Skip to main content

மத்திய பட்ஜெட்டில் கஜா புயல் பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்கவில்லை என்றால் போராட்டம்-ப.சிதம்பரம் பேச்சு

Published on 30/06/2019 | Edited on 30/06/2019

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் சிவகங்கை பாராளுமன்றத் தொகுதியில் தி.மு.க கூட்டணியில் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கார்த்தி ப.சிதம்பரம் எம்.பி.க்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக் கூட்டம் பேருந்து நிலையம் அருகில் விழா பொதுமேடையில் நடந்தது. இந்த கூட்டத்தில் ஆலங்குடி தொகுதி எம்.எல்.ஏ மெய்யநாதன் உள்பட கூட்டணி கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் எம்.பி. கலந்து கொண்டு பேசும் போது.. 

தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைந்த கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று தமிழனுக்கு என்று ஒரு குணம் உண்டு என்பதை காட்டிவிட்டார்கள். அதற்காக அனைவரும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம். தமிழ்நாட்டில் மிகப் பெரிய வெற்றியை பெற்றாலும் இந்திய அளவில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை என்ற வருத்தம் எல்லோருக்கும் உள்ளது. அந்த வருத்தத்தில் ராகுல் காந்தி பதவி விலகுவதாக அறிவித்தார். அவர் பதவி விலக கூடாது என நாங்கள் வலியுறுத்தியுள்ளோம், அவர்  பதவி விலகும் முடிவை கைவிடுவார் என நம்புகிறோம். 

pudukottai


மத்தியில் தற்போது ஒரு முரட்டு அரசாங்கம் அமைந்துள்ளது. அவர்கள் செயலில் பணிவோ கனிவோ இல்லை. பாஜக ஆட்சி அமைத்து இன்றுடன் 30 நாட்கள் ஆகிறது. அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் முதலில் இந்தியை திணிக்க நினைத்தார்கள். அனைவரின் எதிர்ப்பிற்கு பின் மும்மொழி பாடத்திட்டத்தை தினிக்க நினைத்த போது தமிழகம் எச்சரித்தது. அதன் பின்பு அந்த கொள்கையை மாற்றி எழுதினார்கள். ஆனால் அதில் குளறுபடிகள் உள்ளன. மத்திய அரசு இந்தியையோ, மும்மொழி கொள்கையோ இன்னும் விட்டு விடவில்லை. தமிழர்கள் மட்டுமின்றி அனைத்து மொழி பேசுவர்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

ரயில் நிலையங்களில் இந்தியில் தான் பேச வேண்டும் என்று சொன்னார்கள். போராட்டம் என்று அறிவித்ததும் வாபஸ் பெற்றார்கள். இந்த 30 நாளில் அவர்கள் செய்தது அறிவிப்பும் வாபசும் தான். நீட் தேர்வு கடந்த ஆண்டு 2 மாணவர்களும், இந்த ஆண்டு 5 மாணவர்களை பலியானார்கள். தமிழர்கள் வரிப்பணத்தில் தமிழ்நாட்டில் கட்டபடும் மருத்துவ கல்லூரிகளில் தமிழர்களை சேர்ப்பதற்கு மத்திய அரசுக்கு என்ன பிரச்சனை. அவர்களுக்கு வேண்டுமானால் 10 சதவீதம் இடங்களை கேட்டு பெற்றுக் கொள்ள வேண்டும். அதைவிட்டுவிட்டு தமிழ்நாட்டு கல்லூரிகளில் ஒதுக்கும் இடத்தை பிடிக்க நினைக்க கூடாது.  நீட் தேர்வு என்பது வசதி படைத்த மாணவர்களுக்கு மட்டுமே சாதகமாக உள்ளது. நீட் தேர்வால் ஏழை மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்காது.

கஜா புயலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் ஒன்றரை கோடி தென்னை மரங்கள் விழுந்துள்ளது. ஒரு கோடி மரங்களுக்கு மேல் சேதமடைந்துள்ளது. இதற்காக தமிழக அரசு ரூ. 15 ஆயிரம் கோடி நிவாரணம் வேண்டும் என்று மத்திய அரசிடம் கேட்டது. ஆனால் மத்திய அரசு ஆயிரத்தி 146 கோடிகளை மட்டும் கொடுத்திருக்கிறது. இது இடைக்கால நிதி பட்ஜெட்டில் மற்ற நிதி கிடைக்கும் என்றார்கள். ஜுலை 5 ம் தேதி தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட்டில் தமிழக அரசு கேட்ட கஜா புயல் பாதிப்பிற்காண முழு நிவாரண நிதியையும் ஒதுக்காவிட்டால் தமிழகத்தில் திமுக- காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபடுவோம். அதற்கு மக்களும் தயாராக வேண்டும்.

