Published on 11/01/2019 | Edited on 11/01/2019
![Global Investors Meet](http://image.nakkheeran.in/cdn/farfuture/nvxLmzRRlwMBpzYwaxXMj_agSRO4-FSQfZImOE27E-0/1547222382/sites/default/files/inline-images/Global%20Investors%20Meet.jpg)
உலக முதலீட்டாளர் மாநாட்டுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கேஸ்கேடு எனர்ஜி பிரைவேட் லிமிடெட் என்ற சிங்கப்பூர் கம்பெனி இந்த வழக்கை தொடர்ந்துள்ளது. உலக முதலீட்டாளர் மாநாடு என்ற பெயரில் பல போலி கம்பெனிகள் தமிழக அரசின் சலுகைகளை பெற்றுச் செல்கிறது என்றும், அதன் உண்மைத்தன்மையை கண்டுபிடிக்க வேண்டும், அதனால் உலக முதலீட்டாளர் மாநாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.