Skip to main content

உடன் படிக்கும் மாணவர்களால் சிறுமிக்கு நேர்ந்த சோகம்! நான்கு சிறுவர்கள் போக்சோவில் கைது! 

Published on 08/07/2022 | Edited on 08/07/2022

 

Four kids arrested under pocso in cuddalore district

 

கடலூர் மாவட்டம், திட்டக்குடி அடுத்த பட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. ஆவினங்குடியில் உள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். அதே பள்ளியில் பயிலும் 12ஆம் வகுப்பு மாணவரை மாணவி காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

 

இந்நிலையில் கடந்த மாதம் 22-ஆம் தேதி தனது காதலனின் பிறந்தநாள் நிகழ்ச்சிக்காக மாணவி சென்றுள்ளார். அதே பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு மாணவியுடன் பத்தாம் வகுப்பு படிக்கும் ஆவினங்குடி மாரியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்த மூன்று மாணவர்களும் சென்றுள்ளனர். அங்கு இந்த மூன்று மாணவர்கள் அந்த மாணவியை போட்டோ மற்றும் வீடியோ எடுத்து உள்ளனர். 

 

பின்னர் பத்தாம் வகுப்பு மாணவியிடம், ‘உனது காதலை பற்றியும், பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது பற்றியும் உனது பெற்றோர்களிடம் சொல்லி விடுவோம். நாங்கள் சொல்வதைக் கேட்டால் சொல்ல மாட்டோம். போட்டோ வீடியோக்களை டெலிட் செய்து விடுகிறோம்’ என மிரட்டி, அச்சிறுமியை ஆவினங்குடியில் உள்ள தங்களது நண்பனின் வீட்டிற்கு அழைத்துச்சென்று மூவரும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அதனை மாணவிக்கு தெரியாமல் அவர்களது போன்களில் பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரம் கடந்த 1ம் தேதி நடந்துள்ளது. 

 

இந்நிலையில், கடந்த 5ம் தேதி மாணவி படிக்கும் பள்ளிக்கு பெண்ணாடம் பகுதியைச் சேர்ந்த ஒரு நபர் வந்து, மாணவர்களின் வீடியோ குறித்து பேசி, மிரட்டி அந்த மாணவியை தாக்கி அத்துமீறலுக்கு முயன்றுள்ளார். அவரிடமிருந்து தப்பித்த சிறுமி தனக்கு நேர்ந்தவற்றை தன் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அந்த மாணவியின் பெற்றோர் ஆவினங்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

 

புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட பத்தாம் வகுப்பு படிக்கின்ற மூன்று சிறுவர்களையும், 12ம் வகுப்பு மாணவனையும் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், அச்சிறுவர்களின் போன்களையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் தலைமறைவாக உள்ள மிரட்டல் நபர் குறித்தும் விசாரித்து வருகின்றனர்.

 

இதுகுறித்து தகவல் அறிந்த கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் ஆவினன்குடி காவல் நிலையத்திற்கு நேரடியாக சென்று வழக்கு நடவடிக்கைகளை ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்ட சிறுமியும், அந்த சிறுவர்களும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அந்தப் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ரீமுஷ்ணம் பெண் கொலை சம்பவம்; காவல்துறை விளக்கம்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Police description on Srimushnam Woman Incident

கடந்த 19ஆம் தேதி முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் வாக்களிக்க சென்ற போது பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதற்கு பா.ஜ.க தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், பெண் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 

இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ளதாவது, ‘கடந்த 19.042024 தேர்தல் நாளன்று மாலை 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயகுமார் (47) என்பவரின் தம்பி ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியா ஆகியோர் ஓட்டு போட்டு விட்டு பக்கிரிமானியம் வாட்டர் டேங்க் அருகே வந்துகொண்டிருந்த போது, அதே ஊரைச் சேர்ந்த கலைமணி, ரவி, பாண்டியன், அறிவுமணி ஆகியோர் ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியாவை ஆபாச வார்த்தைகளால் கேலி கிண்டல் செய்துள்ளனர்.

மேற்படி இரு தரப்பிரனருக்கும் இடையே 2021 ஆம் ஆண்டில் பக்கிரமானியம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டு கலைமணி. ஜெயகுமாரை தாக்கியது தொடர்பாக ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கலைமணி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சூழலில் அன்றைய தினம் ஜெயபிரியாவை கேலி செய்ததை தொடர்ந்து ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் ஆகியோர் ஒருபுறமும் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் ஆகியோர் கலைமணி மீது ஏற்கெனவே போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதான கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காக வாக்கு வாதத்தில் ஈடுபட்டு ஒருவரையொருவர் தக்கிக்கொண்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் கோமதி தலையிட்டு பிரச்னையைத் தடுக்க முயலும் போது, கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டுள்ளது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு மருத்துவமணைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜெயக்குமார் அவரது மகன்கள் ஜெயபிரகாஷ் மற்றும் சதீஷ் குமார் காயம் அடைந்தது காரணமாக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக ஜெயக்குமார் என்பவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

மேற்படி வழக்கின் புலன் விசாரணையிலிருந்து இச்சம்பவத்திற்கு ஜெயசங்கரின் மகளைக் கேலி கிண்டல் செய்ததும் கலைமணிக்கும், ஜெயக்குமார் மற்றும் ஜெயசங்கருக்கும் இருந்த முன்விரோதமே காரணம் என்பது இதுவரையில் விசாரித்த சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்தும் முதல் தகவல் அறிக்கை புகாரின் மூலமும் தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது. இது தவிர வேறு எந்தக் காரணமும் இதுவரை மேற்கொண்ட விசாரணையில் புலப்படவில்லை. மேலும் இவ்வழக்கில் இதுவரையில் ஐந்து எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.