Skip to main content

கரோனா காரணமாக சொந்த ஊருக்குத் திரும்பியவருக்கு லாட்டரியில் கிடைத்த 12 கோடி!!...

Published on 21/01/2021 | Edited on 21/01/2021

 

12 crore won in the lottery for a person who returned to his hometown due to Corona !! ...
                                                           ஷர்புதீன்

 

கேரள லாட்டரியில், தமிழகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது. கேரள அரசின் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பம்பர் லாட்டரியில் இந்த வருடம் முதல் பரிசு 12 கோடி என்று அறிவிக்கப்பட்டு, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு விற்பனைக்கு வந்தது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவருக்கு முதல் பரிசு 12 கோடி கிடைத்துள்ளது.

 

அந்த பம்பர் பரிசின் குலுக்கல் கடந்த 17ம் தேதியன்று திருவனந்தபுரம் மாநகராட்சியின் மேயர் ஆரியா ராஜேந்திரன் முன்னிலையில் நடந்தது. அதில், முதல் பரிசான 12 கோடி ரூபாய் எக்ஸ்.ஜி.358753 என்ற எண்ணுள்ள டிக்கெட்டிற்கு கிடைத்துள்ளது.

 

அந்தப் பரிசைப் பெறும் அதிர்ஷ்டசாலி கேரள மாநிலத்தில் தென்படவில்லை. ஆனால் குறிப்பிட்ட அந்தச் சீட்டு தமிழக - கேரள எல்லையிலுள்ள ஆரியங்காவு நகரின் பரணி லக்கி சென்டரிலிருந்து விற்பனை செய்யப்பட்டது என தெரியவந்தது. அந்த லாட்டரி சென்டர் நடத்துகிற தமிழகத்தின் தென்காசியைச் சேர்ந்த மொத்த வியாபாரியான வெங்கடேஷ் என்பவரால் சுமார் 5700 டிக்கெட்கள் விற்கப்பட்டது என்பது தெரியவர, அதிர்ஷ்டசாலியைத் தேடும் படலம் தொடங்கியது.

 

அந்த லக்கி சென்டர் உரிமையாளருக்கும் அந்தச் சீட்டு யாரிடம் விற்கப்பட்டது என்று தெரியாத காரணத்தால், இரண்டு நாட்களாக அந்த அதிஷ்டசாலி யார் என்று தெரியாத குழப்பம் நீடித்தது.

 

தொடர் தேடலில், அந்த அதிர்ஷ்டசாலி, கேரள எல்லையை ஒட்டியிருக்கும், தென்காசி மாவட்டத்தின் இரவிய தர்மபுரம் கிராமத்தில் வசிக்கும் ஷர்புதீன் என்பது தெரிய வந்தது. நேற்றைய தினம் (20.01.2021) கேரள தலைமைச் செயலகத்திற்குச் சென்று அங்குள்ள லாட்டரித்துறை அலுவலகத்தில் அதன் இயக்குனர் கார்த்திகேயனிடம் டெபாசிட் செய்திருக்கிறார் ஷர்புதீன்.

 

12 crore won in the lottery for a person who returned to his hometown due to Corona !! ...

 

ஏஜண்ட் கமிசன் மற்றும் வரி நீங்கலாக 7.56 கோடி ஷர்புதீனுக்குக் கிடைக்கும். இதை விற்பனை செய்த வெங்கடேஷுக்கு ஏஜண்ட் கமிஷனாக, ஒரு கோடி 20 லட்சம் கிடைக்கும். 

 

ஷர்புதீன் கேரளா எல்லையை ஒட்டிய தமிழகத்தைச் சேர்ந்தவர். துபாயில் பணியிலிருந்தபோது கரோனா காரணமாக சொந்தக் கிராமம் திரும்பியவருக்கு வேலைவாய்ப்பில்லை. அதன் காரணமாக அண்டையிலுள்ள கேரளாவின் ஆரியங்காவு நகரில் வெங்கடேஷ் லக்கி சென்டரில் லாட்டரி சீட்டுக்களை வாங்கி ஆரியங்காவிலிருந்து புனலூர் வரை சென்று சில்லரை விற்பனை செய்து கிடைக்கும் கமிசனில் பிழைப்பை ஓட்டி வந்திருக்கிறார்.

