Skip to main content

“ஒருபுறம் தண்ணீரில் தவிக்கிறோம், மறுபுறம் தண்ணீருக்காகவே தவிக்கிறோம்” - ஒரு கிராமத்தின் சோகம்

Published on 08/02/2023 | Edited on 08/02/2023

 

Kaduvetti villagers suffering without drinking water

 

மழைக்காலத்தில் வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள் குடிதண்ணீருக்காக இரண்டு கிலோமீட்டர் தூரம் சென்று தண்ணீரைப் பிடித்து சைக்கிளிலும் தலையிலும் சுமந்து செல்லும் அவலம் இன்றும் தொடர்கிறது.

 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ளது காடுவெட்டி கிராமம். கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் உள்ள இந்த கிராமத்தில் நூற்றுக்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. அந்த பகுதியில் கடல்நீர் புகுந்து நிலத்தடி நீர் முழுவதும் உப்பாக மாறிவிட்டது. இதனால் அந்த தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலைக்கு அக்கிராம மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் கோடியக்கரை வரை தடையின்றி போகிறது. ஆனால், ஆற்றின் கரையை ஒட்டியே இருக்கும் இந்த மக்களுக்கோ தண்ணீர் கிடைப்பதில்லை. 

 

"கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் நான்கு நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர் வருவதால் அடிப்படை உபயோகத்திற்குக் கூட தண்ணீர் கிடைக்காமல் தவிக்கிறோம்" என்று கூறியபடியே அந்த கிராமத்துப் பெண்கள் தலையிலும், சிறுவர்கள் சைக்கிளில் குடங்களைக் கட்டிக்கொண்டும் அடுத்தடுத்த கிராமத்திற்கு தண்ணீரைத் தேடி அலைந்து வருகின்றனர்.

 

Kaduvetti villagers suffering without drinking water

 

"மழைக்காலத்தில் ஆற்றில் இருகரைகளையும் தொட்டுக்கொண்டு தண்ணீர் போகும். ஆனால், குடிதண்ணீர் எடுப்பதற்கு இதைவிட பெரும் சிரமப்பட்டே எடுத்து வருவோம். வெளியே செல்ல முடியாத மழைக்காலத்தில் எங்கள் நிலைமை மோசமாகிடும் பள்ளிக்கூடத்திற்கும் கல்லூரிக்கும் செல்லும் மாணவர்கள் வீட்டிற்குத் தேவையான தண்ணீர் பிடிப்பதிலே அவர்களின் நேரம் கடந்துவிடும். காலதாமதமாக பள்ளிக்கூடம் போக நேரிடும்" என்கிறார்கள் அந்த கிராமத்துப் பெண்கள்.

 

“இந்த கிராமம் கொள்ளிடம் ஆற்றின் கரையை ஒட்டியே அமைந்திருந்தும் எந்த பயனும் எங்களுக்கு இல்லை. ஏனென்றால், கடல்நீர் உட்புகுந்து கொள்ளிடம் ஆற்று நீர் முற்றிலும் உப்பாக மாறியதால் ஆற்றுநீரைக் கூட பயன்படுத்த முடியாத அவல நிலையாகிடுச்சி. கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் தினந்தோறும் தண்ணீர் வழங்க வேண்டுமெனவும் அரசுக்கு நாங்கள் பல வருடங்களாகக் கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆடு, மாடுகளுக்குக் கூட தண்ணீர் கிடைக்காமல் தவித்து வருகிறோம். தமிழக அரசும் மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகமும் தனிக்கவனம் செலுத்தி கிராமத்திற்கு தினந்தோறும் குடிநீர் கிடைக்க வழி செய்ய வேண்டும்" என்கிறார்கள் அந்த கிராம மக்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆதினத்துக்கு மிரட்டல்; பள்ளி தாளாளரின் ஜாமீன் மனுவில் நீதிமன்றம் அதிரடி!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
The court takes action in the bail application of the school principal on Intimidation to Adinam

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தருமபுரத்தில் ஆதீன சைவ மடம் ஒன்று அமைந்துள்ளது. இந்த ஆதீனத்தின் 27ஆவது தலைமை மடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் பட்டம் வகித்து வருகிறார். இந்தச் சூழலில் தருமபுரம் ஆதீன மடாதிபதியின் சகோதரர் விருத்தகிரி மயிலாடுதுறை காவல்துறை கண்காணிப்பாளரிடம் கடந்த பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி (21.02.2024) புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்தப் புகாரில், ‘தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறையைச் சார்ந்த வினோத் என்பவரும், மடாதிபதியின் உதவியாளர் செந்தில் என்பவரும் தன்னை நேரில் சந்தித்து ஆதீன மடாதிபதியின் ஆபாச வீடியோ தங்களிடம் இருப்பதாக மிரட்டினர். மேலும், அவர்கள் அந்த வீடியோவை சமூக வலைத்தளங்கள் மற்றும் தொலைக்காட்சியில் வெளியிடாமல் இருக்க வேண்டுமென்றால், பணம் தர வேண்டும் என்று கூறி என்னைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்ய முயற்சி செய்தனர்.