பீகார் மாநிலத்தில் 140 குழந்தைகள் மூளை வீக்க காய்ச்சலில் இறந்துள்ளது. அங்கே 23 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்களே இல்லை. அங்குள்ள சிறப்பு மருத்துவமனையில் குழந்தைகள் அவசர சிகிச்சை பிரிவில் எந்த வசதியும் இல்லை என்பதை ஆய்வு அறிக்கைகள் சொல்கிறது. இறந்த குழந்தைகள் முதல் நாள் இரவில் உணவு கிடைக்காமல் பட்டினியால் லிச்சிப் பழம் சாப்பிட்டதால் அதிலிருந்த கிருமிகள் தான் குழந்தைகளை பாதித்துள்ளது என்று டாக்டர்கள் சொல்கிறார்கள். அதில் 80 சதவீதம் குழந்தைகளின் பெற்றோர் மாதம் வருமானம் ரூ. 6 ஆயிரம் கூட இல்லாதவர்கள் என்பது தான் வேதனை. இந்த நாட்டில் ஏழ்மை ஒழிந்து விட்டதா என்றால் இல்லை. 

தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லையே என்ற வருத்தம் எனக்கு உள்ளது. எனினும் வருங்காலங்களில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்து சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றும் என்றார். 

 

 

pudukottai


தொடர்ந்து பேசிய கார்த்தி சிதம்பரம் எம்.பி…  தமிழகத்தில் 37 இடங்களில் திமுக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் அமைத்த கூட்டணி தான் காரணம். தமிழர்களை மதிக்கின்ற கட்சிக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என்ற முடிவுக்கு தமிழக மக்கள் வந்துவிட்டனர். நாடாளுமன்றம் தொடங்கி 2 வாரங்கள் தான் ஆகிறது. ஆனால் மத்திய அரசின் செயல்பாடுகள் முரட்டுத்தனமாக உள்ளது. ஒரே மொழி, ஒரே கலாசாரம், ஒரே மதம் என்ற கொள்கையை மத்திய அரசு கொண்டுவர  நினைக்கிறது. அதை ஒருபோதும் நான் உட்பட திமுக கூட்டணி எம்.பி. க்கள் விடமாட்டோம்.

குடிநீர் பிரச்சினை பற்றி ஆண்டுதோறும் நாம் விவாதிக்கிறோம். ஆனால் இதற்கான நிரந்தரத் திட்டங்களை நாம் வகுக்கவில்லை. குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண கனவுத் திட்டமான காவிரி குண்டாறு இணைப்பு திட்டம். அதனை நிறைவேற்ற பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பேன். மேலும் ஜூலை 5 ந் தேதி பட்ஜெட்டில் கஜா புயல் நிவாரணத்திற்கு நிதி ஒதுக்கவில்லை என்றால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தலைமைச் செயலகத்தில் வேலை வாங்கித் தருவதாக மோசடி- சட்டக்கல்லூரி மாணவர் கைது

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Law college student arrested for fraud of getting a job in the Secretariat

தலைமைச் செயலகத்தில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாக சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் புதுக்கோட்டையில் நடந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சன்னதிவயல் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் சத்யராஜ் (37). தனியார் நிதி நிறுவனத்தில் வசூல் செய்யும் ஊழியராக உள்ளார். இவர் கடந்த 25 அம் தேதி அறந்தாங்கி காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில் 'நான் அரிமளம் பகுதிக்கு சென்றிருந்த போது மீனாட்சிபுரம் ரோடு பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் கார்த்திக் அறிமுகமானார். தான் சென்னை செட்டியார் சட்டக்கல்லூரி மாணவர் என்றும் சோசியல் மீடியாவில் நிறைய பதிவுகள் போடுவேன். எனக்கு அரசியல்வாதிகள், அதிகாரிகளுடன் நல்ல பழக்கம் உள்ளது என்றும் சொன்னார்.

