Skip to main content

சென்னையில் நாளை இரவு 12.00 மணிக்கு மேல் வாகனங்களுக்குத் தடை!

Published on 30/12/2021 | Edited on 30/12/2021

 

Vehicles banned in Chennai after 12.00 noon!

 

சென்னை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "டிசம்பர் 28- ஆம் தேதி அன்று வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பின் தொடர்ச்சியாக, தற்போதுள்ள சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வருகின்ற 31/12/2021 அன்று இரவு 12.00 மணிக்கு மேல் அத்தியாவசிய தேவைகள் தொடர்பான வாகன போக்குவரத்தைத் தவிர, மற்ற வாகன போக்குவரத்திற்கு 01/01/2022 அன்று காலை 05.00 மணி வரை அனுமதி இல்லை. 

 

எனவே, பொதுமக்கள் அனைவரும் மேலே குறிப்பிட்ட 31/12/2021 அன்று இரவு 12.00 மணிக்கு முன்பு தங்கள் பயணங்களை முடித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்