Skip to main content

"நல்ல மாணவர்களாக கல்லூரியை விட்டு வெளியேற வேண்டும்" -  திருச்சி காவல் துணை ஆணையர் 

Published on 27/01/2023 | Edited on 27/01/2023

 

trichy city police commissioner advised to medical student in trichy 

 

திருச்சி கி.ஆ.பெ.விஸ்வநாதன் மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கான புதிய கூடைப்பந்து விளையாட்டு மைதானத்தை திருச்சி மாவட்ட காவல்துறை துணை ஆணையர் சுரேஷ்குமார் இன்று திறந்து வைத்தார். இக்கல்லூரியில் தற்போது மருத்துவம் பயிலும் 750 மாணவர்கள்,   300 முதுகலை மாணவர்கள்,  400 நர்சிங் மாணவர்கள்,   600 பாரா மெடிக்கல் மாணவர்கள் என மொத்தம் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பயின்று வரும் நிலையில் மாணவர்களுக்கென்று இருந்த கூடைப்பந்து விளையாட்டு மைதானம் புனரமைக்கப்பட்டு தற்போது பிரத்யேகமான கூடைப்பந்து விளையாட்டு மைதானமாக 7.64 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்டுள்ளது.

 

இதற்கான துவக்க விழா இன்று மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மருத்துவக் கல்லூரியின் துணை முதல்வர் அர்ஷியா பேகம் வரவேற்புரையாற்றினார். இதில் திருச்சி மாநகர காவல்துறை துணை ஆணையர் சுரேஷ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். மேலும் உதவி ஆணையர் கென்னடி, அண்ணல் காந்தி அரசு மருத்துவமனையின் டீன் நேரு, மருத்துவ கண்காணிப்பாளர் அருண் ராஜ், கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 

இவ்விழாவில் சிறப்புரையாற்றிய துணை ஆணையர் சுரேஷ்குமார் பேசுகையில், "மருத்துவம் பயிலக்கூடிய மாணவர்களாகிய உங்களுக்கென்று ஒரு தனி அடையாளமும் கடமையும் உள்ளது. எனவே உங்களுடைய கல்வியில் சிறந்து விளங்குவதோடு மட்டுமல்லாமல் சமூகத்திற்கு பயனுள்ளவர்களாக வாழ முயற்சி செய்ய வேண்டும். இதற்கு தடையாக உள்ள போதைப் பொருள் பழக்கங்களை உடனடியாக தவிர்த்து நல்ல மாணவர்களாக கல்லூரியை விட்டு வெளியேற வேண்டும். மேலும் புதிய மாணவர்களை ராகிங் செய்வது போன்ற தவறான முன்னுதாரணமாக நீங்கள் இருந்து விடக்கூடாது" என்று கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சொத்துக்குவிப்பு வழக்கு; 79 வயது முன்னாள் சார்பதிவாளருக்கு 5 ஆண்டுகள் சிறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
79-year-old ex-registrar sentenced to 5 years in prison for Asset transfer case

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன் (79). இவரது மனைவி வசந்தி (65). ஜானகிராமன் கடந்த 1989ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை சார்பதிவாளராக பணியாற்றி வந்தார்.  ஜானகிராமனின் பணிகாலத்தில் அவரது பெயரிலும், அவரது மனைவி பெயரிலும் பல்வேறு இடங்களில் 37 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்துக்களை வாங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.

அந்தப் புகாரின் பேரில், வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை சேர்த்ததாக கணவர் மற்றும் மனைவி மீது திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்சஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இது தொடர்பான வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இந்த விசாரணை இன்று (25-04-24) நீதிபதிகள் முன்பு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரணை நடத்திய நீதிபதிகள், இருவர் மீதான குற்றச்சாட்டுகளையும் உறுதிப்படுத்தினர். இதனையடுத்து, ஜானகிராமனுக்கும், அவரது மனைவி வசந்திக்கும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பளித்தார். அவர்கள் இருவரது பெயரில் உள்ள சொத்துக்களின் தற்போதைய மதிப்பு ரூ.100 கோடிக்கும் மேல் இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், அவற்றை பறிமுதல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார். 

Next Story

கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு; அரிசி ஆலைகளில் எஸ்.பி திடீர் ஆய்வு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sp conducts surprise inspection of rice mills to prevent smuggling in Trichy

அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பல இடங்களில் ரோந்து சென்று தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் படி  திருச்சி மாவட்டத்தில்  காவல்  ஆய்வாளர்  செந்தில்குமார் , உதவி ஆய்வாளர்  கண்ணதாசன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மணப்பாறையில் உள்ள தனியார் நவீன அரிசி ஆலைகள் மற்றும் ரேஷன் அரிசி அரவை முகவர் அரிசி ஆலைகளில் ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா? என திடீர் சோதனையில் ஈடுபட்டார். ஆய்வின் போது திருச்சி காவல் ஆய்வாளர் ,உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இருந்தனர். மேலும் திருச்சி மாவட்ட எல்லையோர பகுதிகளில் பல இடங்களில் இக்குழு திடீர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.