Skip to main content

ஒரே கிராமத்தில் ஒரே தகவலை சொல்லும் இரண்டு சோழர்கால கல்வெட்டுகள்... 

Published on 09/12/2020 | Edited on 09/12/2020

 

Kulothungan Chola inscriptions in thiruvannamalai  that tell the same story in the same village ...


திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், கொட்டையூர் ஏரிக்கரை அருகே கல்வெட்டு ஒன்று இருப்பதாக, அப்பகுதி இளைஞர்கள் திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவகத்திற்குத் தகவல் கூறினர். அந்தத் தகவலின் அடிப்படையில் ஆய்வக அமைப்பின் செயலர் ச.பாலமுருகன், ஆய்வாளர்கள் பழனிச்சாமி, குமரவேல், என்.சுதாகர், ராஜா ஆகியோர்கள் அந்தக் கிராமத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டனர். ஏரிக்கரை அருகே உள்ள புதர்மண்டிய அந்தப் பாறையைப் பார்வையிட்டனர். அந்தப் பாறையில் அக்கால தமிழ் எழுத்துகள் செதுக்கப்பட்டிருப்பதைக் கண்டு, அதனைச் சுத்தம் செய்து, படியெடுத்துப் படித்தனர். அதன் மூலம் அது குலோத்துங்கன் சோழர் காலத்து கல்வெட்டு என்பதைக் கண்டறிந்தனர்.

 

அந்தக் கல்வெட்டின் முதல்பகுதியில் பாடல்போன்ற நான்கு வரி என 14 வரிகளைக் கொண்டுள்ளது. அந்த வரிகள்,

 

ஸ்வஸ்திஸ்ரீ குலோத்துங்க சோழ
தேவர்க்கு யாண்டு யஎ வது பெண்-
-ணை வடகரை வாணகொப்பாடி
ஆடையூர் நாட்டில் கொட்டை


யூரிலிருக்கும் புழுவுடையானான
மன்மலையநேன், நாலாகெண்ட(?) நர
சிங்கப்புத்தேரியில் எங்கள் நல்லூர் நாய-
-னார் சோமிசுரமுடையாரக்கு நான் விட்ட


தேவதானம் குழி ஐநூறும் இவ்வூர்
பெற்றுப் புகுந்தான் மாவனொருவன் மா-
-றுவான் தங்களம்மைக்குத்  தானே மணாள-
-னாவான் கங்கைகரையிலே குராற் பசுவை


குத்தினான் பாவங்கொள்வான் தன் மினா-
-டியை இவ்வூர் தோட்டிக்குக் குடுப்பான்.

 

அதாவது, குலோத்துங்க சோழனின் 17 ஆவது ஆட்சி ஆண்டில், ஆடையூர் நாட்டில் பெண்ணை ஆற்றின் வடகரையில் உள்ள கொட்டையூரில் புழுவுடையானான மன்மலையன் சோமீசுவரமுடைய நாயனாருக்கு, நரசிங்கப் புத்தேரியில், 500 குழி நிலம் தேவதானமாக விடப்பட்டதைக் குறிப்பிடுகிறது. இத்தானத்தை அழிப்பன் கங்கை கரையில் குராற்பசுவை குத்திய பாவம் உண்டாகும் என ஒம்படைக் கிளவியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதே ஊரில் இக்கல்வெட்டு இருக்கும் இடத்திற்கு 1 கி.மீ தொலைவில் இதே அரசனின் இதே செய்தியைத் தெரிவிக்கும் மற்றொரு கல்வெட்டும் உள்ளது. இரண்டு கல்வெட்டிற்கும் இடைப்பட்ட பகுதியில், தானமாக விடப்பட்ட 500 குழி நிலம் இருந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.


அந்தப் பாறையில் செதுக்கப்பட்டுள்ளதை வைத்து அந்த ஊரில் சிவன் கோயில் ஏதாவது உள்ளதா என அக்கிராம மக்களிடம் விசாரித்த ஆய்வுக் குழுவிடம், கொட்டையூரில் தற்போது பழைய சிவன்கோயில் ஏதும் இல்லை என உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர். கல்வெட்டு குறிப்பிடும் கோயில், காலப்போக்கில் அழிந்துபட்டிருக்கலாம் என்றும் தெரியவருகிறது. சுமார் 800 ஆண்டுகளுக்கு முற்பட்ட இக்கல்வெட்டு மூலம் கொட்டையூரில் ஒரு சிவன் கோயில் இருந்ததும், அதற்கு நிலதானம் அளித்ததும் தெரியவருகிறது.  ஒரே ஊரில், ஒரே செய்தியைத் தெரிவிக்கும் 2 கல்வெட்டுகள் கிடைத்தது குறிப்பிடத்தக்கதாகும்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'பெயரே சொல்லி அழைக்க தானே'- அமைச்சரின் பதிலால் தலைகுனிந்த அலுவலர்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 'Just call me by name' - the minister the minister's reply

