Skip to main content

பிரியாணி வாங்கிக் கொடுத்து 17 வயது சிறுமி வன்கொடுமை..!

Published on 23/06/2021 | Edited on 23/06/2021

 

manachanallur manikandan arrested by pocso act

 

திருச்சி, மண்ணச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை அதே பகுதியில் பிரியாணி கடையில் பணியாற்றும் மணிகண்டன் (27) என்ற வாலிபர் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

வழக்கு சம்பந்தமாக மணிகண்டனை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தியபோது, அந்தச் சிறுமியின் குடும்பத்தில் வரிவசூல் செய்ய அடிக்கடி வீட்டுக்குச் சென்றுள்ளதாகவும், அப்போது அந்தச் சிறுமியின் குடும்பத்தின் எளிமையைக் கருதி அடிக்கடி பிரியாணி கொடுத்து பழக்கி வந்துள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

மேலும், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அந்தச் சிறுமியைத் திருமணம் செய்துகொள்வதாக கூறி பலமுறை அவரை வன்கொடுமை செய்தது தெரியவந்தது. சமீபத்தில் அவரை திருமணம் செய்துகொள்ள மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சிறுமி ஜீயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தன்னுடைய உறவினர்களோடு சென்று புகார் ஒன்றைக் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் தற்போது மணிகண்டனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

“இனி கள்ளச்சாராய உற்பத்தி நடக்காது” - கிராம மக்கள் உறுதிமொழி

Published on 22/06/2024 | Edited on 22/06/2024
Villagers pledge against illicit liquor in presence of Collector

திருச்சிராப்பள்ளி மாவட்டம் துறையூர் வட்டம் பச்சைமலை அருகில் உள்ள நெசக்குளம் பகுதியில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில், மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப் குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் ஆகியோர் நேற்று(21.06.2024) இரவு பச்சை மலைப் பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். 

Villagers pledge against illicit liquor in presence of Collector

அந்த ஆயவின் போது சிக்கிய 250 லிட்டர்  கள்ளச்சாராயத்தை கீழே ஊற்றி அழித்தனர். அதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்களை அழைத்து கள்ளச்சாரயத்தின் தீமைகளை எடுத்து கூறினர். அதன்பின்னர், அக்கிராமத்தைச் சேர்ந்த அனைவரும் மாவட்ட ஆட்சியர் முன்பாக மது போதைக்கு எதிராக இனி ஒருபோதும் எங்கள் கிராமத்தில் கள்ளச்சாராய உற்பத்தி நடக்காது; அதனை அனுமதிக்க மாட்டோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதில் ஏராளமான காவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்

Next Story

திருச்சியில் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு

Published on 19/06/2024 | Edited on 19/06/2024
Enthusiastic reception for Edappadi Palaniswami in Trichy

தமிழக முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், அதிமுக பொதுச்செயலாளர், எடப்பாடி பழனிசாமி தஞ்சை, நாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். திருச்சி வந்தடைந்த அவருக்கு திருச்சி மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட கழகம் சார்பில் அதிமுகவினர் செண்டை மேள தாளங்கள் முழங்க, உற்சாக வரவேற்பு அளித்தனர். 

இதில், அதிமுக புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் எம்பி குமார், புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி, திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் துணை மேயர் சீனிவாசன் ஆகியோர் தலைமையில் அதிமுகவினர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆளுயுர மலர் மாலை அணிவித்தும், பொன்னாடை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும், புத்தகங்கள் வழங்கியும சிறப்பான வரவேற்பு அளித்தனர்.  

முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வளர்மதி, சிவபதி, அமைப்புச் செயலாளர் ரத்னவேல், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் எம்.பி.கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அதனைத் தொடர்ந்து. சாலை வழிப் பயணமாக புறப்பட்டுச் சென்ற எடப்பாடி.பழனிசாமிக்கு, தஞ்சை மத்திய மாவட்டம் சார்பில் வல்லம் பிரிவு சாலையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தஞ்சை மாவட்டத்தில் மன்னார்குடி ஒன்றிய பெருந்தலைவர் மனோகரன் இல்ல திருமண நிகழ்வில் பங்கேற்கிறார். அதனைத் தொடர்ந்து, நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடைபெறும் முன்னாள் அமைச்சர் ஜெயபால் இல்ல வரவேற்பு நிகழ்ச்சி மற்றும் பல்வேறு கட்சிகளில் இருந்து வந்த நிர்வாகிகள் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பின் இன்று மாலை மீண்டும் திருச்சி விமான நிலையம் வநதடைந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டு செல்கிறார்.