Skip to main content

கைதிகள் பணம் கையாடல்: ரூ.5 லட்சம் டெபாசிட் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு! 

Published on 12/12/2018 | Edited on 12/12/2018

சேலம் மத்திய சிறையில் கைதிகளுக்கு வழங்கப்படும் பணத்தில் 8.77 லட்சம் ரூபாய் கையாடல் செய்த வழக்கில், முன்ஜாமின் கேட்டு சிறை ஊழியருக்கு, 5 லட்சம் ரூபாயை டெபாசிட் செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

 


சேலம் மத்திய சிறையில் 850 க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். கைதிகளுக்கென சிறைச்சாலைக்குள் கேண்டீன் இயங்கி வருகிறது. சிறைத்துறை வழங்கும் உணவு தவிர, கைதிகள் தங்களுக்குப்பிடித்த தின்பண்டங்களை சொந்த செலவில் வாங்கிக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது. 

 

 highcourt verdict


இதற்காக கைதிகளை பார்க்க வரும் உறவினர்கள், அவர்களின் இதர செலவுகளுக்காக பணம் கொடுத்துச் செல்வார்கள். மேலும், தண்டனை கைதிகளுக்கு சிறைச்சாலைக்குள் வேலைகளும் வழங்கப்படும். அதற்காக அவர்களுக்கு குறிப்பிட்ட தொகை ஊதியமாக வழங்கப்படுகிறது.

 


இவ்வாறு கைதிகளுக்காக உறவினர்கள் கொடுத்துவிட்டுச் செல்லும் தொகை மற்றும் ஊதியத்தில் முறைகேடு நடந்திருப்பதாக கடந்த மாதம் புகார் எழுந்தது. இந்த முறைகேடு குறித்து விசாரிக்குமாறு கைதிகளும் திடீரென்று சிறைக்குள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

 


இதுகுறித்து விசாரிக்குமாறு சிறைத்துறை ஏடிஜிபி உத்தரவிட்டார். அதிகாரிகள் ஆய்வில், கைதிகளின் பணம் 8.77 லட்சம் ரூபாய் கையாடல் செய்யப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கைதிகளுக்கு பணம் பட்டுவாடா செய்யும் பிரிவில் பணியாற்றி வரும் பரமத்தி வேலூரைச் சேர்ந்த ஊழியர் வெற்றிவேல் என்பவர்தான் இந்த முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதும் தெரிய வந்தது. 

 


இதையடுத்து வெற்றிவேல் மீது அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த முறைகேட்டில் வேறு யார் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்தும் விரிவான விசாரணை நடந்து வருகிறது. 

 


இந்நிலையில் வெற்றிவேல், முன்ஜாமின் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு திங்கள் கிழமை (டிச. 10) விசாரணக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, 5 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்யும்படி உத்தரவிட்டார். இதற்கு அவகாசம் வழங்கும்படி மனுதாரரின் வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். அதற்கு போலீசார் தரப்பில் கடும் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கின் விசாரணை புதன்கிழமைக்கு (டிச. 12) ஒத்தி வைக்கப்பட்டது.

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

120 செல்போன்களை மீட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைத்த எஸ்.பி.

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
Sp recovered 120 stolen cell phones and handed them over to their owners.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தவறவிட்ட செல்போன்கள் குறித்து காவல் நிலையங்களில் வழக்குகள் அடிப்படையில் உரிய விசாரணை மேற்கொண்டு ரூபாய் 20 லட்சம் மதிப்பிலான விலை உயர்ந்த 120 செல்போன்கள் காவல்துறை அதிகாரிகள் மூலமாக மீட்கப்பட்டது. மேலும் மீட்கப்பட்ட செல்போன்கள் அனைத்தும் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி தலைமையில் நடைபெற்று. அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது..

மேலும் நிகழ்ச்சியில் காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கையில் செல்போன் தவறவிட்டாலோ, அல்லது திருடப்பட்டாலோ அது குறித்து உடனடியாக பொதுமக்கள் அருகில் உள்ள காவல் நிலையங்களில் சென்று புகார் அளிக்க முன் வர வேண்டும். அதேபோல் கடந்த மாதம் மட்டும் வாலாஜாபேட்டையில் செல்போன் தவறவிட்ட வழக்கில் ரூபாய் 2 லட்சம் மதிப்பிலான 30 செல்போன்கள் மீட்கப்பட்டு அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என இந்த நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.

Next Story

முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரை கைது செய்ய போலீசார் தீவிரம்!

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
 Police arrest to Former Minister MR Vijayabaskar

கரூர் மாவட்டம், வாங்கல் குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்தார். அதில், தோரணக்கல்பட்டி மற்றும் குன்னம்பட்டியில் தனக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தனது மனைவி மற்றும் மகளை மிரட்டி மோசடியாக பத்திரப்பதிவு செய்து உள்ளனர் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் தனது பெயர் சேர்க்கப்படலாம் என்று கருதி முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் முன்ஜாமீன் கேட்டு கரூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு ஜூன் 21 ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது கடுமையான விவாதங்களுக்கு பிறகு மூன்று தரப்பு வாதங்களைக் கேட்ட மாவட்ட நீதிபதி சண்முகசுந்தரம் ஜூன் 25 ஆம் தேதிக்கு மனு மீதான விசாரணையை ஒத்தி வைத்திருந்தார்.

இதனையடுத்து நில அபகரிப்பு வழக்கில் எம்.ஆர். விஜயபாஸ்கரின் முன் ஜாமின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்நிலையில் தலைமறைவாக உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை கைது செய்ய வடமாநிலங்களுக்கு தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர். வட மாநிலங்களுக்கு எம்.ஆர். விஜயபாஸ்கர் தப்பிச் சென்றதாக கூறப்படும் நிலையில் சிபிசிஐடி தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.