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

முன்னதாக திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சே.கூடலூர் கிராமத்தில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார். அப்போது அவரது பெயரை வாக்குச்சாவடியில் அமர்ந்திருந்த அலுவலர் ஜெயராணி, ஓட்டு போடுபவர் யார் என்பதை அங்குள்ள பூத் ஏஜன்ட்கள் தெரிந்துக்கொண்டு தங்களிடம் உள்ள பட்டியலில் குறித்துக் கொள்வதற்காக பெயரை குறிப்பிடுவார். அதன்படி வாக்களிக்க வந்த அமைச்சர் வேலுவின் பெயரை சத்தமாக கூறினார். உள்ளே அமர்ந்திருந்த வாக்குசாவடி முகவர்கள் அனைவரும் குறித்துக் கொண்டனர். அமைச்சர் வேலுவும் ஸ்லீப்பில் கையெழுத்து போட்டுவிட்டு, விரலில் மை வைத்துக் கொண்டு நேரடியாக சென்று வாக்குப்பதிவு இயந்திரத்தில் தனது வாக்கினை செலுத்தினார்.

அப்போது அங்கிருந்த மற்றொரு அலுவலர், அந்த பெண் அதிகாரியிடம் அமைச்சரை பெயர் சொல்லி அழைத்ததை அவர் தவறாக எடுத்துக்கொள்வார், அவரிடம் சாரி கேளுங்க என திரும்ப திரும்ப வலியுறுத்தினார். பயந்துபோன அந்த பெண் அலுவலரும் ஓட்டு போட்டுவிட்டு வந்த அமைச்சரிடம் சென்று,  சாரி சார் என்றார். அமைச்சர் எதுவும் புரியாமல், ஏன் என கேட்டபோது, உங்கள் பெயரைச் சொல்லி குறிப்பிட்டதும், நீங்கள் தேர்தல் அலுவலர் உங்களது பணியை நீங்கள் செய்கிறீர்கள், பெயர் என்பது அழைப்பதற்காக தானே இதில் என்ன இருக்கிறது? இதற்கு எதற்கு நீங்கள் சாரி கேட்கிறீர்கள் அதெல்லாம் தேவையில்லையம்மா என கூறிவிட்டு சென்றார்.

சாரி கேட்கச் சொன்ன அந்த வருவாய்த்துறை அலுவலர் தலை குனிந்தபடி அங்கிருந்து நகர்ந்துவிட்டார். அந்த பெண் அலுவலர் பெருமிதமாக அமர்ந்து பணியை செய்யத் தொடங்கினார். 

 

படங்கள் - எம்.ஆர்.விவேகானந்தன்.

Next Story

விறு விறு வாக்குப்பதிவு; இளையோர்கள் ஆர்வமாக வருகை!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Youth showing interest in voting in Tiruvannamalai

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 754533 பேரும் பெண் வாக்காளர்கள் 778445 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 121 பேர் என 1553099 நபர்கள் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இத்தொகுதியில் மொத்தம் 1722 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தொகுதியில் இன்று காலை சரியாக 7 மணிக்கு வாக்குபதிவு தொடங்கியது. வேட்பாளர்கள் தங்களுக்காக வாக்குபதிவு மையத்துக்கு சென்று தங்களது வாக்குபதிவினை செலுத்தினர்.

திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளர் அண்ணாதுரை அவரது தேவனாம்பட்டு கிராமத்தில் தனது குடும்பத்தோடு சென்று முதல் வாக்கினை செலுத்தினார். அதிமுக வேட்பாளர் கலியபெருமாள் தென்மாத்தூர் கிராமத்திலும் வாக்கு செலுத்தினர். பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமனுக்கு அவர் போட்டியிடும் தொகுதியில் ஓட்டு இல்லாததால் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள அவரது சொந்த ஊருக்கு சென்று வாக்களித்தாக கூறப்படுகிறது.

ஜனநாயக கடமையாற்ற காலையிலேயே இளையோர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்துவருகின்றனர்.