அதன் பிறகு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தலைமை செயலகத்தில் யாருக்காவது வேலை வேண்டும் என்றால் சொல்லுங்கள் வாங்கித் தருகிறேன் என்றார். அப்போது எனக்கே வேலை வேண்டும் என்றேன். அதற்கு ரூ.3 லட்சம் பணம் கொடுக்க வேண்டும் என்றார். நானும் அவர் சொன்னதை நம்பி நான் சேமித்து வைத்திருந்த பணம் ரூ.1 லட்சத்தை வங்கி கணக்கில் செலுத்துவதாக சொன்ன போது வேண்டாம் நேரில் வாங்கிக் கொள்கிறேன் என்று சொன்னவர் கடந்த பிப்ரவரி 11 ஆம் தேதி கார்த்திக் புதுக்கோட்டை வந்திருப்பதாக தெரிந்தது. நானும் என் நண்பன் பாலகிருஷ்ணனும் அன்று மாலை புதுக்கோட்டை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சந்தித்து முதல் தவணையாக ரூ.1 லட்சம் பணமாக கொடுத்தேன். பணத்தை வாங்கிக் கொண்டவர் மீதி ரூ.2 லட்சத்தை ரெடி பண்ணுங்க என்று சொல்லிவிட்டு போனார்.

அதன் பிறகு வேலை என்னாச்சு என்று கேட்க பலமுறை அவரை தொடர்பு கொண்டும் போனை எடுக்கவில்லை. இந்நிலையில் தான் இன்று (ஏப்ரல் 25 ஆம் தேதி) அறந்தாங்கி எம்ஜிஆர் சிலை அருகே நான் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த ஒரு நபர் என்னிடம் நங்கள் தான் சத்திரயாரஜா என்று கேட்டவர் கார்த்திக் உங்களிடம் பேச வேண்டும் என்று சொன்னார் என்று சொல்லிவிட்டு அவரது செல்போனில் வாட்ஸ் அப் காலில் கார்த்திக்கிடம் பேசச் சொன்னார். அப்போது ஏன் என் போனை எடுக்கவில்லை. என் வேலை, பணம் என்னாச்சு என்று கேட்ட போது, உன் பணம் வெளியில் கொடுத்துவிட்டேன். இனிமேல் பணமும் இல்லை, வேலையும் இல்லை என்று சொன்னதோடு இனிமேல் பணம் கேட்டால் எனக்குத் தெரிந்த காரைக்குடி ரவுடிகளை வைத்து உன்னை தீர்த்துக்கட்டிவிடுனே் என்று கொலை மிரட்டல் செய்ததோடு தகாத வார்த்தைகளிலும் பேசிவிட்டு போனை நிறுத்திவிட்டார். என்னிடம் போனைக் கொடுத்த நபரும் என்னை மிரட்டிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.

எனக்கு தலைமைச் செயலகத்தில் வேலை வாங்கித் தருவதாக என்னிடம் பணமும் வாங்கிக் கொண்டு ஏமாற்றிவிட்டு என்னையும் என் குடும்பத்தையும் கொன்று விடுவதாக கொலை மிரட்டல் விடுத்த கார்த்திக் மீது நடவடிக்கை எடுத்து என் பணத்தையும் மீட்டுத் தர வேண்டும் என்று அந்தப் புகாரில் கூறியுள்ளார்.

புகார் குறித்து வழக்கு பதிவு செய்த அறந்தாங்கி காவல் ஆய்வாளர் கருணாகரன் தனிப்படை அமைத்து வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த சட்டக்கல்லூரி மாணவர் கார்த்திக்கை சென்னையில் கைது செய்து அறந்தாங்கி காவல் நிலையம் கொண்டு வந்துள்ளனர். மேலும் விசாரனைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் சென்னை முதல் அறந்தாங்கி வரை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

 மீண்டும் ஒரு வேங்கை வயல் சம்பவம்; அதிர்ச்சி புகார்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Shock complaint on Yet another Vengaivayal lincident at pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், வேங்கைவயல் சம்பவத்தைப் போல், பொதுமக்கள் உபயோகிக்கும் குடிநீரில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே சங்கன்விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.  

இந்தத் தெருவில், உள்ள 25 பட்டியலின குடும்பங்களும், மாற்று சமூகத்தைச் சேர்ந்த 10 குடும்பங்களும் உபயோகிப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, 10,000லி அளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த நிலையில், இன்று (25-04-24) காலை இந்தக் குடிநீர் தொட்டியில் இருந்து அசுத்தமான தண்ணீர் வருவதை அங்குள்ள பொதுமக்கள் கவனித்துள்ளனர். அதன் அடிப்படையில், அந்தத் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக தொட்டி மேல் ஏறியுள்ளனர். அங்கு சென்று பார்த்த போது, அந்தத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில், அங்கு போலீசார், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். குடிநீர் மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், விசாரணை முடியும் வரை டேங்கர் லாரி மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.