Skip to main content

‘மாணவர்கள் ஆபாச இணையத்தளங்களைப் பார்க்க நேரிடும்..’ -ஆன்லைன் வகுப்புகளுக்குத் தடைகோரி வழக்கு!

Published on 09/06/2020 | Edited on 09/06/2020

 

 Online Class - TN Govt - Highcourt


பள்ளி மாணவ – மாணவியருக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தத் தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
 


சென்னை புத்தகரம் பகுதியைச் சேர்ந்த சரண்யா என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல வழக்கில், கரோனா பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக, பள்ளிகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், நடப்புக் கல்வியாண்டுக்கான பாடங்கள் ஆன்லைன் மூலம் நடத்தப்படுகின்றன. மாநிலத்தில் 8 சதவீத  வீடுகளில் மட்டுமே இன்டர்நெட் இணைப்புடன் கம்ப்யூட்டர்கள் உள்ளன.  டிஜிட்டல் முறையில் பாடம் நடத்துவதால் நகர்ப்புற – கிராமப்புற மற்றும் ஏழை – பணக்கார மாணவர்களுக்கு இடையில் சமநிலையற்ற நிலை உருவாகியுள்ளது. முறையான டிஜிட்டல் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், மாணவர்களும், ஆசிரியர்களும் சவால்களைச் சந்தித்துள்ளனர்.  பல இடையூறுகள் உள்ளன.

ஆன்லைன் மூலம் வகுப்புகளில் கலந்து கொள்ள மாணவ, மாணவியர் முயற்சிக்கும் போது, ஆபாச இணையத்தளங்களால் அவர்களின் கவனம் சிதைவதால், அந்த இணையத்தளங்களை மாணவ, மாணவியர் அணுக இயலாத வகையில், விதிகளை வகுக்கும் வரை ஆன்லைன் வகுப்புக்களுக்குத் தடை விதிக்க வேண்டும், எனக் கோரியுள்ளார்.  இந்த மனு, விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
 

 

சார்ந்த செய்திகள்