
காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், ஸ்டெர்லைட் ஆலையை மூடகோரியும் தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர், திரையுலக நட்சத்திரங்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் தமிழக மக்களுக்கு ஆதரவாக மலேசியா வாழ் தமிழர்கள் மலேசியாவின் பினாங்கு பகுதியிலுள்ள பார்க் வியூ டவர்ஸ் பூங்காவில் பினாங்கு தமிழ்த் தோழர்கள் என்னும் அமைப்பின் கீழ் தமிழ் இளைஞர்களும் தமிழ்க் குழந்தைகளும் ஒன்றுகூடி காவிரியை மீட்கக் கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும் முழக்கமிட்டுப் போராட்டம் நடத்தினர்.