 

இந்நிலையில், வழக்கமாக தான் விற்கும் லாட்டரி டிக்கெட்களில் ஒன்றை மட்டும் எடுத்து தனக்காக ஒதுக்கி வைத்துக்கொள்ளும் பழக்கம் கொண்ட ஷர்புதீன், இந்தப் பம்பர் லாட்டரியிலும் தனக்காக ஒரு சீட்டை ஒதுக்கி வைத்துக்கொண்டு மற்றவைகளை விற்றிருக்கிறார். அப்படி எடுத்து வைத்த அந்த டிக்கெட்டின் எண்ணிற்குத்தான் பம்பர் பரிசாக 12 கோடி அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது.

 

கோடிகளைப் பரிசாகப் பெற்றவரும், கோடியைத் தாண்டிய கமிசனைப் பெறும் ஏஜண்ட்டும் தமிழர்களே என்பது கவனிக்கத்தக்கது. அதிர்ஷ்டசாலி ஷர்புதீனை நாம் தொடர்பு கொண்டபோது அவர் அழைப்பை ஏற்கவில்லை.

 

சார்ந்த செய்திகள்

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

Next Story

9 ஆண்டுகளாக ஓட்டுப் போட முடியாமல் தவிக்கும் பெண்; காரணம் என்ன?

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Woman unable to vote for 9 years in kerala

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 

அந்த வகையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், பொது மக்கள் என அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதே வேளையில், கடந்த 9 ஆண்டுகளாக கேரள பெண் ஒருவர் வாக்களிக்க முடியாமல் தவித்து வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம், ஷொர்ணாவூர் அருகே குருவாயூரப்பன் பகுதியைச் சேர்ந்தவர் உஷா (62). இவர் கடைசியாக, 2016ஆம் ஆண்டு கேரளாவில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலின் போது வாக்களித்துள்ளார். அப்போது, அவர் வாக்களித்தன் சான்றாக தேர்தல் ஆணையத்தின் சார்பாக அதிகாரிகள் அவருடைய ஆள்காட்டி விரலில் ‘மை’ வைத்துள்ளார்கள். வழக்கமாக அங்கு வைக்கப்படும் ‘மை’ சில நாட்களில் தானாகவே அழிந்துவிடும். ஆனால், உஷாவுக்கு நீண்ட நாட்களாகியும் அழியவில்லை. இதில் குழப்பமடைந்த உஷா, சோப்பு உள்ளிட்ட பல பொருட்களைப் பயன்படுத்தி மையை அழிக்க முயற்சி செய்துள்ளார். ஆனால், மை அழியவில்லை.

இதனையடுத்து, உஷா கடந்த 2019ஆம் ஆண்டில் நடந்த மக்களவைத் தேர்தல் மற்றும் 2021ஆம் ஆண்டில் நடந்த சட்டசபைத் தேர்தலிலும் வாக்களிக்க சென்றுள்ளார். ஆனால், அவரது விரலில் மை இருப்பதைக் கண்ட அதிகாரிகள், அவருக்கு வாக்களிக்கும் அனுமதியை மறுத்துவிட்டனர். இதில் மனமுடைந்த உஷா, இன்று நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தனது ஜனநாயக கடமையை ஆற்ற வாக்குச்சாவடிக்கு சென்றுள்ளார். ஆனால், இப்போதும் அவரது விரலில் மை இருப்பதால் அவர் வாக்கை செலுத்த முடியாமல் ஏமாற்றத்துடன் தனது வீட்டுக்குச் சென்றுள்ளார்.