Skip to main content

"ஓ.பி.ஆர் வாகனக்தை தாக்க வந்தவர்களின் கைகளை முறிக்கத் தெரியும்" - அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பகீர் பேட்டி!

Published on 31/01/2020 | Edited on 31/01/2020

தேனி ஆவின் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் இடைக்கால நிர்வாகக்குழுவின் ஒன்றியத்தலைவராக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா தேர்வுசெய்யப்பட்டு, பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டார். அதற்கான ஆணையை ஓ.ராஜாவிடம் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வழங்கினார். அதோடு துணைத் தலைவராக, செல்லமுத்து பதவியேற்றார். உடன், நிர்வாகக் குழு இயக்குநர்கள் பதவி ஏற்று கொண்டனர்.

 

Rajenthra Bhalaji about opr issue

 

 

அதன் பின்னர் பேசிய பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, "தேனி ஆவின் இடைக்காலத் தலைவராக ஓ.ராஜா தேர்ந்தெடுக்கப்பட்டு இங்கே அமர்ந்துள்ளார். தமிழ்நாடு அட்வகேட் ஜெனரலின் அறிவுரைப்படி, ஆவின் ஆணையர் உத்தரவுப்படிதான் ஓ.ராஜா பதவியேற்றுள்ளார். இதுவரை ஆவின் ஒன்றியத்தலைவர் பதவியேற்பு விழாவில் நான் கலந்து கொண்டதில்லை. எங்கள் ஊர் ஆவின் தலைவர் பதவியேற்பு விழாவிற்குக்கூட நான் போகவில்லை. ஆனால், நேற்று இரவு ஓ.ராஜாவின் அன்புக் கட்டளையை ஏற்று இங்கே வந்துள்ளேன்.

பத்துப் பதினைந்து நாளில், தேனி ஆவினில் முறைப்படி தேர்தல் நடத்த வாய்ப்பு உள்ளது. தமிழக-கேரள மாநிலத்தை இணைக்கும் மாவட்டம் தேனி இங்கே, பால் உற்பத்தி அதிகமாக உள்ளது. சரியான தலைவர் இருந்தால், பால் கொள்முதல் மற்றும் விற்பனையைக் கூட்டலாம் என அதிகாரிகள் என்னிடம் தெரிவித்தனர். தற்போது ஓ.ராஜா பொறுப்பில் வந்துள்ளார். இப்படித்தான் வாழ வேண்டும் என்று எடுத்துக்காட்டாக உள்ள குடும்பம் ஓ.பி.எஸ் குடும்பம். இன்று நடப்பது எடப்பாடி - ஓ.பி.எஸ் ஆட்சி. இது ஒரு ஆன்மிக ஆட்சி" என்று கூறினார்.

 



அதன்பிறகு பத்திரிகையாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, "ஓ.ராஜா பதவியேற்றதில் எந்த சர்ச்சையும் இல்லை. நீதிமன்றம் தெரிவித்த விதிகளின்படி அவர் பதவியேற்றுள்ளார். கம்பத்தில், தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமாரைத் தாக்க வந்தவர்களை, எங்களால் தடுக்கவும் தெரியும், அவர்களது கைகளை முறிக்கவும் தெரியும். சமுதாயப் பிரச்னை வந்துவிடக்கூடாது என்பதற்காகவே அமைதிகாத்தோம்.

பயங்கரவாத இயக்கங்கள் மற்றும் தீவிரவாத அமைப்புகளை ஆதரிக்கும் கட்சி, திமுக. மக்களிடையே மதவெறியைத் தூண்டி அரசியல் செய்துவருகிறது திமுக. குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவுக்கு பிள்ளையார் சுழி போட்டதே திமுக மற்றும் காங்கிரஸ்தான்" என்றார். இந்த பேட்டியின் போது மாவட்ட துணை  செயலாளர் முறுக் கோடை  ராமர் உள்பட நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர். 

சார்ந்த செய்திகள்

Next Story

'குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்' - அமைச்சர் முத்துசாமி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் தண்ணீர் வேகமாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கூறியுள்ளார்.

அவர் ஈரோடு காந்திஜி சாலையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'பவானி சாகர் அணையில் மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி அணைகளிலும் தண்ணீர் மிக குறைவாக உள்ளது. எங்களுக்கு கீழ் பவானி பாசனப்பகுதியில் உள்ள புஞ்சை பயிர்களுக்கு ஐந்தாவது நினைப்பிற்கு தண்ணீர் விட வேண்டும் என்பது ஆசைதான். ஆனால் நீர் இருப்பு அணையில் இல்லை. தமிழக முதலமைச்சர் 22 மாவட்டங்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலும் எந்தக் குடிதண்ணீர் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு அதிக உஷ்ணம் நிலவுகிறது. சாலை விரிவாக்கத்திற்காக பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவ்விடங்களில் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் 26 நிமிடங்கள் பழுது அடைந்தது குறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் பகுதிச் செயலாளர் அக்னி சந்துரு மூன்றாம் மண்டல தலைவர் சசிகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.