Skip to main content

ஆம்புலன்ஸை அழைத்த போலீசார்: பதற்றத்தில் உண்மையை உளறிய தம்பதி!! 

Published on 26/05/2021 | Edited on 26/05/2021

 

The police who called the ambulance; Couple hiding the truth in tension

 

தமிழகம் முழுவதும் தளர்வில்லாத முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மருத்துவக் காரணங்களுக்காக மட்டும் வெளியே செல்லும் மக்களை மட்டுமே போலீசார் அனுமதிக்கின்றனர். ஆங்காங்கே  தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு தேவையின்றி ஊர் சுற்றுகிற இளைஞர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகிறது. இதனால் போக்குவரத்து பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 

 

இப்படிப்பட்ட நிலையில்  நேற்று (25.05.2021) கடலூர் மாவட்ட எஸ்.பி. ஸ்ரீ அபிநவ், டிஎஸ்பி சாந்தி மற்றும் போலீசார் கடலூர் அண்ணா பாலம் அருகே தீவிர வாகன சோதனைகளைக் கண்காணித்துக்கொண்டிருந்தனர். அப்போது சிதம்பரம் சாலையிலிருந்து ஒரு கார் வேகமாக வந்துகொண்டிருந்தது. அதைத் தடுத்து நிறுத்திய போலீசார் அதிலிருந்த தம்பதியினரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அந்த தம்பதிகள் தாங்கள்  புதுச்சேரியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு செல்வதாக அவர்கள் கூறியுள்ளனர். ஆனால் காரில் அமர்ந்திருந்த அந்தப் பெண்மணி பட்டுப்புடவை கழுத்து நிறைய தங்க நகைகள் அணிந்துகொண்டு ஆடம்பரமாக காரில் அமர்ந்திருந்தார். 

 

இதைக் கண்டு சந்தேகமடைந்த மாவட்ட எஸ்பி அவர்கள் சிதம்பரத்தில் நிறைய மருத்துவமனைகள் இருக்கும்போது இவ்வளவு தூரம் மருத்துவமனைக்கு வர வேண்டுமா? என்று அறிவுறுத்தியதோடு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் இவ்வளவு தூரம் காரில் வருவது மிகவும் தவறான செயல் என்று கூறியுள்ளார். உடனடியாக ஒரு ஆம்புலன்ஸ் வரவழைத்து அந்தத் தம்பதியினரை அதில் ஏற்றி அவர்கள் செல்லப் போவதாகக் கூறிய மருத்துவமனைக்கு அனுப்புவதற்கு ஏற்பாடு செய்தார். 

 

இதைக் கண்டு பதறிப்போன அந்த தம்பதியினர், “நாங்கள் மருத்துவமனைக்குச் செல்லவில்லை சொந்த வேலையாக புறப்பட்டு வந்தோம். தங்களிடம் பொய் கூறிவிட்டோம்” என்று வருத்தம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து போலீசார் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ததோடு, எச்சரிக்கை செய்தும் அனுப்பிவைத்துள்ளனர். தேவையில்லாமல் இதுபோன்று இனி வெளியே வரக்கூடாது என அறிவுறுத்தி அனுப்பிவைத்தனர். முழு ஊரடங்கு காலத்தில் இதுபோன்று தேவையில்லாமல், உரிய காரணங்கள் இல்லாமல் வாகனங்களில் வருபவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு  மாவட்டத்திலுள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் வாகன சோதனையில் ஈடுபட்டிருக்கும் காவல்துறையினருக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார் மாவட்டக் கண்காணிப்பாளர் அபிநவ்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

எல்.முருகன் மீது வழக்குப் பதிவு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Case registered against L. Murugan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், தேர்தல் நடத்தை வழிமுறைகளை மீறியதாக நீலகிரி பாஜக வேட்பாளர் எல்.முருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 25 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய வந்த மத்திய இணை அமைச்சரும் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் பல்வேறு கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியதுடன் உதகை அருகே உள்ள கிராமம் ஒன்றுக்குச் சென்று எந்த அனுமதியும் பெறாமல் 100க்கும் மேற்பட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையின் தலைவராக உள்ள துணை வட்டாட்சியர் தனலட்சுமி தேனாடுகம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் தேர்தல் நடத்தைகளை மீறியதாக எல்.முருகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story

பட்டப்பகலில் வீடு புகுந்து படுகொலை; 6 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் 6 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

இந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் சகோதரி மகனே கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. பணம் கேட்டுத் தராததால் ஆத்திரத்தில் இருந்த சரஸ்வதியின் சகோதரி மகன் அசோக் குமார், வீட்டில் சரஸ்வதி தனியாக இருந்த பொழுது கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது.