Skip to main content

"திம்பம் மலைப்பாதை: போக்குவரத்துக்குத் தடை தொடரும்"- உயர்நீதிமன்றம் திட்டவட்டம்!

Published on 15/02/2022 | Edited on 15/02/2022

 

"Thimbam Hill Road: Traffic ban will continue" - High Court plan!

 

சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம் வழியாகச் செல்லும் சாலையில் வாகன போக்குவரத்திற்குத் தடை தொடரும் என்று சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. 

 

சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம் சாலையில் இரவு நேரத்தில் வாகன போக்குவரத்திற்கான தடையானது கடந்த 2019- ஆம் ஆண்டு மாவட்ட ஆட்சியரால் பிறப்பிக்கப்பட்டது. அந்த உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, இரவு நேரப் போக்குவரத்திற்குத் தடை விதிக்கும் மாவட்ட ஆட்சியரின் உத்தரவை, அமல்படுத்த வேண்டும் என்ற உத்தரவை மட்டும்தான் பிறப்பித்திருந்தது. 

 

இந்த உத்தரவை மாவட்ட ஆட்சியர் கடுமையாக அமல்படுத்தி வரும் பொழுது, தாங்கள் பாதிக்கப்படுவதாக, அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பலரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நாடியுள்ளனர். குறிப்பாக, தமிழக அரசே இந்த உத்தரவைத் திரும்பப் பெற்றுக் கொள்ளும் வகையில் நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியிருக்கின்றது. 

 

அதாவது, பொதுமக்கள், வியாபாரிகள் உள்ளிட்ட பல தரப்பினரும் பாதிக்கப்படுவதால், போராட்டம் நடத்துவதால், மாவட்ட ஆட்சியர்கள் பிறப்பித்த உத்தரவைத் திரும்ப அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டியிருந்தது. அதுமட்டுமின்றி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. பி.எல்.சுந்தரம் என்பவர் தரப்பிலிருந்தும் இடையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டியிருந்தது. 

 

இந்த தடையால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள், குழந்தைகள் உள்பட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர் என்று மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.  

 

இது தொடர்பான அனைத்து மனுக்கள் மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி தலைமையிலான அமர்வு முன்பு வந்தது. அப்போது, மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த மட்டுமே நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது. போக்குவரத்துக்குத் தடை விதித்து நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. அதேசமயம், இரவு நேரத்தில் பள்ளி மாணவர்கள் வருகிறார்களா என்று இடையீட்டு மனுதாரர்களுக்குக் கேள்வி எழுப்பியுள்ளனர். 

 

சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தின் ஒரு வழியாகச் செல்லும் திம்பம் மலைப்பகுதியில் மாலை 06.00 மணி முதல் காலை 06.00 மணி வரை போக்குவரத்துக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என்று கூறிய நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்