Skip to main content

கோவில் உண்டியல் திருட்டு! வீடியோவில் சிக்கிய சிறுவனை இழுத்து வந்து ஒப்படைத்த தாய்!

Published on 23/12/2023 | Edited on 23/12/2023
The theft of the temple bill! The mother who dragged the boy caught in the video and handed him over! Resilience incident!

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் முத்துமாரியம்மன் கோவிலில் கடந்த 10 ந் தேதி இரவு கோயில் சுற்றுச்சுவர் ஏறிக் குதித்த சிலர் அம்பாள் கருவறையைப் பார்த்து தலைக்கு மேலே கைகளை தூக்கி வணங்கிவிட்டு கோயில் வளாகத்தில் இருந்த எவர்சில்வர் உண்டியலை தூக்கிச் சென்றனர். பின்னர் பூட்டை உடைத்து காசு, பணத்தை அள்ளி பைகளில் வைத்துக் கொண்டு மீண்டும் அதே இடத்தில் உண்டியலை தூக்கி வந்து வைத்துவிட்டனர். பின்னர் இரும்பு உண்டியலை உடைக்கும் போது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்துவிட கத்தியைக் காட்டி மிரட்டி விட்டு தயாராக நின்ற பைக்கில் ஏறித் தப்பிச் சென்றுவிட்டனர்.

இதுவரை அவர்கள் யார் என்பது தெரியமல் இருந்த நிலையில், அடுத்த சில நிமிடங்களில் அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்கள் அவர்களை காட்டிக் கொடுத்து விட்டது. முகத்தை மறைத்துக் கொண்டு சுவர் ஏறிக் குதித்து உள்ளே வந்த இருவரில் ஒருவர் கண்காணிப்பு கேமராவைப் பார்த்ததும் அதுவரை தனது சட்டையால் மறைத்திருந்த முகத்தை கேமராவுக்கு முன்பு காட்டி ஏளனமாக பழிப்புக் காட்டி விட்டு உண்டியலை தூக்கிச் செல்லும் காட்சியும், பிறகு கண்காணிப்பு கேமராவை உடைத்து தூக்கி வீசுவதும் துள்ளியமாக பதிவாகி இருந்தது.

அறந்தாங்கி, கீரமங்கலம், வடகாடு காவல் சரகங்களில் மட்டும் 10 க்கும் மேற்பட்ட உண்டியல் திருட்டுகள் நடந்தும் எங்கேயும் யாரையும் பிடிக்க முடியவில்லை. ஆனால் கீரமங்கலம் முத்துமாரியம்மன் கோவிலில் தான் கேமரா பதிவில் ஒருவர் முகம் தெளிவாக பதிவாகி இருந்ததால் இந்த முறை உண்டியல் திருடர்கள் சிக்குவார்கள் என்ற நம்பிக்கை போலீசாரிடமும் இருந்தது.

இந்த வீடியோ காட்சிகள் 11 ந் தேதி நக்கீரன் இணையம் முதல் பல செய்தி சேனல்களிலும் வெளியான நிலையில் பரபரப்பு ஏற்பட்டிருந்தது. இந்த வீடியோ காட்சிகள் வைரலாக பரவியது. வீடியோ வைரலான நிலையில் அறந்தாங்கி காவல் சரகத்திற்கு உட்பட்ட ஒரு கிராமத்தைச் சேர்ந்த 2 சிறுவர்கள் உட்பட ஒரு இளைஞர் மீது அப்பகுதி பொதுமக்களே சந்தேகப்பட்டு, சந்தேகப்பட்ட நபர்களின் இன்ஸ்டாகிராம் ஐடி யை திறந்து பார்த்த போது சந்தேகம் உறுதியானது. சம்மந்தப்பட்ட ஒரு சிறுவன் வீட்டிற்குச் சென்ற சில உள்ளூர் இளைஞர்கள், வீடியோவில் முகம் காட்டிய சிறுவனின் வீட்டிற்குச் சென்று சிறுவனின் தாயாரிடம் அந்த வீடியோ காட்சியை காட்டி உங்கள் மகன் முகம் தான் இது என்று சொல்லிவிட்டு வந்தனர்.

