிழமைகளில் அனுமதிக்கப்படும். 

அனுமதிகப்படாத நாள்களில், அத்தியாவசியத் தேவையின்றி வாகனங்களில் சுற்றித்திரிவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும் என சேலம் மாநகர காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். 

இந்த உத்தரவு, 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் வரை நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேநேரம், மருத்துவமனை உள்ளிட்ட தவிர்க்க இயலாத தேவைகளுக்காக வாகனங்களில் செல்வதற்கு எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 


 

சார்ந்த செய்திகள்

 

Next Story

கள்ளச்சாராய விவகாரம்; பலி எண்ணிக்கை அதிகரிப்பு!

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
Counterfeiting issue; Increase in the number of victims

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 5 பெண்கள் உட்பட 58 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே சமயம் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விவகாரம் தொடர்பான வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை இந்த சம்பவத்தில் தொடர்புடைய 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதோடு இந்தச் சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு நபர் ஆணையமும் விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில் கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது. புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஏசுதாஸ் (வயது 39) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் 10 பேருக்கு ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 6 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதே சமயம் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரஞ்சித் குமார் (வயது 37) என்பவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

Next Story

தனியார் கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை; பெற்றோர் குற்றச்சாட்டு

Published on 25/06/2024 | Edited on 25/06/2024
Student incident in private college hostel; Accusation of parents

திருச்சியில் தனியார் கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் இந்த உயிரிழப்பில் மர்மம் இருப்பதாக பெற்றோர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் சமயபுரம் அடுத்து டோல் பிளாசா அருகே தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் மருத்துவக் கல்லூரி,பொறியியல் கல்லூரி, கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். சிவகங்கை மாவட்டம், மானாமதுரை மாரியம்மன் தெருவைச் சேர்ந்த அமமுக நகர செயலாளர் பாலாஜியின் மகள் தாரணி (வயது 19) விடுதியில் தங்கி பி.டெக் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

தாரணி காய்ச்சல் காரணமாக நேற்று காலை கல்லூரி வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று விடுதிக்கு சென்றுள்ளார். மேலும் காய்ச்சல் அதிகமாக இருந்ததால் கல்லூரிக்கு செல்லாமல் விடுதியில் தங்கியுள்ளார். தாரணி காய்ச்சல் குறித்து பேராசிரியரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் விடுமுறை எடுக்கக்கூடாது நிர்வாகத்திடம் கேட்டு தான் விடுமுறை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். காய்ச்சல் அதிகமாக இருந்ததால் தாரணி விடுதியிலேயே தங்கி உள்ளார். விடுதியில் தங்கியிருந்த சக மாணவிகள் கல்லூரிக்கு சென்று மீண்டும் விடுதிக்கு வந்தபோது அறை உள்புறம் தாழ்பாள் போடப்பட்டு இருந்ததால் இது குறித்து விடுதி சக மாணவிகள் நிர்வாகத்திடம் தெரிவித்தனர். அதன்படி நிர்வாகத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது ஜன்னலில் துப்பட்டாவால் தூக்கு மாட்டி தற்கொலை செய்ததாக கூறி அவரை படுக்கையில் வைத்திருந்தனர்.

மேலும் இறந்த தாரணியை பிரேதப் பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தநிலையில் தாரணிக்கு காய்ச்சல் காரணமாக தந்தை பாலாஜியிடம் தொலைபேசியில் மதியம் 12 மணி அளவில்  தொடர்பு கொண்டு காய்ச்சலால் வீட்டிற்கு அழைத்துச் செல்லுமாறு தாரணி தெரிவித்துள்ளார். இதனால் நேற்று மதியம் 3 மணி அளவில் கல்லூரிக்கு வந்த தாரணியின் தந்தை பாலாஜி நெடு நேரமாகி அவரது மகளை பார்க்க விடாமல் காத்திருக்க வைத்துள்ளனர். நெடுநேரத்திற்கு பின் ஆறு மணி அளவில்  தாரணி இறந்துவிட்டார் என விடுதி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பாலாஜி உறவினர்களுடன் தனது மகளுக்கு நீதி வேண்டும், தனது மகளை கல்லூரி நிர்வாகத்தினர் கொலை செய்துள்ளனர். மேலும் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏ கதிரவனின் கல்லூரி என்பதால் காவல்துறையினர் மருத்துவமனை நிர்வாகத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டினார்கள்.

இறந்த தாரணி ஜன்னல் கம்பியில் துப்பட்டாவைக் கட்டி ஒரு கையில் துப்பட்டாவை கழுத்தை நெரித்து தற்கொலை செய்ததாக விடுதி நிர்வாகம் தெரிவிக்கின்றனர். ஆனால் தாரணியின் கழுத்தில் பெல்டால் கழுத்தை நெரித்து இறந்தது போன்று உள்ளதால் இதற்கு உரிய விசாரணை வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் மாணவியின் தாய், 'தனது மகளை கல்லூரி நிர்வாகத்தினர் கொன்று விட்டனர். எனது மகளை பறிகொடுத்து விட்டேனே' எனக் கூறி கதறி அழுதது பார்ப்போரை கண்கலங்க வைத்தது.