Skip to main content

தமிழகத்தில் மீண்டும் பெண் சிசுக்கொலை!

Published on 19/03/2020 | Edited on 19/03/2020

தமிழகத்தில் ஆண் வாரிசுக்காகப் பெண் சிசுக்கொலை நடைபெற்ற சம்பவம் மீண்டும் அரங்கேறியுள்ளது. 
 

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே மூன்றாவதும் பெண் குழந்தை பிறந்ததால் ஆண் வாரிசுக்காக தாயே எருக்கம்பாலை கொடுத்து பெண் குழந்தையைக் கொன்றுள்ளார். ராமநாதபுரம் ஒத்தவீடு பகுதியில் எருக்கம்பாலை தந்து குழந்தையைக் கொன்ற கவிதா, மாமியார் செல்லம்மாளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வயிற்று வலியில் குழந்தை உயிரிழந்ததாக கூறி நாடகமாடியது தெரிய வந்தது. மேலும் மாமியார் தூண்டுதலின் பேரில் பெண் குழந்தையைக் கொன்றதாகத் தாய் காவல்துறையிடம் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார். 

tamilnadu children incident

 

அண்மையில் மதுரை உசிலம்பட்டியில் ஒரு பெண் சிசுக்கொலை நடந்த நிலையில் தேனியில் மீண்டும் பெண் சிசுக்கொலை நடந்திருப்பது பொது மக்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



 

சார்ந்த செய்திகள்