Skip to main content

“சிபிஐ விசாரணை தேவையில்லை” - அமைச்சர் ரகுபதி!

Published on 22/06/2024 | Edited on 22/06/2024
"No need for CBI investigation" - Minister Raghupathi!

சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் தமிழக சட்டசபை பேரவைக் கூட்டத்தின் மூன்றாம் நாள் அமர்வு இன்று (22.06.2024) காலை 10 மணிக்கு தொடங்கியது. அதே சமயம் அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இரண்டாவது நாளாக இன்றும் கருப்பு சட்டை அணிந்து சட்டமன்றத்திற்கு வருகை தந்தனர். அதனைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக சட்டமன்றத்தில் 2 வது நாளாக இன்றும் அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து கள்ளக்குறிச்சி விவகாரத்தை விவாதிக்கக் கோரி கேள்வி நேரத்தில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட நிலையில் சபாநாயகர் அனுமதி அளிக்காததால் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அப்போது ‘நீதி வேண்டும்’ என முழக்கமிட்டும், ‘தமிழ்நாட்டு முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும்’ என முழக்கமிட்டும் அதிமுகவினர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். 

"No need for CBI investigation" - Minister Raghupathi!

அதனைத் தொடர்ந்து சட்டப்பேரவை வளாகத்தில் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து பேசுகையில், “மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். மக்களின் பிரச்சனைகள் குறித்து சட்டப்பேரவையில் விவாதிக்கப்பட வேண்டும் எனப் பல முறை குரல் கொடுத்தோம். கள்ளச் சாராயம் மக்களின் உயிருடன் தொடர்புடைய பிரச்சனை ஆகும். இதனால் தினந்தோறும் மக்கள் உயிரிழக்கிறார்கள்.

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் 183 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன. மேலும் இந்த விவகாரத்தில் 118 பேர் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வருகின்றன. கள்ளச்சாராய விவகாரத்தில் மாவட்ட ஆட்சியரே தவறான தகவல் தருவதால் ஒரு நபர் ஆணைய விசாரணை சரியாக இருக்காது. மாநில அரசு விசாரித்தால் மக்களுக்கு நீதி கிடைக்காது என்பதால் சிபிஐ விசாரணை வேண்டும் எனக் கோருகிறோம். நீதியை நிலை நாட்ட, உண்மைக் குற்றவாளிகளை கண்டறிய சிபிஐ விசாரணை அவசியமாகிறது. ஒரு நபர் ஆணையத்தால் உண்மை வெளிவராது” எனத் தெரிவித்திருந்தார். 

"No need for CBI investigation" - Minister Raghupathi!

இந்நிலையில் சட்டப்பேரவை வளாகத்தில் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டிசியளித்தார். அப்போது இது குறித்து அவர் பேசுகையில், “எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மக்களவைத் தேர்தலில் அதிமுக தோல்வியைச் சந்தித்து. இதனால் இல்லாத குற்றச்சாட்டுகளைத் தெரிவித்து சட்டப்பேரவையை முடக்க முயற்சித்தார். பேச வாய்ப்பு தரவில்லை என்ற குற்றச்சாட்டு, அப்பட்டமான பொய் ஆகும். அதிமுகவினர் வேண்டுமென்றே கேள்வி நேரத்தில் பிரச்சனை எழுப்புகின்றனர். கேள்வி நேரத்தை கெடுக்கும் நோக்கில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் செயல்பட்டனர். அதே சமயம் அவையில் பேச வாய்ப்பு வழங்கப்படும் என சபாநாயகர் தெரிவித்த போதும் அதிமுகவினர் அதனைக் கேட்கவில்லை அதிமுக ஆட்சி காலத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் போராடினால் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள்.

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் யார் தவறு செய்தாலும் எத்தனைப் பெரிய பொறுப்பில் இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விவகாரத்தில் எதையும் மறைக்கவில்லை, அதனால் சிபிஐ விசாரணை தேவையில்லை. கள்ளச்சாரயத்தில் எங்களுக்கு என்ன தேவை, என்ன அவசியம் இருக்கிறது? கள்ளச்சாரயத்தை ஒழிக்கும் முனைப்பில் திமுக அரசு உள்ளது. நிச்சயமாக இது போன்ற சம்பவம் இனி நடக்காமல் இருக்க அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

கள்ளக்குறிச்சி சம்பவம்; உயிரிழப்பு மேலும் அதிகரிப்பு

Published on 27/06/2024 | Edited on 27/06/2024
nn

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச்சாராயம் குடித்து இதுவரை 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் மேலும் 60க்கும் மேற்பட்டவர்கள் பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாகப் பொறுப்பேற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் உள்ள சாராய குற்றவாளிகள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் சம்பவத்தில் உயிரிழப்பு 64 ஆக அதிகரித்துள்ளது. புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சாராயம் குடித்து சிகிச்சை பெற்றுவந்த மகேஷ் (40) என்பவர் உயிரிழந்த நிலையில் உயிரிழப்பு  64 ஆக அதிகரித்துள்ளது.

Next Story

கள்ளச்சாராய வழக்கு குற்றவாளி காவல் நிலையத்தில் இருந்து தப்பி ஓட்டம்

Published on 27/06/2024 | Edited on 27/06/2024
illicit liquor case accused flees from police station

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச்சாராயம் குடித்து இதுவரை 63 பேர் உயிரிழந்த நிலையில் 60க்கும் மேற்பட்டவர்கள் பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாகப் பொறுப்பேற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையத்திலும் உள்ள சாராய குற்றவாளிகள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். 

அந்த வகையில் சங்கராபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சேஷசமுத்திரம் பகுதியில் சாராய வியாபாரியான மணிகண்டன் என்பவரை காவல் நிலையத்திற்கு போலிசார் அழைத்து வந்துள்ளனர். அப்போது யாரும் எதிர்பாராத நேரத்தில் காவல் நிலையத்திலிருந்து மணிகண்டன் தப்பியுள்ளார். தப்பி ஓடிய மணிகண்டனை போலீசார் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.