
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் கார் டிரைவர் அன்புச்செழியன். இவர் நாகப்பட்டினம் மாவட்டம் எருக்கூர் அடுத்த தில்லைபட்டினம் கிராமத்தைச்சேர்ந்தவர். உடல்நலக்குறைவு காரணமாக சொந்த ஊருக்கு சென்று மருத்துவ சிகிச்சை எடுத்த நிலையில், சிகிச்சை பலனின்றி அன்புச்செழியன் உயிரிழந்தார்.

இதையடுத்து, தில்லைப்பட்டினம் சென்று அன்புச்செழியன் உடலைப்பார்த்து , தலையில் அடித்துக்கொண்டு கதறு அழுதார் சீமான். உடன் இருந்த கட்சியினர் அவரை தேற்றினர்.

சீமானுக்கு டிரைவராக இருந்ததோடு மட்டுமல்லாமல், அவருக்கு பாதுகாவலனாகவும், உதவியாளராகவும், தம்பி போல் அன்புச்செழியன் இருந்ததாக நாம் தமிழர் கட்சியின் சார்பில் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்புச்செழியனின் இறுதிச்சடங்கிலும் பங்கேற்று, இடுகாடு வரை அவரது உடலை சுமந்து சென்றார் சீமான்.