Skip to main content

வெடிகுண்டை வீசி வளர்ப்பு நாய் கொடூர கொலை! 2 பேரிடம் காவல்துறை விசாரணை!!

Published on 09/04/2022 | Edited on 09/04/2022

 

pet dog passed away in accident Police investigation on 2 persons !!

 

கிருஷ்ணகிரி அருகே, வெடிகுண்டை வீசியெறிந்து வளர்ப்பு நாயை கொடூரமாக கொலை செய்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கிருஷ்ணகிரி மாவட்டம் பெத்ததாளப்பள்ளி அருகே உள்ள மண்ணூர்குட்டையைச் சேர்ந்தவர் பிரபு டேவிட். அதே பகுதியில் பேட்டரி தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இந்த ஆலையில், நான்கு வயதான ஜெர்மன் ஷெப்பர்டு இன நாயை வளர்த்து வந்தார். கடந்த 6ம் தேதி இரவு அந்த நாய், பேட்டரி தயாரிப்பு அறைக்கு முன்பு நின்று கொண்டு நீண்ட நேரமாக குரைத்துக் கொண்டிருந்தது. யாரோ மர்ம நபர்கள் உள்ளே நுழைந்து விட்டதால்தான் நாய் குரைக்கிறதோ என்று எண்ணி பிரபு டேவிட், டார்ச் லைட் அடித்து பார்த்தார். இந்நிலையில் நள்ளிரவு 1 மணியளவில், பயங்கர வெடி சத்தம் கேட்டுள்ளது. சம்பவ இடம் சென்று பார்த்தபோது, அங்கே அவருடைய வளர்ப்பு நாய் உடல் சிதறி இறந்து கிடந்தது. இதைக்கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். 


இதுகுறித்து பிரபு டேவிட், கிருஷ்ணகிரி தாலுகா காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரில், தனக்கும், தனது தொழிற்சாலைக்கு அருகில் உள்ள சிலருக்கும் இடையே நீண்ட நாள்களாக நிலத்தகராறு இருந்து வருவதாகவும், அந்த முன்விரோதத்தில் அவர்கள் வெடி குண்டை வீசி வளர்ப்பு நாயை கொன்று இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். 


அதன்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சம்பவ இடத்திற்கு காவல்துறை மோப்ப நாய் சாம்பவியை அழைத்து வந்து துப்பு துலக்கப்பட்டது. தடயவியல் நிபுணர்களும் தடயங்களை சேகரித்தனர். இதற்கிடையே, வளர்ப்பு நாய் வெடித்துச் சிதறி இறக்கும் காட்சிகள் கொண்ட சிசிடிவி பதிவுகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதில், மர்ம நபர்கள் எலும்புடன் வெடிகுண்டை கட்டி நாய் முன்பு வீசியுள்ளனர். அந்த எலும்பை கவ்வியபோது, குண்டு வெடித்து உடல் சிதறி நாய் பரிதாபமாக பலியாகி இருப்பது தெரிய வந்தது. 


பிரபு டேவிட் அளித்த புகாரின்பேரில், அவருடைய தொழிற்சாலைக்கு அருகில் வசிக்கும் முனிராஜ், லலித் ஆகிய இருவரையும் பிடித்து விசாரித்து வருகின்றனர். முன்விரோதத்தில் அவர்கள்தான் நாயை வெடி வைத்துக் கொலை செய்தனரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேநேரம், சம்பவ இடத்தைச் சுற்றிலும் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். 
 

சார்ந்த செய்திகள்

 

Next Story

கள்ளக்குறிச்சி விவகாரம்; முக்கிய குற்றவாளி கைது!

Published on 23/06/2024 | Edited on 23/06/2024
Forgery issue; The main culprit arrested

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 4 பெண்கள் உட்பட 55 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே சமயம் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விவகாரம் தொடர்பான வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இந்தச் சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் விசாரனையத் தொடங்கியுள்ளார். இதற்கிடையே கள்ளச் சாராயம் விற்பனை செய்த கோவிந்தராஜ், அவரது மனைவி விஜயா, சகோதரர் தாமோதரன் உள்ளிட்ட மூவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. 

Forgery issue; The main culprit arrested

அதனைத் தொடர்ந்து மெத்தனால் விற்பனையாளர்களான சின்னதுரை, மதன், ஜோசப்ராஜ் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. அதோடு  கள்ளச்சாராயத்தில் மெத்தனால் கலந்த விவகாரத்தில் ராமர், சின்னதுரை மற்றும் ஜோசப் ராஜா ஆகிய 3 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து கச்சிராபாளையம் போலீசார் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

இந்நிலையில் கள்ளச்சாராய வழக்கில் தேடப்பட்டு வந்த சிவக்குமார் என்பவர் சென்னை எம்.ஜி.ஆர். நகரில் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரவாயலைச் சேர்ந்த சிவக்குமார் எம்.ஜி.ஆர். நகரில் உள்ள தனது உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த நிலையில் போலீசார் கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் இதுவரை பத்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 55 பேரின் உயிரிழப்பு காரணமான கள்ளச்சாராயத்திற்கு மெத்தனால் சப்ளை செய்தவர் சிவக்குமார் ஆவார். 

Next Story

கஞ்சா விற்ற இளைஞர் கைது

Published on 22/06/2024 | Edited on 22/06/2024
Youth arrested for selling cannabis

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 54 உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே சமயம் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கள்ளச்சாராயம் அருந்திய 4 பெண்கள் உட்பட 54 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் எதிரொலியாக தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஈரோடு, கருங்கல்பாளையம் எம்ஜிஆர் நகர் சமுதாய கூடம் அருகில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கருங்கல்பாளையம் போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சோதனை மேற்கொண்டதில் கஞ்சா விற்பனையில் பாசில் என்கிற பப்பாளி (27) என்ற இளைஞரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவரிடமிருந்து 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.