வீட்டிற்கு வந்த தன் மகனிடம் இதுபற்றி கேட்க யாரோ கிராபிக்ஸ்ல என் முகத்தை போட்டிருக்காங்க என்று சொல்லி தன் தாயை நம்பவைத்து சமாளித்தான். ஆனால் அடுத்தடுத்து பலர் வந்து சொல்லச் சொல்ல அவமானத்தின் உச்சத்திற்கே போன கணவனை இழந்த அந்த ஏழைத் தாய், தன் மகனை அழைத்து நீ திருடி இருக்க மாட்டாய். நம்புறேன். ஆனால் அந்தப் பசங்க கூட போய் தான் வீடியோவில் சிக்கி இருக்கிறாய். இப்ப இருட்டிருச்சு அதனால காலையில விடியும் போது நாம போலீஸ் ஸ்டேசன் போகணும். நல்லா தூங்கு என்று சொல்லி இரவு சோறு போட்டு சாப்பிட வைத்து தூங்க வைத்துவிட்டு இரவெல்லாம் கண் விழித்து தன் மகனை எப்போது விடியும் கண்கொத்தி பாம்பாக பார்த்துக்கொண்டிருந்தார். (அதற்குள் போலீசாரும் தேடத் தொடங்கி இருந்தனர்) பொழுது விடிந்தது தன் மகனை கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு அறந்தாங்கி காவல் நிலையத்திற்கு சென்ற தாய், கீரமங்கலத்தில் உண்டியல் திருடின வீடியோவில் என் மகன் படமும் இருக்குனு ஊர்காரங்க சொல்றாங்க. இவன் தான் அது. இவனை நல்லா விசாரிச்சு நடவடிக்கை எடுங்கய்யா. இவன் செஞ்ச வேலையால வெளிய தலைகாட்ட முடியல என்று சொல்லிவிட்டு கண்களைத் துடைத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்துள்ளார்.

The theft of the temple bill! The mother who dragged the boy caught in the video and handed him over! Resilience incident!

அதன் பிறகு நடந்த விசாரணையில்.. எங்க பக்கத்துவீட்டு முத்து 'வாங்கடா மது அருந்தலாம் என அழைச்சான். நானும், பள்ளிக்கூடம் படிக்கிற பையனும் போனோம். போற இடத்தில் மறமடக்கி ஆசைசவுந்தரும் சேர்ந்தான். மது அருந்தினோம். அப்புறம் தான் உண்டியல் தூக்கனும்னு சொல்லி எங்களை மிரட்டினாங்க. அப்ப போதையில தான் நான் முகம் காட்டி சிரிச்சுட்டேன். போதை தெளிஞ்சதும் தான் தப்பு பண்ணிட்டோம்னு நினைச்சேன். அதுக்குள்ள வீடியோவும் வெளியாகி எங்க அம்மாவை அழ வச்சுடுச்சு. அதனால தான் எங்கம்மா அழைச்சதும் வந்துட்டேன்' என்று சொல்லி முடிக்க அவன் சொன்ன ஆட்களில் ஆசைசவுந்தர் மட்டும் தலைமறைவாக மற்றவர்களை போலீசார் கைது செய்தனர்.

தொடர்ந்து கீரமங்கலம் காவல் நிலையத்தில் விசாரணை நடக்கும் போது வந்த சிறுவனின் சித்தி உள்ளிட்ட உறவினர்களும் அவனது தாயாரைப் போலவே, எங்க பையன் தெரிஞ்சோ தெரியாமலோ இந்த தப்பு பண்ணிட்டான். அவன் இனிமேல் இது போல பண்ணக்கூடாது. இதோட அவன் மட்டுமல்ல அவன் கூட்டாளிகளும் திருந்தனும். நல்ல புள்ளைகளா வாழனும். திருந்தலைன்னா எங்களுக்கு இந்த புள்ளையே வேண்டாம்ய்யா என்று கண்ணீர் மல்க கூறிச் சென்றனர். இதைப் பார்த்த போலீசார்களும் கலங்கிவிட்டனர். இவ்வளவு நல்லவர்களோட புள்ளைங்க இப்படி பண்றிங்களேடா என்று அறிவுரை கூறி அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறைக்கும், சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கும் அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து சில போலீசார் நம்மிடம் கூறும் போது.. உண்டியல் திருட்டில் முகம் காட்டிய சிறுவனின் தாயார், சித்தி போல ஒவ்வொரு தாயும் இருந்தால் எந்த பிள்ளையும் தப்பு பண்ணமாட்டாங்க. தன் பிள்ளை தப்பு பண்ணிட்டான்னு தெரிஞ்சதும் அவனை கையோட காவல் நிலையம் அழைத்துச் சென்று ஒப்படைத்த அந்த தாயை மறக்க முடியாது. அவன் திருந்திடுவான். திருந்தலைன்னா அவங்க அம்மாவே இவனை எதை வேனும்னாலும் செய்துடுவாங்க.

