Skip to main content

சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்... விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தீர்மானம்!

Published on 08/10/2021 | Edited on 08/10/2021

 

struggle in front of the Collector's Office ... Resolution of the Federation of Agricultural Associations!

 


சிதம்பரம் மேலவீதியில் கடலூர் மாவட்ட விவசாயச் சங்கங்களின் கூட்டமைப்பின் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு விவசாய சங்க கூட்டமைப்பு தலைவர் ரவீந்திரன் தலைமை தாங்கினார். இதில் விவசாயிகள் மணல்மேடு சரவணன், சிவாயம் மணிவண்ணன், வடக்குமாங்குடி நீலமேகம், சிறுகாலூர் சிற்றரசு, வல்லம்படுகை வசந்தன், வடமூர் ரெங்கநாயகி, அரியகோஷ்டி நடராஜன், செங்கமேடு அருள்பிரகாசம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.  

 

கூட்டத்தில் 2020-2021 ஆம் ஆண்டு நிவர் மற்றும் புரவி புயல், பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்குப் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் வழங்கப்படவேண்டிய இழப்பீட்டுத் தொகையை உடனே வழங்க வேண்டும். வருவாய் அடங்கல் ஆவணத்தை நிபந்தனையின்றி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு உடனே வழங்க வேண்டும்.

 

2021-2022 ஆம் ஆண்டு சம்பா சாகுபடிக்குத் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர்க்கடனை உடனே வழங்க வேண்டும். பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்த அனைத்து பரிவர்த்தனை சொத்துக்களை இணையதள பதிவின் அடிப்படையில் உடனடியாக பட்டா மாற்றம் செய்ய வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் வரும் 11-ஆம் தேதி காலை சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் எனத் தீர்மானம் நிறைவேற்றினர்.

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர். 

Next Story

‘பகல் 12 முதல் 3 வரை வெளியே வர வேண்டாம்’ - மதுரை மக்களுக்கு அறிவுறுத்தல்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Advice to Madurai people Don't come out between 12 noon and 3 am

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. 

இந்த நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மதுரை மாவட்ட மக்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “வெயில் அதிகரிப்பு காரணமாக மதுரையில் பகல் 12 மணி முதல் 3 மணி வரை மக்கள் வெளியே வர வேண்டாம். வெயில் தாக்கம் மற்றும் அனல்காற்று அதிகமாக வீசுவதால் மக்கள் முன்னெச்சரிக்கயாக இருக்க வேண்டும்.

அதாவது, வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களில் குழந்தைகள் கால்நடைகளை அனுமதிக்கக் கூடாது. தாகம் எடுக்காவிட்டாலும் போதுமான தண்ணீர் குடிக்க வேண்டும். பழச்சாறுகள் அருந்த வேண்டும். அவசர கால தேவைகளுக்கு 1077 மற்றும் 1070 ஆகிய இலவச அழைப்பு எண்களை தொடர்பு கொள்ளலாம்” எனத் தெரிவித்தார்.