Skip to main content

பிஞ்சுகளின் மீது ஏவப்பட்ட தீண்டாமைக் கொடுமை...

Published on 18/09/2022 | Edited on 18/09/2022

 

THENKASI

 

தென்காசி மாவட்டத்தின் சங்கரன்கோவில் அருகேயுள்ள மஜரா கிராமம் பாஞ்சாகுளம். சுமார் 25 குடும்பங்களைக் கொண்ட பட்டியலின மக்கள் அங்கு மைனாரிட்டியாகவும், மற்றொரு பிரிவினரை பெரும்பான்மையினராகவும் உள்ளடக்கிய கிராமம்.  இதுபோன்ற பிரிவு மக்களைக் கொண்ட சின்னஞ்சிறிய கிராமம் என்றாலும் ஆண்டாண்டு காலமாக கடந்த ஆண்டுவரை இரண்டு தரப்பினரும் ஒருவருக்கொருவர் இணக்கமாகவே பழகி வந்துள்ளனர்.

 

இந்தச் சூழலில் இந்தக் கிராமத்தின் மெஜாரிட்டி பிரிவைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் ராணுவத்தில் அக்னிபாத் படைப்பிரிவில் வேலைக்கு எடுக்கப்பட்டுள்ளார். பணியில் சேர்வதற்கு தேவையான ஆவணங்களோடு, அவர் மீது கிரிமினல் வழக்குகள் கிராமத்தில் காவல் சரகத்தில் பதிவாகவில்லை என்பதற்கான தொடர்புடைய காவல் நிலையத்தின் சான்றிதழ் வேண்டும். சமர்ப்பித்தால் தான் பணியில் சேரமுடியும் என்கிற இக்கட்டான நிலை. ஆனால் சூழலோ இவருக்கு நேர்எதிர்.

 

கடந்த 2021ன் போது கிராமத்தில் நடந்த ஒரு பிரிவைச் சேர்ந்தவர்களின் திருமண நிகழ்ச்சி ஒன்றின்போது அங்குள்ளவர்கள் ஜாலியாக மதுகுடித்துவிட்டு விசிலடித்தபடி பைக்கில் கண் மூடித்தனமான வேகத்தில் கிராமத்தில் பறந்ததால், அதனை எதிர்தரப்பு தட்டிக் கேட்க, ஆத்திரத்தில் இரண்டு தரப்பினரும் அடிதடி என மோதிக் கொண்டதில் இருதரப்பிலும் காயம் ஏற்பட்டது. இதுதொடர்பாக  கரிவலம் வந்தநல்லூர் காவல் நிலையத்தில் ஒரு தரப்பினர் மீது அடிதடி வழக்குகளும், மற்றொரு பிரிவினர் மீது தீண்டாமை வழக்கும் பதிவாகியுள்ளன. இந்த மோதலில் ராணுவ பணிக்கு தேர்வு செய்யப்பட்ட ராமகிருஷ்ணனின் மீதும் தீண்டாமை வழக்கு. இந்த வழக்கு வாபஸ் பெறப்பட்டால் மட்டுமே பணி நிச்சயம் என்ற சூழல்.

 

THENKASI

 

இந்த நிலைமை ராமகிருஷ்ணனின் தரப்பு மெஜாரிட்டியான தங்களின் சமூக நாட்டாமையும், கிராமத்தில் பெட்டிக்கடை நடத்தி வருபவருமான மகேஸ்வரனிடம் தெரிவித்திருக்கிறார்கள். இதையடுத்து நாட்டாமை மகேஸ்வரன் உட்பட சிலர், பட்டியலின சமூக நாட்டாமையான விக்னேஸ்வரன் தரப்புகளிடம் நிலைமையைத் தெரிவித்து தங்கள் தரப்பினர் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறக் கேட்டுள்ளனர். அதுசமயம் எங்களின் பட்டியலின சமூதாயத்தினர் மீது தொடரப்பட்ட வழக்கை நீங்கள் வாபஸ் பெற்றால், பட்டியலின சமுதாய மக்களால் போடப்பட்ட வழக்கை வாபஸ் பெற முடியும் என்று தெரிவித்ததற்கு பதில் கிடைக்கவில்லையாம்.

 

இந்தச் சூழலில் நேற்று முன்தினம் கிராமத்தின் நாட்டாமையான மகேஸ்வரன் என்பவரது கடைக்கு வழக்கம் போல் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் படிக்கும் 3ம் வகுப்பு குழந்தைகள் தின்பண்டங்களை வாங்கச் சென்றுள்ளனர். அந்தக் குழந்தைகளிடம் எங்க சமுதாயத்தில் ஊர்க் கூட்டம் போட்டு உங்களுக்கு கடையில எந்தப் பொருளும் கொடுக்கக் கூடாதுன்னு கட்டுப்பாடு போட்டுருக்கோம். போங்க. போயி உங்க வீட்ல சொல்லுங்கன்னு அந்தக் குழந்தைகளிடம் சொல்லியது மட்டுமல்லாமல் இதனை வீடியோவாகப் பதிவு செய்த அவர், தனது பிரிவினரின் வாட்ஸ்அப் குரூப்பிற்கு அனுப்பியுள்ளார். இந்தக் குரூப்பில் உள்ள யாரோ அவர்களுக்கு வேண்டாத ஒருவர் இந்த வீடியோவை எதிர்பிரிவினருக்கு அனுப்ப, அதைப் பார்த்துப் பதறிய எதிர்தரப்பினர் பிற குரூப்களுக்கு பகிர அது வைரலாகி தென்மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் முதல் எஸ்.சி.எஸ்.டி ஆணையம் வரை போய் சேர்ந்தது.