ஆனால் அதே நேரத்தில் இங்கே கஞ்சா, திருட்டு என பல சம்பவங்களில் இது போன்ற சிறுவர்கள், மாணவர்கள், இளைஞர்களை விசாரணைக்கு அழைத்து வரும் போது கூடவே வரும் சில தாய்மார்கள் என் பிள்ளை தவறு செய்திருக்க மாட்டான். அவனை விடுங்கன்னு விசாரணையே செய்ய விடாமல் செய்றவங்களும் உண்டு. அதேபோல இதே தவறு செய்யும் சிறுவர்கள், இளைஞர்களை காப்பாற்ற உள்ளூர் அரசியல்வாதிகளும் காவல் நிலையம் வந்து, தவறுக்கு வக்காலத்து வாங்கி பேசி அவர்களை மீட்டுச் செல்கிறார்கள். அல்லது உடனே நீதிமன்றம் போய் ஜாமீன் எடுக்கிறார்கள். இதனால் அந்த சிறுவர்கள், இளைஞர்களுக்கு நாம் எந்த தவறு செய்தாலும் நம்மை காப்பாற்ற ஆள் இருக்கு என்ற தைரியத்தில் அடுத்தடுத்து கஞ்சா விற்பனை, கஞ்சா கடத்தல், அதற்காக பைக் திருட்டு, தனியாக செல்லும் பெண்களிடம் செயின் பறிப்புனு சட்ட ஒழுங்கில் வளர்ந்து வருகிறார்கள். முதலில் இது போன்ற தவறுக்கு துணையாக அரசியல்வாதிகள் திருந்தினால் தவறு செய்வோரும் இனி நம்மை காப்பாற்ற ஆள் இல்லை என்று அவர்களும் திருந்துவார்கள்' என்றனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Father sentenced to life imprisonment for misbehaving with daughter

திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் 64 வயதான விவசாயி. இவருக்கு 35 வயதில் மாற்றுத்திறனாளி (மன நலம் பாதிக்கப்பட்ட ) ஒரு மகள் இருந்தார். கை, கால்களும் செயல் இழந்த அந்த பெண் தனது தாயாரின் பராமரிப்பில் இருந்து வந்த நிலையில் அவரது தாயார் இறந்து விட்டார்.

இதனையடுத்து தனது தந்தை மற்றும் பாட்டியின் பராமரிப்பில் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த 2021 ஆவது ஆண்டில் பெண்ணின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டதையடுத்து, மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். இதில் மாற்றுத்திறனாளியான அந்த பெண் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இது குறித்து அவரது உறவினர்கள் முசிறி மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், தந்தையான விவசாயியே அவரது மகளை 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் தேதி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கிய விவரம் தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர். அடுத்த சில மாதங்களில், பெண்ணுக்கு குறை பிரசவத்தில் குழந்தை இறந்து பிறந்தது. மேலும் 5 மாதங்கள் கழித்து உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் அந்த பெண்ணும் உயிரிழந்தார்.

இதுதொடர்பான வழக்கு திருச்சி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டு நடந்து வந்தது. வழக்கில் வியாழக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது. இதில், குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து விவசாயிக்கு வாழ்நாள் சிறை தண்டனையும், ரூ. 10,000 அபராதமும் விதித்து நீதிபதி ஸ்ரீவத்சன் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசுத்தரப்பு சிறப்பு வழக்குரைஞராக ஜாகிர் உசேன் ஆஜரானார்.

Next Story

வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்த மனைவியின் கையை வெட்டிய கணவன்!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
husband cut the hand of his wife who was talking on video call

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சேகர் (41 ) நெசவுத் தொழிலாளி இவரது மனைவி ரேவதி (வயது 35) இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இரண்டு மகள்களுக்கு திருமணம் ஆகிவிட்ட நிலையில் மூன்றாவது மகள் பள்ளியில் படித்து வருகிறார் .

இந்த நிலையில் ரேவதி கடந்த சில மாதங்களாக சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் பார்ப்பது, போட்டோ போடுவது, ஆன் லைன் நண்பர்களுடன் பேசுவது என அதிக அளவு நேரம் செலவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு  குடும்பத்தில் சண்டை நடந்து வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று இரவு ரேவதி வீடியோ காலில் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். வீட்டுக்கு வந்த சேகரை கவனிக்காமல் மனைவி பேசிக்கொண்டே இருந்ததால் ஆத்திரம் அடைந்த சேகர் ரேவதியை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து இருவர்களுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில்  ஆத்திரமடைந்த சேகர் வீட்டிலிருந்த அருவாமனையை எடுத்தவர், இந்த கை தானே போன் எடுத்து பேசிக்கிட்டே இருக்குது, ரீல்ஸ் பார்க்கச்சொல்லுது, பேசச்சொல்லுது என ரேவதியின் வலது கையை வெட்டியுள்ளார்.

கையில் வெட்டுப்பட்டதால் அலறிய ரேவதியை அக்கம்பக்கத்தினர் மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். வெட்டப்பட்ட கை பலத்த சேதம் அடைந்த நிலையில் அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து குடியாத்தம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து, சேகரை அழைத்துவந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதில், குடும்பத்தை கவனிக்காமல் எப்போது பார்த்தாலும் போன் வைத்துக் கொண்டு யாருடனாவது பேசிக்கொண்டே இருக்கிறார். அல்லது ஏதாவது பார்த்துக் கொண்டே இருக்கிறாள். இதைக்கேட்டதற்கு என்னை எடுத்தெறிந்து பேசினாள். இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு வர ஆரம்பித்தது அந்த கோபத்தில் தான் வெட்டினேன் எனக் கூறியுள்ளார்.