இந்தச் சம்பவத்தில் செம்பனார்கோவிலைச் சேர்ந்த பிரபல கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு, பா.ஜ.க. கட்சியின் மயிலாடுதுறை மாவட்டத் தலைவர் அகோரம், வழக்கறிஞர் செய்யூர் ஜெயச்சந்திரன் ஆகியோர் தூண்டுதலாக இருந்துள்ளனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் புகாரின் பேரில் மயிலாடுதுறை பா.ஜ.க. மாவட்டத் தலைவர் அகோரம், மடாதிபதியின் உதவியாளர் செந்தில், வினோத் உள்ளிட்ட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இது தொடர்பாக 4 பேரை போலீசார் கடந்த பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி கைது செய்திருந்தனர். இதனைத் தொடர்ந்து பா.ஜ.க. பிரமுகர் அகோரம் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்பு கடந்த மார்ச் 6 ஆம் தேதி (06.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “கட்சி அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியும், வழக்கு விசாரணை நிலுவையில் இருப்பதையும் கருத்தில் கொண்டு அகோரத்தின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிடுகிறேன்” எனத் தெரிவித்திருந்தார். இதனையடுத்து மும்பையில் தலைமறைவாக இருந்து வந்த அகோரத்தை கடந்த மார்ச் மாதம் 15 ஆம் தேதி (15.03.2024) தமிழக தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்திருந்தனர்.

இதனையடுத்து கைதான பாஜக மாவட்ட தலைவர் அகோரம் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு கடந்த 8 ஆம் தேதி (08.04.2024) நீதிபதி தமிழ்ச்செல்வி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் வாதிடுகையில் ‘அகோரம் மீது 47 வழக்குகள் நிலுவையில் இருப்பதால் ஜாமீன் வழங்கக் கூடாது’ என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவுசெய்து கொண்ட நீதிபதி இந்த வாதத்தை பதில் மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டார். மேலும் வழக்கு விசாரணையைக் கடந்த 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்திருந்தார். 

The court takes action in the bail application of the school principal on Intimidation to Adinam

இந்த நிலையில், கைது செய்யப்பட்டிருந்த பிரபல கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ‘தனக்கு சர்க்கரை நோய், இருதய பாதிப்பு இருப்பதால், தொடர்ந்து சிறையில் இருந்தால் உடல்நிலை பாதிக்கப்படும். எனவே, நிபந்தனை ஜாமீன் பேரில் என்னை விடுவிக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார். இந்த மனு மீதான விசாரணை, நீதிபதி தமிழ்ச்செல்வி முன்பு இன்று (24-04-24) வந்தது. அப்போது காவல்துறை தரப்பில், ‘இந்த வழக்கு தொடர்பான புலன் விசாரணை நடைபெற்று வருகிறது. எனவே, பள்ளி தாளாளர் குடியரசுவை ஜாமீனில் விடுவிக்க கூடாது’ எனக் கூறி கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி தமிழ்ச்செல்வி, குடியரசுவின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். 

Next Story

'தண்ணிக்காக நாங்க எங்கே போவோம்'-காலி குடத்துடன் மக்கள் போராட்டம்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
'Where shall we go for water'-people protest with empty jugs

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியில் குடிநீர் வராததால் பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூர் ஒன்றியத்தில் உள்ள கீரனூர் கிராம மக்கள் இரண்டு வருடமாகவே தண்ணீர் வரவில்லை என குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். 'கடந்த ஆறு மாதமாக தண்ணீர் இல்லாமல் அவதிப்படுவதாகவும் தெரிவித்தனர். ஒரு குடும்பத்திற்கு இரண்டு குடம் தண்ணீர் மட்டும் தான் கிடைக்கிறது. எங்கள் ஊரில் மின்சார வசதி இல்லை, ரோடு வசதி இல்லை இது தொடர்பாக பஞ்சாயத்தில் உள்ளவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டேன் என்கிறார்கள். நாங்கள் என்ன செய்வது. தண்ணிக்காக நாங்கள் எங்கே போவோம்' என காலி  குடங்களுடன் சாலையில் நின்றபடி தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.