 

சற்றும் தாமதிக்காமல் நடவடிக்கையை மேற்கொண்ட ஐ.ஜி.அஸ்ராகார்க் தென்காசி மாவட்ட எஸ்.பி.யான கிருஷ்ணராஜை விரைவுபடுத்தியிருக்கிறார். அதையடுத்தே பாஞ்சாகுளம் வந்த கரிவலம்வந்தநல்லூர் போலீசார் விசாரணை நடத்தினர். அதேசமயம் சம்பவத்திற்கு காரணமான நாட்டாமையும் கடைக்காரருமான மகேஸ்வரன் தலைமறைவாகியிருக்கிறார்.

 

இதனிடையே நடவடிக்கையை மேற்கொண்ட மாவட்ட கலெக்டரான ஆகாஷின் உத்தரவினடிப்படையில் சங்கரன்கோவில் கோட்டாட்சியர் சுப்புலட்சுமி, தாசில்தார் பாலு தலைமையிலான வருவாய்த்துறையினர் மகேஸ்வரன் நடத்திவந்த பெட்டிக் கடைக்கு சீல் வைத்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் 5 பேர் மீது கரிவலம் வந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகேஸ்வரன், வீடியோ எடுத்த ராமச்சந்திரன் இருவரைக் கைது செய்தவர்கள், முருகன், குமார், சுதா மூவரைத் தேடி வருகின்றனர்.

 

கிராமச் சூழலின் பதற்றம் காரணமாக பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்ட நேரத்தில் கிராமத்தின் பாதிக்கப்பட்ட தரப்பின் பொன்னுத்தாய் கூறுகையில்,

 

THENKASI

 

''ஆம்பளைங்க இல்லாத நேரத்தில வந்து கேச வாபஸ் வாங்குங்கன்னு மெரட்டுறாக. நாங்க சொற்ப குடும்பங்கதான் இங்க இருக்கோம். மத்தவங்க காலனியில இருக்காங்க. எங்களுக்குன்னு நெலம் கிடையாதுங்க. குடிதண்ணி எடுக்க போக முடியல ரெண்டு வருஷமா பிரச்சனை நடக்குய்யா'' என வேதனைப்பட்டனர்.

 

mm

 

தங்களின் பெயர்களைச் சொல்ல விரும்பாத பெரும்பான்மை சமூகத்தைச் சார்ந்த பெண்களோ, கல்யாண நிகழ்ச்சியில வெளியூர் காரங்கதான் பேசிட்டிருந்தாங்க. தவிர ஊர்ல கோவில் கட்டணும்னுதான் நாங்க கூட்டம் போட்டு பேசினோம். அவுங்க கேசு குடுக்காங்கன்னு நாங்க ஒதுங்கிட்டோம். அவுங்க கிட்டப் பேசவே இல்ல. சமராசிக்கு முடியாதுன்னுட்டாங்க. வம்புக்கு போவனும்னு எங்களுக்கு என்ன அவசியமா? இங்க எந்தவொரு பிரச்சனையும் இல்லய்யா என்றவாறு முடித்துக்கொண்டனர்.

 

THENKASI

 

மாவட்ட கலெக்டரான ஆகாஷ் ''கிராமத்தில் சிறுவர் சிறுமியர் தின்பண்டங்கள் கேட்டதற்கு தரமறுத்ததாக எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளின் அடிப்படையில் கரிவலம்வந்தநல்லூர் காவல் நிலையத்தில் குற்ற எண் 377/2022 பிரிவு 153 (A) ஐ.பி.சி.ன்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு மகேஸ்வரன், ராமமூர்த்தி கைது செய்யப்பட்டனர். மேலும் குற்ற விசாரணை முறைச்சட்டம் 1973 பிரிவு 133(1)(ஆ) கீழ் வருவதால் மஜரா பாஞ்சாகுளத்தில் மகேஷ்வரன் நடத்திவரும் பெட்டிக்கடை தற்காலிகமாக சீல் வைக்கப்பட்டது'' என்றார்.

 

விஞ்ஞானமும், தொழில்நுட்ப முன்னேற்றமும் விண்ணைத் தாண்டிய நிலையில் குழந்தைகளின் மீதான தீண்டாமை தாக்குதல் அக்னி திராவகத்தைவிட ஆபத்தானது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

ஊருக்குள் சிக்கிய அதிமுகவினர்; வேட்பாளரை லெஃப்ட் ரைட் வாங்கிய பெண்!

