Skip to main content

பாலியல் குற்றங்களுக்கு வித்திடும் ஆபாச நடனம்: எலச்சிபாளையம் போலீசாரிடம் புகார்

Published on 28/03/2019 | Edited on 28/03/2019

நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையத்தில் சிவன் கோவில் திருவிழாவில் கலைநிகழ்ச்சி என்ற பெயரில் மதுபான பார்களில் நடனமாடும் அழகிகளை வைத்து ஆபாச நடன நிகழ்ச்சி நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

ஈரோடு மாவட்டம் பள்ளிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவர் கனா பாய்ஸ் என்ற நடன கலைநிகழ்ச்சி குழு ஒன்றை வைத்துக் கொண்டு கோவில் திருவிழாக்களில்  பாரம்பரிய கலைநிகழ்ச்சி நடத்துவதாக கூறி நீதிமன்றத்தில் ஒப்புதல் ஆணைபெற்று மது பார்களில் நடனமாடும் அழகிகளை வைத்து ஆபாச நடன நிகழ்ச்சிகளை செய்து லச்சக்கணக்கில் சம்பாரித்துள்ளார்.

 

sexual dance

 

இந்நிலையில் கடந்த 22 ஆம் தேதி நாமக்கல் வையப்பன் மலை அடிவாரத்தில் உள்ள சிவன் கோவில் விழாவில் நடைபெற்ற திருவிழாவில்  பிரகாஷ் நடத்திய கலைநிகழ்ச்சி அங்கு கூடியிருந்த பெண்கள் முகம் சுளிக்கும் வகையில் இருந்ததாகவும் மிகவும் ஆபாசமாகவும் இருந்ததாக குற்றசாட்டு எழ நடன கலைஞர்களின் தலைவர் அஜித் ராஜா  பிரகாஷை தொலைபேசியில் தொடர்புகொண்டு இது சம்பந்தமாக விளக்கம் கேட்டுள்ளார். நீ இதே மாதிரிதான் பண்ணிக்கிட்டு இருப்பியா, இதுபோல ஆடும்  அவர்களை ஏதவாது  செய்துவிட்டால் யார் பொறுப்பு என  எச்சரித்துள்ளார். ஆனால் அவர் கேட்க்கும் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் போனை கட் செய்துள்ளார் பிரகாஷ்.

 

sexual dance

 

ஆனால் அடுத்த சிலநாட்களிலேயே பிரகாஷின் நட்புவட்டாரத்தில் உள்ள சிலர் அஜித்ராஜாவை தொலைபேசியில் மிரட்டியுள்ளனர்.  

 

இதனையடுத்து நடன கலைஞர்கள் சங்க தலைவர் அஜித்ராஜா எலச்சிபாளையம் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

sexual dance

 

இது பற்றி அஜித்ராஜா கூறுகையில், சம்பந்தப்பட்ட நபரான பிரகாஷ் பெங்களூர் மற்றும் மும்பையில் பாரில் நடனமாடும் பெண்களை இங்கே கூட்டிவந்து அறையெடுத்து தங்கவைத்து ஆபாச நடன நிகழ்ச்சிகளை நடத்துவதையே தொழிலாக செய்துவருகின்றார். பொள்ளாச்சி வழக்கில் கூட பிரகாசுக்கு தொடர்பிருப்பதாக சந்தகேமும் எங்களுக்கு உள்ளது எனக்கூறினார்.

 

இதுபோன்ற ஆபாச நிகழ்ச்சிகளே பாலியல் குற்றங்களுக்கு முதல் காரணமாகும், இதுபோன்ற நிகழ்ச்சிகள்தான் பாலியல் குற்றங்கள் நடைபெற உந்துதலாக இருக்கிறது. ஆனாலும் இன்று வரை தென் மாவட்டங்களில் இதுபோன்ற ஆபாச நடனங்கள் தடை செய்யப்பட்டாலும் அதையும் மீறி சிலர் இதை தொழிலாக செய்துதான் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.   

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வெயிலின் தாக்கம்; திண்டல் கோவிலில் தரைவிரிப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Sun exposure; Carpet in Dindal temple

கோடை காலம் தொடங்கி வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. நீர்சத்து  குறைபாட்டை தடுப்பதற்காக ஒவ்வொரு சுகாதார நிலையங்களிலும் ஓ.ஆர்.எஸ் கரைசல்களை ஆயத்தமாக வைத்திருக்கும் படி தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் கோடை காலம் தொடங்கி பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் பலரும் சுற்றுலா தளங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோட்டில் திண்டல் வேலாயுதசுவாமி கோவிலில், பக்தர்கள் பாதகங்களை வெயிலில் இருந்து காக்கும் வகையில், தென்னை நார் விரிப்பு போடப்பட்டுள்ளது. கோடை வெயில் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பக்தர்களின் பாதங்களை பாதுகாப்பதற்காக, திண்டல் வேலாயுதசுவாமி கோவில் வளாகத்தில், 1.20 லட்சம் ரூபாய் மதிப்பில், தென்னை நார் விரிப்பு போடப்பட்டுள்ளது. இதில்லாமல் பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கப்படுகிறது. கோவில் வளாகத்தில் ஆங்காங்கே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாய்களும் அமைக்கப்பட்டுள்ளன.

Next Story

கோவில் காவலாளி அடித்துக் கொலை; போலீசார் தீவிர சோதனை!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
69-year-old temple watchman was beaten to passed away near Mappedu

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் மப்பேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேட்டுமாநகர் பகுதியில் புதிதாக விநாயகர் கோயில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் கட்டுமான பணிக்காக செங்கல் இறக்கி வைத்திருப்பதால், அதனை பாதுகாப்பதற்காக  கோவிலுக்கு காவலாளியாக செல்வம் (69) என்ற முதியவர் கடந்த இரண்டு நாட்களாக வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை கோவில் காவலாளி செல்வம் தலையில் பலத்த காயங்களுடன் விழுந்து கிடப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் மப்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து மப்பேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு நடத்தினர். தலையில் பலத்த காயங்களுடன் உயிரிழந்த காவலாளி செல்வம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், முதியவர் செல்வத்திற்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் பிள்ளைகள் ஏற்கெனவே இறந்துவிட்ட நிலையில், தனியாக வாழ்ந்து வந்தது தெரிந்தது. மப்பேடு மாநகரில் உள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த இரண்டு நாட்களாக கோயில் கட்டுமான பணி காரணமாக இரவு காவலாளியாக வேலை பார்த்ததும் தெரியவந்தது. எனவே புதிதாக கட்டப்படும் கோயிலில் 69 வயதான செல்லம் முதியவர் காவலாளியாக வேலை பார்த்த நிலையில் அவரை அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எதற்காக இந்த கொலை நடைபெற்றது? இந்தக் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து மப்பேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவலாளிக்கே பாதுகாப்பு இல்லாத சம்பவத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.