Skip to main content

ஆளுநர் தமிழிசையின் தாயார் மறைவு - தலைவர்கள் நேரில் அஞ்சலி! (படங்கள்) 

Published on 18/08/2021 | Edited on 18/08/2021

 

 

தெலங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநருமான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜனின் தாயார் கிருஷ்ணகுமாரி (வயது 79) இன்று (18/08/2021) உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், மாநில ஆளுநர்கள், மாநில முதலமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர். 

 

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது தாயாரின் உடலுக்கு தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மலர்வளையம் வைத்து நேரில் அஞ்சலி செலுத்தினார். அதேபோல், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் கிருஷ்ணகுமாரியின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். அதைத் தொடர்ந்து, ஆளுநர் தமிழிசை மற்றும் அவரது கணவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார். 

 

அதேபோல், புதுச்சேரி மாநில முதலமைச்சர் ரங்கசாமி, அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு உள்ளிட்ட தலைவர்களும், அரசு உயரதிகாரிகளும் ஆளுநரின் தாயார் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லியில் இன்று தொடங்குகிறது ஜி20 உச்சி மாநாடு

Published on 09/09/2023 | Edited on 09/09/2023

 

G20 summit begins today in Delhi

 

ஜி20 உறுப்பு நாடுகளாக அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், கொரியக் குடியரசு, மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை உள்ளன. ஜி20 அமைப்பின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாட்டில் உச்சி மாநாடு நடைபெறுவது வழக்கம்.

 

அந்த வகையில் இந்த ஆண்டு டெல்லியில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டுக்கு இந்தியா தலைமை பொறுப்பை ஏற்றுள்ளது. அதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஜி20 தொடர்புடைய மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் நடைபெற்று வந்தன. இதனைத் தொடர்ந்து டெல்லியில் இன்றும், நாளையும் என இரு நாட்கள் ஜி20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஜி20 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் இந்தியாவிற்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர். இதனால் விமான நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.

 

இந்நிலையில் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், ஜெர்மன் அதிபர் பிராங் வால்டர் சென்மர், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, அர்ஜெண்டினா அதிபர் ஆல்பர்ட்டோ பெர்னாண்டஸ், ஆப்பிரிக்க ஒன்றிய தலைவரும் கொமோரஸ் அதிபருமான அசாலி அசவுமானி, வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா, ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜெய் லவ்ரோ, ஓமன் துணை பிரதமர் சயித் பகத் மின் மக்மூத் அல் சாயித், ஐ.நா. சபை பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ், சர்வதேச நிதியத் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களும், பிரதிநிதிகளும் டெல்லி வந்துள்ளனர். 

 

 

Next Story

மணிப்பூர் வீடியோ விவகாரம்; தலைவர்கள் கடும் கண்டனம்

Published on 20/07/2023 | Edited on 20/07/2023

 

Manipur Video Affair Leaders strongly condemned

 

மணிப்பூரில் கடந்த மே மாதம் 4 ஆம் தேதி குக்கி பழங்குடியின பெண்கள் இருவரை மைத்தேயி இன இளைஞர் கும்பல் ஒன்று ஆடைகளை களைந்து இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்து உள்ளனர். இது சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது.

 

அதனைத் தொடர்ந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் கொலை, கடத்தல், கூட்டு பாலியல் வன்கொடுமை ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் சம்பந்தப்பட்ட வழக்கில் முக்கிய நபர்களில் ஒருவரான  ஹேராதாஸ் என்பவரை கைது செய்திருப்பதாக மணிப்பூர் காவல்துறை தரப்பில் இருந்து தகவல் அளித்துள்ளனர். மேலும் நாட்டையே உலுக்கியுள்ள இச்சம்பவம் நடந்து 77 நாட்கள் ஆன பிறகே வெளி உலகிற்கு தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மணிப்பூர் மாநில முதல்வர் பிரேன் சிங்குடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மாநிலத்தின் சட்ட ஒழுங்கு நிலவரம் குறித்து கேட்டறிந்தார். மேலும் இந்த சம்பவம் குறித்து மணிப்பூர் மாநில முதல்வர் பைரன் சிங் தனது டுவிட்டரில், “பெண்களுக்கு நிகழ்ந்த கொடூரங்கள் இதயத்தை கனக்க செய்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக தற்போது முழுமையான விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றவாளிகள் அனைவருக்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்து இருந்தார்.