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
woman demanded justice after rejecting AIADMK candidate from Tenkasi constituency

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாடாளுமன்ற தேர்தல் வருகின்ற 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி மிக வலுவாக இருந்து வருகிறது. இந்தக் கூட்டணியில் காங்கிரஸ், விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் உள்ளன. ஆனால் எதிர்க்கட்சியான அதிமுக, பாஜகவோடு இருந்த கூட்டணியை முறித்துக்கொண்டது. இதன் காரணமாக நடக்க இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு வலுவான கூட்டணியை கட்டமைக்க எடப்பாடி பழனிசாமி முயற்சி மேற்கொண்டு வந்தார்.

அதன்படி அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக, புதிய தமிழகம், புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகித்து வருகின்றனர். பின்னர் அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து, தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. மத்தியில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் உள்ள பாஜக, வருகின்ற தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சியை அமைப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. அதே சமயத்தில், பாஜகவை எப்படியாவது வீழ்த்திவிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வியூகம் வகுத்து வருகிறது. இதற்காக பல்வேறு கட்சிகள் சேர்ந்து இந்தியா கூட்டணியை உருவாக்கியுள்ளது. ஆனால், தமிழகத்தில் பாஜகவோடு கூட்டணியில் இருந்த அதிமுக தற்போது அதனுடன் இருந்த உறவை முறித்துக்கொண்டு பாஜகவிற்கு எதிராக தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறது. இவ்வாறு தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக தலைமையிலான இரண்டு பெரிய கட்சிகளுமே பாஜக வை வீழ்த்த வேண்டும் என தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையில் வேட்பாளர் பிரச்சாரத்தில் ஈடுபடும் போது தொகுதியில் உள்ள பொதுமக்கள் வேட்பாளர்களிடம் தொகுதி பிரச்சனைகளை கூறி வாக்கு வாதத்தில் ஈடுபடும் சம்பவங்களும் நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வேலூர் மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் பசுபதி,  திருப்பத்தூர் மாவட்டத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த அவர், வாணியம்பாடியில் உள்ள பெருமாள்பேட்டை, கதர்பேட்டை, கச்சேரி சாலை, உள்ளிட்ட பல்வேறு  பகுதிகளில்  தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். அப்போது அங்குள்ள மேட்டுப்பாளையம் பகுதியில் ஒரு கடையில் துணிகளுக்கு இஸ்திரி போட்டும், அங்குள்ள தர்பூசணி கடையில் தர்பூசணி பழம் விற்பனை செய்தும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பின்னர் உதயேந்திரம் பகுதியில் வாக்கு சேகரிக்க சென்றுள்ளார். மதிய நேரத்தில் வாட்டி வதைக்கும் வெயிலில் தனது கட்சி தொண்டர்கள் மற்றும் வாணியம்பாடி தொகுதியின் அதிமுக எம்எல்ஏ செந்தில்குமார் ஆகியோருடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். அப்போது அங்கு வந்த பெண்ணொருவர், எம்.எல்.ஏ செந்தில்குமாரை நிறுத்தியுள்ளார்.

அங்கு நின்ற அவரிடம் ஆவேசமாக பேசிய அந்தப் பெண், நான் இங்குள்ள பேரூராட்சி அலுவலகத்தில் பணியாற்றி வந்தேன். என்னை முன்னாள் அமைச்சர் கேசி.வீரமணி பணியில் சேர்த்து விட்டார். பின்னர் அதிமுகவை சேர்ந்தவர்களால் எனக்கு வேலை போனது. ஏன் என்னை வேலையை விட்டு தூக்கி விட்டீர்கள் எனக் கேட்டால் வாய் பேசுகிறேன் என்கிறார்கள். நான் எதற்காக வாய் பேசுகிறேன் என்று அவர்களுக்குத் தெரியுமா?... என அவரின் ஆதங்கத்தை கொட்டி தீர்த்துள்ளார்.

அதற்கு பதில் அளித்த அதிமுக  எம்.எல்.ஏ இந்த பேரூராட்சியில் திமுககாரர் தானே தலைவராக உள்ளார்... என்று மடக்கியுள்ளார். ஆனாலும் அவரை விடாமல் பேசிய அந்தப் பெண், எனக்கு வேலை போன போது, அதிமுகவினர் தான் இருந்தார்கள். எனக் கூறி கொந்தளித்துள்ளார். அப்போது அங்கு வந்த சில அதிமுக தொண்டர்கள் அந்தப் பெண்ணை சமாதானப்படுத்த முயன்றுள்ளனர். ஆனால், அவர்களுக்கு உடனே பதிலடி கொடுத்த அந்தப் பெண், சார்... எனக்கும் உங்களுக்கும் பேச்சு இல்ல... நான் எம்.எல்.ஏ விடம்தான் பேசுகிறேன்.... உங்களிடம் பேசவில்லை... என எச்சரித்துள்ளார். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியுள்ளது. அப்போது செய்வதறியாது தவித்து நின்ற அதிமுக எம்.எல்.ஏ, ஒருவழியாக அந்தப் பெண்ணிடம் சமாதானமாகப் பேசிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.