Skip to main content

உழவன் மகன் எடப்பாடி ஆட்சியிலே, உழவன் கையில் சட்டியடா... வேதனையுடன் குமுறும் விவசாயிகள் 

Published on 30/01/2020 | Edited on 30/01/2020

 

தமிழ்நாடு பவர் கிரிட் நிறுவனம் பல்வேறு மாவட்டங்களில் உயர்மின் கோபுரம் அமைத்து வருகிறது. குறிப்பாக ஈரோடு, திருப்பூர், கோவை, நாமக்கல், தருமபுரி மாவட்டங்களில் இந்த உயர்மின் கோபுரங்களை விவசாய விளைநிலங்கள் வழியாக அமைத்து வருகிறது. இதற்கு சம்பந்தப்பட்ட விவசாயிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். பல்வேறு வகையான போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.

 

tirupur



மாநில முதல்வர் எடப்பாடி வரை நேரில் சென்று மனு கொடுத்து விட்டார்கள். ஆனாலும் உயர் மின் கோபுரங்கள் விவசாய விளைநிலங்கள் வழியாக அமைப்பதை தடுத்து நிறுத்த முடியவில்லை. விவசாயிகள் தொடர்ந்து தங்களது விளை நிலங்களில் உயர் மின் கோபுரம் அமைக்கும் பணியில் ஈடுபடுவதை தடுத்தும் பார்த்தார்கள். ஆனால் வலுக்கட்டாயமாக போலீசை வைத்து விவசாயிகளை அப்புறப்படுத்திவிட்டு ஒவ்வொரு உயர் மின் கோபுரங்கள் அமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
 

விவசாயிகளும் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள், விவசாய குடும்பத்தைச் சேர்நத பெண்கள் கையில் சட்டியுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
 

"பறிக்காதே... பறிக்காதே... விளை நிலங்களை பறிக்காதே.. உடனே நிறுத்து... உடனே நிறுத்து... உயர் மின் கோபுரம் அமைப்பதை உடனே நிறுத்து... உடனே நிறுத்து... நான் ஒரு விவசாயி மகன் என்று கூறும் முதல்வர் எடப்பாடியே... உழவன் மகன் ஆட்சியிலேயே... உழவன் கையில் திருவோடு.... வெட்கக்கேடு... வெட்கக்கேடு எடப்பாடியே உன் ஆட்சிக்கு வெட்கக்கேடு... வெட்கக்கேடு...'' என கோஷமிட்டதோடு ஆட்சியர் அலுவலகத்திலேயே காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 

உயர் மின் கோபுரத்தால் பறிபோகும் விவசாயிகளின் விளை நிலங்களுக்கு தற்போதைய மார்கெட் மதிப்பு அடிப்படையில் விலை நிர்ணயம் செய்து நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் சிறு, குறு விவசாயிகளின் நிலங்களை பறிக்கக் கூடாது என்று மாவட்ட ஆட்சியரிடம் மனுவும் கொடுத்தனர். விவசாயிகளின் காத்திருக்கும் போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முறைநீர் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் கைது

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Farmers who besieged the water association office were arrested

விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு பஸ் நிலையம் அருகே கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த அலுவலகத்தை சேர்ந்த நிர்வாகிகள், நீர்வளத்துறையின் தவறான நீர் நிர்வாகத்திற்கு துணையாக இருந்தும், கீழ்பவானி கால்வாயில் ஐந்தாவது நனைப்பிற்கு தண்ணீர் இல்லாமல் போக காரணமாக இருந்தும், நீர் பாசனத்திற்கு நம்பகத் தன்மையை இழக்க செய்து போலியாக செயல்படும் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகளிடம் கீழ்பவானி பாசன உரிமை பெற்ற விவசாயிகள் முறையிடுவதாக அறிவித்திருந்தனர்.

இதையடுத்து கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பினர் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனவே இதை தடுத்து நிறுத்த வேண்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதனால் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்திற்கு முறையிட வந்திருந்த விவசாயிகள் 14 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர்.