Skip to main content

உருவானது சாகர் புயல் மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Published on 18/05/2018 | Edited on 18/05/2018

ஏடன் வளைகுடா பகுதியில் சாகர் என்ற புயல் உருவாகியுள்ளதால் மீனவர்கள் தென்மேற்கு அரபிக்கடலோர பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

FISHER

 

 

இன்று செய்தியாளர்களை சந்தித்த  சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறுகையில்,

ஏடன் வளைகுடா பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது புயலாக மாறியுள்ளது. இந்தியாவால் சாகர் என பெயரிடப்பட்டுள்ள இந்த புயலானது கிழக்கு திசையில் ஏமன் நோக்கி  நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே மீனவர்கள் தென்மேற்கு அரபிக்கடல் ஒட்டிய பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்லவேண்டாம் எனவும் மேலும் இந்த சாகர் புயலினால் தமிழகத்திற்கு எந்தவித பாதிப்பும் இருக்காது எனவும் கூறினார். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

22 மாவட்டங்களுக்கு மழை அலர்ட் 

Published on 22/06/2024 | Edited on 22/06/2024
Rain alert for 22 districts

தமிழகத்தில் அண்மையில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இதன் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாகக் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் கடந்த ஒரு சில வாரங்களாக மழை பொழிந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழ்நாட்டின் 2 மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முன்னெச்சரிக்கை அறிவிப்பில், 'நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் உள்ள ஓரிரு இடங்களில் இன்றும்(22.06.2024) நாளையும்(23.06.2024) மிகக் கனமழை பெய்யக்கூடும். எனவே இவ்விரு மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்படுகிறது' என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் 22 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின்படி தமிழகத்தில் 7:00 மணி வரை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தர்மபுரி, உள்ளிட்ட 22 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Next Story

‘மிகக் கனமழைக்கு வாய்ப்பு’ - ஆரஞ்சு அலர்ட் விடுத்த வானிலை மையம்!

Published on 22/06/2024 | Edited on 22/06/2024
Chance of very heavy rain Orange Alert issued by Meteorological Dept

தமிழ்நாட்டின் 2 மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அன்மையில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது. இதன் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாகக் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் கடந்த ஒரு சில வாரங்களாக மழை பொழிந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் உள்ள ஓரிரு இடங்களில் இன்றும்(22.06.2024) நாளையும்(23.06.2024) மிகக் கனமழை பெய்யக்கூடும். எனவே இவ்விரு மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. ஆரஞ்சு எச்சரிக்கை காரணமாக 12 செ.மீ. முதல் 20 செ.மீ. வரை மழை பெய்யக்கூடும். மேலும் திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 6 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.