 

Manipur Video Affair Leaders strongly condemned

 

இந்நிலையில் அரசியல் கட்சியினர், மனித உரிமை ஆர்வலர்கள் என பலரும் இச்சம்பவத்திற்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் காங்கிரஸ் கட்சி தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது டுவிட்டரில், “மணிப்பூரில் மனிதநேயம் மரணித்துவிட்டது. மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடியின் மௌனத்தை இந்திய மக்கள் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள். வன்முறை நிகழ்ந்து வரும் நிலையில் மணிப்பூர் மக்களுடன் நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும். மாநிலத்தின் சமூக அமைதியை மோசமான வழியில் மோடி அரசு அழித்துவிட்டது” என தெரிவித்துள்ளார்.

 

Manipur Video Affair Leaders strongly condemned

 

காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் ப.சிதம்பரம் எம்.பி. தனது டுவிட்டரில், “மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தனது மௌனத்தைக் கலைத்துள்ளார். பல்வேறு நாடுகள், மாநிலங்களுக்குச் சென்ற பிரதமர் மோடி, மணிப்பூரை பற்றி சிந்திக்கக்கூட நேரம் ஒதுக்கவில்லை. மணிப்பூரை நினைவுகூர அவரைத் தூண்டியது எது என்று எனக்கு ஆச்சரியமாக உள்ளது. பிரதமர் மோடி செய்ய வேண்டிய முதல் வேலை, மணிப்பூரில் பா.ஜ.க. ஆட்சியைக் கலைத்துவிட்டு குடியரசுத் தலைவர் ஆட்சியை உடனே அமல்படுத்த வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

 

Manipur Video Affair Leaders strongly condemned

 

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனது டுவிட்டர் பதிவில், “மணிப்பூரில் இருந்து வரும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை படங்கள் நெஞ்சை பதற வைக்கின்றன. பெண்களுக்கு எதிரான இந்த கொடூரமான வன்கொடுமை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் அளவு குறைவாக உள்ளது. சமூகத்தில் வன்முறையின் உச்சக்கட்ட சுமையை பெண்களும் குழந்தைகளும் சுமக்க வேண்டியுள்ளது. மணிப்பூரில் அமைதிக்கான முயற்சிகளை முன்னெடுத்துச் செல்லும் போது நாம் அனைவரும் வன்முறைக்கு எதிராக ஓர் அணியில் குரல் எழுப்ப வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

 

நாடாளுமன்ற உறுப்பினரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளருமான  சாகேத் கோகலே, “இரண்டு பெண்கள் பாலியல் துன்புறத்துலுக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்பதை இப்போதுதான் மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் கண்டறிந்திருக்கிறார். அதே சமயம் இந்தச் சம்பவம் நடந்தது மே 4ஆம் தேதி என்றும் அப்போதே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுவிட்டதாகவும் மணிப்பூர் காவல்துறை தெரிவிக்கிறது. இதுபோன்ற அதிமுக்கியமான சட்ட ஒழுங்கு பிரச்சனைகளின் போதுகூட மாநில காவல் தலைமை இயக்குநரும்,  மாநில முதல்வரும் கலந்து பேசிக்கொள்வதில்லையா” என கேள்வி எழுப்பியுள்ளார்.

 

டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மாலிவால் இந்த சம்பவம் குறித்து தெரிவிக்கையில், “மணிப்பூர் வீடியோவைப் பார்த்த பிறகு என்னால் தூங்க முடியவில்லை. கடந்த இரண்டரை மாதங்களுக்கு முன்னர் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆனால், இதுவரை இதில் சம்பந்தப்பட்ட யாரும் கைது செய்யப்படவில்லை. யாரும் கைது செய்யப்படாததை நினைத்து வெட்கப்படுகிறேன். மத்திய அரசு இந்த விவகாரத்தில் அமைதியாக இருக்கிறது. பிரதமர் ஒரு அறிக்கை கூட இது குறித்து வெளியிடவில்லை. மணிப்பூரில்  நிகழ்ந்து வரும் வன்முறையை முடிவுக்குக் கொண்டு வரவும், குற்றஞ்சாட்டப்பட்டவர்கள், சரியான நடவடிக்கை எடுக்காத காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் மணிப்பூர் மாநில முதல்வர் மற்றும் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.