Skip to main content

பெண் குழந்தைகளை தத்தெடுக்கவே இந்திய பெற்றோர் விருப்பம்

Published on 12/02/2019 | Edited on 12/02/2019
 baby


ஆண் குழந்தைகளைவிட பெண் குழந்தைகளை தத்தெடுக்கவே இந்திய பெற்றோர்கள் விரும்புகிறார்கள் என்று மகளிர் மற்றும் குழந்தைகள் அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிய வந்துள்ளது.
 

கடந்த 2015 - 2018 காலக்கட்டத்தில் 11,649 குழந்தைகள் சட்ட ரீதியாக தத்தெடுக்கப்பட்டுள்ளதாகவும், இதில் 4,687 ஆண் குழந்தைகள் எனவும், 6,962 பெண் குழந்தைகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் வெளிநாட்டு பெற்றோர்களால் தத்தெடுக்கப்பட்ட 2,310 குழந்தைகளில் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை 1594ஆக உள்ளது. வெளிநாட்டைச் சேர்ந்த பெற்றோர்களும் பெண் குழந்தைகளை தத்தெடுக்கவே விரும்புகின்றனர். 
 

 

 

சார்ந்த செய்திகள்