Skip to main content

ரேஷன் கடை பி.ஓ.எஸ் இயந்திரங்களை அரசிடம் ஒப்படைக்க பணியாளர்கள் முடிவு..!

Published on 24/12/2020 | Edited on 24/12/2020

 

Ration shop employees decide to hand over POS machines to the government ..!

 

தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்க சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் கடலூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “ குடும்ப அட்டைகளை நவீனப்படுத்தி மக்களுக்கு விரைவான சேவை வழங்க வேண்டும் என்பதால்தான் பி.ஓ.எஸ் என்ற நவீன இயந்திரம் ரேஷன் கடைகளில் கொண்டு வரப்பட்டது. அடுத்து ஸ்மார்ட் கார்டு நடைமுறையும், முறைகேடுகளை தடுக்க பயோமெட்ரிக் முறைகளும் கொண்டுவரப்பட்டன. ஆனால், நவீன மயமாக்கல்  பணி அதோடு முடிந்துவிட்டதாக அரசின் நிலை உள்ளது. 

 

விளம்பரம் மட்டுமே செய்தார்களே தவிர நவீன இயந்திரங்களின் பயன்பாட்டிற்கான முறையான வசதிகளை உருவாக்கித் தரவில்லை. நவீன முறை வருவதற்கு முன் ஐந்து நிமிடங்களில் பொதுமக்களுக்கு பொருட்கள் வழங்கப்பட்ட நிலையில் தற்போது மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. 

 

பி.ஓ.எஸ்  கருவியில் சிக்னல் பிரச்சனை உள்ளிட்ட குறைபாடுகள் உள்ளதால் ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கும், ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருகிறது.  தற்போது பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ள நிலையில் பிரச்சனை மேலும் அதிகரிக்கும். எனவே பி.ஓ.எஸ். இயந்திரத்தில் 4ஜி சிம் பொருத்த வேண்டும்.  எலக்ட்ரானிக் இயந்திரத்தில் சிக்னல் பிரச்சினையை தீர்க்க வேண்டும். 

 

நுகர்வோருக்கு பொருட்கள் வழங்கப்பட்ட பிறகு பின்புறத்தில் பொருட்கள் பற்றிய விவரங்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பி.ஓ.எஸ் இயந்திரங்களை மாநிலம் முழுவதும் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள வட்ட வழங்கல் அலுவலரிடம் ரேஷன் கடை பணியாளர்கள் வரும் 26-ஆம் தேதி ஒப்படைப்பார்கள்”  என்றார். 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

ரேசன் கடையில் கை விரல் ரேகை பதிவு விவகாரம்; தமிழக அரசு அதிரடி உத்தரவு

Published on 11/02/2024 | Edited on 11/02/2024
Fingerprint registration issue at ration shop TN Govt Order

தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் 2013 இன் படி பொதுவிநியோகத் திட்ட தரவுகளில் ஏற்கனவே பதியப்பட்ட முன்னுரிமை மற்றும் அந்தியோதய அன்னயோஜனா குடும்ப அட்டைதாரர்களின் ஆதார் விவரங்களைச் சரிபார்ப்பதற்காக மின்னணு குடும்ப அட்டையில் இணைக்கப்பட்ட அனைத்துப் பயனாளிகளின் கை விரல் ரேகை பதிவு அடிப்படையிலான சரிபார்ப்பினை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பி இருந்தது. அதன்படி கடந்த அக்டோபர் 2023 முதல் குடும்ப உறுப்பினர்களின் விரல்ரேகை சரிபார்ப்புப் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை 63% குடும்ப அட்டைதாரர்களின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டுள்ளன. மீதியுள்ள அட்டைதாரர்களுக்கும் சரிபார்க்கும் பணி படிப்படியாக நடைபெற்று வருகிறது.

இந்த சூழலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ரேசன் கடைகளில் கை விரல் ரேகை சரிபார்ப்பை பிப்ரவரி மாத இறுதிக்குள் மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு சரிபார்க்கவில்லையெனில் குடும்ப அட்டையில் இருந்து பெயர்கள் நீக்கம் செய்யப்படும் என்று சில நாளிதழ்களில் செய்தி வெளியாகி இருந்தது. இதனையடுத்து ரேசன் கடைகளில் கை விரல் ரேகை சரிபார்க்காதவர்களின் குடும்ப அட்டைகள் ஏதும் ரத்து செய்யப்படமாட்டாது, கை விரல் ரேகை பதிவு செய்யாதவர்களின் பெயர்களும் நீக்கப்படாது, வெள்ளைத்தாளில் சுய விவரங்கள் ஏதும் தரவேண்டியதுமில்லை என்பதால் இதுகுறித்து பொதுமக்கள் யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தமிழக அரசின் உணவுப் பொருள் வழங்கல் துறை சார்பில் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவில், “கை விரல் ரேகை பதிவுக்காக யாரையும் கட்டாயப்படுத்தி ரேசன் கடைக்கு வரவழைக்கக்கூடாது. கை விரல் ரேகை பதிவின் போது ஆவணங்கள் எதையும் கேட்க கூடாது. கை விரல் ரேகை பதிவு செய்யாதவர்களின் பெயர்கள் குடும்ப அட்டையில் இருந்து நீக்கப்படும் என்ற தவறான தகவலை தரக்கூடாது. குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் வசதிக்கேற்ப, ரேசன் கடைக்கு சென்று கை விரல் ரேகையை பதிவு செய்துகொள்ளலாம். ரேசன் கடையில் விற்பனை முடிந்ததும் குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கு சென்று கை விரல் ரேகை பதிவு செய்யும் பணியை முடிக்க அறிவுறுத்தப்படுகிறது. பயனாளிகளுக்கு இடையூறு இல்லாமல் குழப்பமின்றி கை விரல் ரேகை பதிவு பணியை முடிக்க வேண்டும்” என உத்தரவிடப்பட்டுள்ளது. 

Next Story

நியாய விலைக் கடை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை அறிவிப்பு!

Published on 23/01/2024 | Edited on 23/01/2024
Incentive announcement for fair price shop employees!

நியாய விலைக் கடை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகையை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை, பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான கடந்த ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி (15.09.2023) காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 1 கோடியே 6 இலட்சத்து 50 ஆயிரம் மகளிர், மாதந்தோறும் ரூ.1000 பெற்றுப் பயன்பெறும் வகையில் தொடங்கி வைத்தார்.

இந்நிலையில் கலைஞர் மகளிர் உரிமைத்  திட்டத்தில் தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளை தேர்ந்தெடுக்க தமிழகத்தில் உள்ள அனைத்து நியாய விலைக் கடை ஊழியர்களும் களப் பணியாற்றினர். இவர்களை ஊக்குவிக்கும் வகையில் தற்போது தமிழக அரசு நியாய விலைக் கடை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது ரேஷன் கடை ஊழியர்களுக்கு ரேசன் கார்டு ஒன்றுக்கு 50 காசுகள் வீதம் ஊக்கத்தொகை வழங்க கூட்டுறவுத் துறை உத்தரவிட்டுள்ளது.