Skip to main content

கருப்பு பூஞ்சை நோய்க்கான சிறப்பு தனிப்பிரிவு 24 மணி நேரமும் செயல்படும் – டீன் வனிதா அறிவிப்பு!

Published on 28/06/2021 | Edited on 28/06/2021

 

Special Unit for Black Fungus 24 Hours - Dean Vanitha Announcement

 

கரோனா நோய் தொற்றுக்குப் பிறகு சர்க்கரை வியாதி உள்ளவா்களையும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவா்களையும் கருப்பு பூஞ்சை நோய் தாக்குவதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா். இந்நோய் குறித்த விளக்கங்களை இன்று (28.06.2021) திருச்சி அரசு தலைமை மருத்துவமனை டீன் வனிதா உள்ளிட்ட மருத்துவா்கள் குழு கூறுகையில், கரோனா நோய் தொற்று பாதிக்கப்பட்டவா்களுக்கு கொடுக்கப்படும் ஸ்டீராய்டு மருந்துகளால் இந்தப் பூஞ்சை அதிகளவில் பரவ ஆரம்பிப்பதாக தெரிவித்துள்ளனா். எனவே தமிழ்நாடு அரசு இந்த நோயை அறிவிக்கத்தக்க நோயாக கடந்த மே 20ஆம் தேதி அறிவித்துள்ளது.

 

எனவே இந்நோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கும் உடனடியாக சிகிச்சை வழங்க திருச்சி அரசு மருத்துவமனையில் 100 படுக்கை வசதியுள்ள தனியான வார்டு பகுதி அமைக்கப்பட்டுள்ளது. இந்நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் அறுவை சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்குத் தனியாக அமைக்கப்பட்டு, பொது மருத்துவா், முதுகலை மருத்துவர், செவிலியா்கள் என 4 சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பணியமர்த்தபட்டுள்ளனா். மேலும், அறுவை சிகிச்சைக்கான நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய அறுவை சிகிச்சை கூடம் தனியாக அமைக்கப்பட்டுள்ளது. மருந்தியல் மருத்துவா்களும் பணியமர்த்தப்பட்டுள்ளனா். கண், காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை நிபுணா்களும், பல் மருத்துவா்களும், நுண்ணுயிரியல் வல்லுநா்களும் தற்போது பணியாற்றிவருகின்றனா்.

 

ஆம்போடெரிசன் – பி என்ற ஊசி மற்றும் போசகானசோல் என்ற மாத்திரையும் மருந்துகளாக பயன்படுத்தப்படுகிறது. இதுவரை கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு 82 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனா். அதில் 27 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மேலும் 46 பேருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, பூஞ்சை அகற்றப்பட்டுள்ளது. 30 பேர் தற்போது சிகிச்சை பெற்றுவருகின்றனா். எனவே இந்த நோயைக் கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் தற்போது எடுக்கப்பட்டுவருவதாகவும், அதற்கான உயா்தர சிகிச்சை நம்மிடம் உள்ளதாகவும் திருச்சி அரசு மருத்துவா்கள் குழு தெரிவித்துள்ளனா்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"வேங்கை வயல் உட்பட எந்த வாக்குப்பதிவு மையத்திலும் மறு வாக்குப்பதிவு இல்லை" - திருச்சி ஆட்சியர்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Trichy Collector says There is no re-voting in any polling center

தமிழகத்தில் நேற்று ஒரே கட்டமாக 18 -வது நாடாளுமன்ற தேர்தல் நேற்று காலை 7 மணிக்கு துவங்கி மாலை 6 மணிக்கு முடிவுற்றது. இதனை தொடர்ந்து வாக்குச்சாவடியில் பயன்படுத்தப்பட் மின்னணு வாக்கு இயந்திரங்கள், விவி பேட் சீல் வைக்கப்பட்டு வாக்குச்சாவடியில் இருந்துவாக்கு எண்ணிக்கை மையமான ஜமால் முகமது கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டு, கட்டுப்பாட்டு இயந்திர அறையில் வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கு தேர்தல் பொது பார்வையாளர் தினேஷ்குமார் முன்னிலையில் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான பிரதீப்குமார்  வாக்குப்பட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறையை அடைத்து அனைத்து கட்சியினர் முன்னிலையிலும் சீல் வைக்கப்பட்டது.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான பிரதீப்குமார் கூறியதாவது:-ஒவ்வொரு வாக்கு சாவடிகயிலிருந்தும் வாக்கு இயந்திரங்கள் நேற்று ஜமால் முகமது கல்லூரியில் கொண்டு வரப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் 67.42% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. மக்கள் வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்களித்து இருந்தால் கண்டிப்பாக இன்னும் வாக்கு சதவீதம் உயர்ந்திருக்கும். நகர்ப்புற பகுதிகளில் வாக்கு சதவீதம் குறைவாகத்தான் உள்ளது.

நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது சில கோளாறுகள் காரணமாக விவிபேட் மட்டும் கட்டுப்பாட்டு கருவிகள் மாற்றம் செய்யப்பட்டது. திருச்சி நாடாளுமன்ற தொகுதியில்  விதிமீறல்கள் தொடர்பாக 21 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்த நேரத்தில் திருச்சி பாராளுமன்ற தொகுதியில் 5.8 கோடி , தங்கம் மற்றும் பரிசுப் பொருட்கள் 8.6 கோடி வரை பறிமுதல் செய்துள்ளோம். அனைத்திற்கும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வருமானவரித்துறையினர் அதற்கான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

மூன்றடுக்கு பாதுகாப்பு பணி இங்கு போடப்பட்டுள்ளது. இதில் ஒரு அடுக்கில் துணை ராணுவ கம்பெனியை சேர்ந்தவர்கள் இருப்பார்கள். 24 மணி நேரமும் சிசிடிவி கொண்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. வாக்குப்பதிவு நாளில் சில நிறுவனங்கள் செயல்பட்டதாக புகார் எழுந்தது. குறிப்பாக ட்விட்டரில் கூட நமக்கு ஒரு புகார் வந்திருந்தது. உடனடியாக அந்த நிறுவனத்தை அணுகி விடுமுறை விட சொல்லி ஏற்பாடு செய்தோம். திருச்சி மக்களவைத் தொகுதியில், புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் உட்பட, எந்த வாக்கு பதிவு மையத்திலும் மறுவாக்குப் பதிவு இல்லை. திருச்சி மக்களவைத் தொகுதியில், 67.42 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. இவ்வாறு திருச்சி மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

Next Story

ஐ.ஜே.கே. நிர்வாகி வீட்டில் பணம் பறிமுதல்!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Money confiscated at the IJK administrator house

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை இன்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஐ.ஜே.கே. கட்சியின் நிர்வாகி வினோத்சந்திரன் என்பவரின் வீட்டில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக வைத்திருந்த ரூ. 1 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர். பெரம்பலூரில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஐ.ஜே.கே. நிறுவனர் பாரிவேந்தருக்கு ஆதரவாக வாக்களிக்க இந்தப் பணம் கொடுக்கப்பட இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், பாரிவேந்தர் தொடர்பான கையேடுகளையும் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். முன்னதாக தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்ய வருவதை அறிந்து தனது வீட்டின் கழிவறையில் வினோத்சந்திரன் பணத்தை பதுக்கியுள்ளார்.