Skip to main content

ரயில் முன் பாய்ந்து காதலர்கள் தற்கொலை!- விருதுநகர் சோகம்!

Published on 03/01/2020 | Edited on 03/01/2020

விருதுநகரைச் சேர்ந்த சரவணனும், ரோசல்பட்டியைச் சேர்ந்த ரஞ்சிதாவும் காதலர்கள். மனம் வெறுத்துப்போய் இருவரும், விருதுநகர் சூலக்கரை ரயில்வே கேட் அருகே, திருவனந்தபுரத்திலிருந்து திருச்சி சென்று கொண்டிருந்த ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.

VIRUDHUNAGAR DISTRICT LOVERS INCIDENT POLICE INVESTIGATION


தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார், இருவரின் உடலையும் மீட்டு, விருதுநகர் அரசு மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இத்தற்கொலைச் சம்பவம் குறித்து தூத்துக்குடி ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  
 

ஓடும் ரயில் முன் பாய்ந்து உடல் சிதறி உயிரை மாய்த்துக் கொள்வது கொடுமையிலும் கொடுமை அல்லவா! 

 

சார்ந்த செய்திகள்