Skip to main content

பீஸ்ட்- கே.ஜி.எஃப் 2 போட்டிக்கு இடையே சிம்பு படம் செய்த மேஜிக்!

Published on 16/04/2022 | Edited on 17/04/2022

 

SDR at PVR Theater between Beast-KGF2. Picture!

 

சென்னையில் உள்ள பிரபல மால்களில் ஒன்று சென்னை விஆர் மால். இந்த மாலில் அமைந்துள்ளது பிவிஆர். திரையரங்குகள். புதிதாக வெளியாகும் அனைத்து படங்களும் இந்த திரையரங்குகளில் ஒளிப்பரப்பட்டு வருகிறது. அந்த வகையில், சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் கே.ஜி.எஃப் சேப்டர்- 2 படம், ஒன்றுக்கும் மேற்பட்ட திரைகளில் ஒளிபரப்பியது பிவிஆர் திரையரங்குகளின் நிர்வாகம். 

 

அதேபோல், விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படமும் தற்போது திரையிடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 14- ஆம் தேதி அன்று காதலர் தினத்தையொட்டி, நடிகர் சிம்பு நடிப்பில், கடந்த 2010- ஆம் ஆண்டு வெளிவந்த விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை தனது திரையரங்குகளில் உள்ள ஒரு திரையில் ஒளிபரப்ப தொடங்கியது பிவிஆர் நிர்வாகம். இப்படத்தை காண நாள்தோறும் பார்வையாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். 

 

இப்படத்திற்கான டிக்கெட் பதிவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சுமார் இரண்டு மாதங்களுக்கும் மேல் 'விண்ணை தாண்டி வருவாயா' திரைப்படத்தை பிவிஆர் நிர்வாகம் ஒளிபரப்பி வருகிறது. குறிப்பாக, சொல்ல வேண்டுமென்றால், பீஸ்ட், கே.ஜி.எஃப் சேப்டர் 2 ஆகிய திரைப்படங்கள் வெளியாகியுள்ள நிலையில், இதற்கு மத்தியிலும் 'விண்ணை தாண்டி வருவாயா' படம் இரண்டு மாதங்களை கடந்து இன்னும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

ரூ. 7 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்; சென்னையில் பரபரப்பு!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Rs. 7 crore worth of gold seized; Sensation in Chennai
மாதிரிப்படம்

சென்னை விமான நிலையத்திற்கு இன்று (27.03.2024) துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் என்ற விமானம் ஒன்று வந்துள்ளது. இந்த விமானத்தில் வந்தவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது கேரள மாநிலம் கோட்டையம் பகுதியைச் சேர்ந்த 37 வயதான பெண் ஒருவர் தனது 14 வயது மகளுடன் வந்துள்ளார்.

இவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது ரூ. 7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் லண்டனில் இருந்து துபாய் வழியாக வந்த போது கடத்தல் தங்கத்தோடு சிக்கியது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து 37 வயதான அப்பெண்ணை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் நீதிமன்ற காவலில் அடைத்தனர். அண்மைக் காலத்தில் பயணி ஒருவரிடம் இருந்து 12 கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்டது இதுவே முதல்முறை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மேலும், ரூ.7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னை விமான நிலைய அதிகாரிகள் மற்றும் விமான பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.